Sunday, October 10, 2010

ஜனாதியின் படம் தொடர்பான விஷமத்தனமான கருத்துக்கு அரசாங்கம் கண்டனம்.

Sunday, October 10, 2010
நியூயோர்க்கில் அண்மையில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் 65 ஆவது பொதுச் சபை மாநாட்டில் கலந்து சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தம்பதியினார் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தம்பதியினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தொடர்பில் சில ஊடகங்கள் வெளியிட்டுள்ள விஷமத்தனமான விமர்சனங்கள் குறித்து அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவார் வெளியிட்டுள்ள அறிக்கையில்-
சர்வதேச மாநாடுகளின் நடைமுறைகள் பற்றித் தெரியாத சில ஊடகங்கள் பொது மக்களை பிழையாக வழிநடத்தும் நோக்கில் இவ்வாறான தவறான செய்திகளை வெளியிட்டுள்ளமை கவலைக்குரியது.

ஐ.நா. மாநாடுகளில் கலந்து கொள்ளும் உலகத் தலைவர்களை அமெரிக்க ஜனாதிபதி வரவேற்று உபசரிப்பது வழமையான ஒரு சம்பிரதாயமாகும்
இம்முறை இச்சந்திப்பு நியூ+யோர்க்கில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் மிக்க இயற்கை நூதன சாலையில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போதுதான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது பாரியாருடன் அமெரிக்க ஜனாதிபதியையூம் அவரது பாரியாரையூம் சந்தித்து கலந்துரையாடினர்.

இலங்கைக்கும் அமெரிக்காவூக்கும் இடையில் நெடுக்கால நட்புறவூ நிலைக்கின்றது. வா;த்தக ரீதியிலான நெருங்கிய தொடர்பும் உள்ளது. இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தொடர்பில் பிழையான செய்திகள் பரப்பப்படுவது கவலைக்குரியது.
வெளிநாட்டுத் தலைவர்களின் தூதுக் குழுவில் உள்ள எந்த படப்பிடிப்பாளாருக்கும் இந்த இடத்தில் படம் எடுக்க அனுமதியில்லை. அங்குள்ள உத்தியோகபூர்வ படப்பிடிப்பாளரே அதற்கான பணியில் ஈடுபடுத்தப்படுவர். அவரிடமிருந்தே ஜனாதிபதியின் படமும் கிடைத்துள்ளது. இது இணையத்தளங்களிலும் வெளியானது.

தமது தீருகுதாளங்களை சர்வதேசம் புரிந்துகொள்ளும் என்பதால் இப்படம் தொடர்பில் பிழையான தகவல்களை எந்த ஊடகமும் ஆங்கில மொழியில் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Followers

Blog Archive