Friday, April 20, 2012

Friday, April, 20, 2012

பலவந்தமாக பணம் பெற்ற மூன்று பொலிஸ் கான்ஸ்ரபில்கள் கைது!

தம்பதியினரிடமிருந்து பலவந்தமாக 20 ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொண்ட மூன்று பொலிஸ் கான்ஸ்ரபில்கன் மிரிஹாண விசேட பொலிஸ் விசாரணைக் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற திடலுக்கருகில் கார் ஒன்றுக்குள் இருந்த தம்பதியினரிடமிருந்து குறித்த கான்ஸ்ரபில்கள் பணத்தை பலவந்தமாக பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் மிரிஹாணா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு கான்ஸ்ரபில்களும் ஹோமாகம பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஒரு கான்ஸ்ரபிலும் அடங்குகின்றனர்.

பிரதேசத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளுப்பட்ட விசாரணைகளின்போது சந்தேகநபர்களான மூன்று பொலிஸ் கான்ஸ்ரபில்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive