Tuesday, September 20, 2011

இலங்கை இந்திய கடற்படையினர் கூட்டுப் பயிற்சி திருமலையில் ஆரம்பம்!

Tuesday, September 20, 2011
பல பாதுகாப்பு பொறிமுறைகளை மையப்படுத்திய கூட்டுப் போர் பயிற்சிகளில் இலங்கை இந்திய கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். இப்பயிற்சிகள் தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறவுள்ளதுடன் இந்தியாவி ன் 6 போர்க் கப்பல்கள் இலங்கையின் கிழ க்கு கடற்பரப்பிற்கு வந்தடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

இலங்கை கடற்படைக்கு சொந்தமான அனைத்து தாக்குதல் படகுகள் போர்க் கப்பல்கள் மற்றும் விசேட ரோந்துப் படகுகள் மேற்படி கூட்டுப் பயிற்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்திய கடற்படையின் கிழக்கு கடல் பாதுகாப்பு மையத்தின் கட்டளை தளபதி ரியல் அட்மிரல் பிஸ்ட் மேற்படி கூட்டுப் பயிற்சிகளை வழி நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக கடற்படை பேச்சாளர் தொடர்ந்தும் கூறுகையில், இந்திய மற்றும் இலங்கை கடற்படையினர் நேற்று முதல் தொடர்ந்தும் ஐந்து நாட்களாக கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளனர். இப் பயிற்சிகள் திருகோணமலை கடற்பரப்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதற்கு முன்னரும் இந்திய கடற்படையுடன் இலங்கை கடற்படையினர் கூட்டு பயிற்சிகளில் ஈடுபட்ட போதிலும் தற்போது நடைபெறும் பயிற்சியானது சற்றுக் கடினமானதுடன் பரந்தளவிலானதாகும்.

ஆயுதம் மற்றும் இராணுவப் பயிற்சி, புலனாய்வு பயிற்சிகள் கூட்டு ரோந்து நடவடிக்கைகள், தாக்குதல் நடவடிக்கைகள், ஆழ்கடல் மற்றும் கடலடிப் பாதுகாப்பு பொறிமுறைகள் என்பன தொடர்பாக பாரிய பயிற்சிகள் நடைபெற உள்ளது. இக் கூட்டுப் பயிற்சிகளில் கலந்து கொள்ளும் இரு நாட்டின் வீரர்களின் எண்ணிக்கை குறித்து தற்போது கூற முடியாது எனக் கூறினார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive