Monday, June 7, 2010

ஜீ. எஸ். பி. சலுகை பெற ஐ. நா. ஒத்துழைக்கும்!

Monday, June 7, 2010
ஜீ. எஸ். பி. சலுகையை இலங்கைக்கு பெற்றுக்கொள்வதற்கு ; ஒத்துழைப்பு வழங்குவதாக ஐக்கிய நாடுகளின்; இலங்கைக்கான பிரதிநிதி நீல்பூனே பிரதமாpடம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதி நீல்பூனே பிரதமர் டி. எம். ஜயரட்னவைப் பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்.

உலக வர்த்தக நடவடிக்கைகளில் போட்டித் தன்மையை மேம்படுத்திக்கொள்வதற்கு இலங்கைக்கு ஜீ. எஸ். பி. சலுகையைப் பெறுவது மிக முக்கியமானதாகும். இந்தச் சலுகை இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்பவர்களுக்கு மட்டுமன்றி இலங்கையின் பொருளாதாரத்திற்கும் பங்களிப்பு வழங்கும்.

இதனைக் கருத்திற் கொண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பு ஜீ. எஸ். பி. சலுகையைப் பெற்றுக் கொள்வதற்கான இணைப்புச் செயற்பாடுகளில் உதவத் தயார் எனவூம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் துரித அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஐ. நா. திருப்தி யடைந்துள்ளது. குறிப்பாக வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார நடவடிக்கைகளில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தி வருவதைக் காண முடிகிறது.

ஐ. நா. அமைப்பு அபிவிருத்திப் பணிகளுக்குத் தொடர்ந்தும் இலங்கைக்கு பூரண ஆதரவை வழங்கும். தற்போது கொழும்பு மொன ராகலை பதுளை மாவட்டங்களின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு உதவி வருகிறது.

தொடர்ந்தும் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உதவி வழங்க எதிர்பார்த்துள்ளது எனவூம் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதமர் டி. எம். ஜயரட்ன் யூத்தம் முடிவூக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் துரித அபிவிருத்திக்கு இந்த ஜீ. எஸ். பி. சலுகை பெரிதும் உறுதுணையாக முடியூம். எனினும் இச் சலுகையைப் பெறுவதற்காக சர்வதேசத்திற்குப் பின்னால் செல்வதற்கு அரசாங்கம் தயாரில்லை எனவூம் தெரிவித்துள்ளார்,

No comments:

Post a Comment

Followers

Blog Archive