Tuesday, October 19, 2010

புலிகளுக்கு ஆயுதக்கொள்வனவு செய்ய முயன்றவர் குற்றவாளியானார்!

Tuesday, October 19, 2010
புலிகளுக்காக ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முயற்சித்தமைக்காகக் கைது செய்யப்பட்ட சிங்கப்பூர் பிரஜை ஒருவர் அமெரிக்க நீதிமன்றத்தினால் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.

இதற்கமைய 48 வயதான பால்ராஜ் நாயுடு என்ற சிங்கப்பூர்ப் பிரஜை 15 ஆண்டுச் சிறைத்தண்டனையை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு அமெரிக்கப் பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்ட இரகசிய நடவடிக்கையின் மூலம் குறிப்பிட்ட நபர் உள்ளிட்ட 5 பேர் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

அமெரிக்காவின் தென் பசுபிக் தீவான குவாமில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்

புலிகளுக்காகக் கைக்குண்டு எறியும் ஆயுதங்கள், ஸ்னைப்பர் துப்பாக்கிகள் உட்பட மேலும் பல ஆயுதங்களைக் குறிப்பிட்ட சிங்கப்பூர் பிரஜை கொள்வனவு செய்யத் திட்டமிட்டிருந்தமை அமெரிக்கப் பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்ட விசாரணைகளின்மூலம் தெரியவந்துள்ளது

No comments:

Post a Comment

Followers

Blog Archive