Tuesday, November 8, 2011

ஜனாதிபதி இன்று மாலைதீவு பயணம்!

Tuesday, November 8, 2011
பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) 17 ஆவது தலைவர்களின் உச்சிமாநாடு மாலைதீவில் எதிர்வரும் 10 ஆம் திகதி வியாழக்கிழமை கோலாகலமாக ஆரம்பமாக உள்ளது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சார்க் நாடுகளின் தலைவர்கள் அங்கு பயணமாவதுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று (08) பயணமாகவிருக்கின்றார்.

மாலைதீவு அத்துநகல் 17 ஆவது சார்க் உச்சி மாநாடு எதிர்வரும் 10, 11 ஆம் திகதிகளில் நடை பெறும். சார்க் அமையத்தில் அங்கம் வகிக் கும் நாடுகளின் பல்தரப்பட்ட கூட்டுறவை மேம்படுத்தும் வகையில் இணைக்கப்பட்ட கட்டிடங்கள் எனும் தொனிப்பொருளில் இந்தமாநாடு இம்றை நடைபெறவிருக்கின்றது.

இந்த மாநாட்டில் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, இலங்கை, மாலைத்தீவு, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பர். மாநாட்டின் நிறைவில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விற்கும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெறவிருப்பதாக தெவிக்கப்படுகின்றது.

மாலைதீவில் ஆரம்பமாகவிருக்கின்ற சார்க் மாநாட்டிற்கு இலங்கை விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவிருப்பதுடன் வெடிபொருட்களை கண்டறிவதற்காக மோப்ப நாய்களும் அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

சார்க் உச்சி மாநாடு நடைபெறும் பிரதான மண்டபம் மற்றும் அமைய நாடுகளின் தலைவர்கள் தங்கியிருக்கின்ற ஹோட்டல்களின் பாதுகாப்பு இலங்கை விசேட அதிரடிப்படையின் நேரடி கண்காணிப்பின் கீழ் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சார்க் உச்சி மாநாடுகளின் 16 ஆவது உச் சிமாநாடு பூட்டானில் 2010 ஆம் ஆண்டும் 15 ஆவது உச்சிமாநாடு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பிலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive