Wednesday, June 2, 2010

மீள்குடியேற்றத்தின் முன்னேற்றம் திருப்தி தருகின்றது!

Wednesday, 02 June 2010
அரசாங்கத்தின் மீள்குடியேற்ற திட்டத்தின் முன்னேற்றம் திருப்தியளிப்பதாக இந் தியாவின் ‘டைம்ஸ் ஒப் இந்தியா’ பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முகாம்களில் இருந்த 3 இலட்சம் பேரின் எண்ணிக்கை இப்போது 30 ஆயிரமாக குறைந்துள்ளது. இவ்வருட இறுதிக்குள் பெரும்பாலான இடங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு விடும். அப்போது முகாம்களில் உள்ள அனைவருமே தமது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டு விடுவார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்த போட்டியின் போது குறிப்பிட்டார்.

பேட்டியின் முழு விபரம் வருமாறு:

கே: புலிகள் தோற்கடிக்கப்பட்டு ஒரு வருடமாகிறது. அந்த இயக்கம் ஏன் தோல்வியடைந்தது என்று நினைக்கியர்கள்?

ப: இயக்கத்துக்குள் என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியூம். அது தோல்வியடைந் ததற்கான காரணம் தௌpவாகவே உள்ளது. அது தன்னைத்தான் அழித்துக்கொள்ளும் பாதையிலேயே பயணித்தது. தனி ஈழம் என்ற அவர்களது கோரிக்கை எப்போதுமே கேள்விக்கு அப்பாற்பட்டதாகவே இருந்தது.

நாம் அதனை அனுமதித்திருக்க முடியாது. எனினும் முக்கியமாக அவர்களது முத்திரையாக மாறி யிருந்த வன்முறையூம் இரத்தக் களரியூம் நிறுத்தப்பட வேண்டியி ருந்தது. இந்த நிலை தொடரக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்த முயற்சி செய்தோம். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். இதனையடுத்து தீர்க்கமான முடிவை எடுப்பதை தவிர வேறு வழிகள் எதுவூம் இருக்கவில்லை.

கே: புலிகளின் அத்தியாயம் முடிந்துவிட்டது என்று கருதுகியர்களா?

ப: நான் அவ்வாறு சொல்லமாட்டேன். புலிகளின் அனுதாபிகள் அவர்களது உறங்கும் உறுப்பினர்கள் இன்னும் இருக்கின்றனர். அவர்கள் பல்வேறு நாடுகளில் நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். எனவே அவர்களது அத்தியாயம் இன்னும் முடியவில்லை.

கே: இறுதிக்கட்ட போரில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சில அறிக்கைகள் கூறுகின்றன.

ப: இது சரியானது என நான் நினைக்கவில்லை. இலங்கை இராணுவத்தினர் ஒழுக்கமானவர் கள் என்பதுடன் பொதுமக்கள் கொல்லப்படக்கூடாது என்பதில் நாம் மிகவூம் கவனமாக இருந்தோம். பிரபாகரனின் தந்தை தாய் மற்றும் அவரது குழுவினர் முழுவதுமாக எமது முகாம்களில் இருந்தனர். அவர்களுக்கு தீங்கிழைக்கப்பட வில்லை என்றால் பொதுமக்கள் இலக்கு வைக்கப்பட்டதாக கூறும் கேள்விக்கு இடமில்லையே? நாம் ஏன் பொதுமக்களை கொல்ல வேண்டும். சொல்லப் போனால் அவர்கள் எங்கள் மக்கள்தானே.

கே: உள்நாட்டில் வடக்கில் இடம்பெயர்ந்த சுமார் 3 லட்சம் தமிழ் மக்கள் அனைவரையூம் 180 நாட்களுக்குள் மீள்குடி யேற்றும் திட்டம் பற்றி உறுதியளித்திருந்தீர்கள் அந்த உறுதிமொழி நிறைவேற்றப்பட்டதா?

ப: அந்த முன்னேற்த்தையிட்டு நான் மிகவூம் திருப்தியடைகிறேன். முகாம்களில் இருந்த 3லட்சம் பேரின் எண்ணிக்கை தற்போது 30 ஆயிரமாக குறைந்துள்ளது. இவ்வருட இறுதிக்குள் பெரும் பாலான இடங்களில் கண்ணி வெடிகளை எம்மால் அகற்றிவிட முடியூம். அதன்பின் அனைவரையூம் அவர்களது இடங்களில் மீள்குடியமர்ந்த முடியூம்.

கே: புலிகளுக்கு எதிரான யூத்தத்தில் இந்தியாவிட மிருந்து உங்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைத்தனவா?

ப: ஆம் இந்தியாவின் உதவி கிடைத்தது. நாம் அதனை வெகுவாக பாராட்டுகிறௌம்.

கே: அது எவ்வாறான உதவிஇ தார் மீக உதவியா அல்லது இராணுவ உதவியா?

ப: இரண்டும் (சிரிக்கிறார்) எமக்கு இரண்டுமே தேவையாக இருந்தன.

கே: உங்களுக்கு ஆயூதங்கள் விற்பனை செய்வதற்கு சீனர்கள் முன்வரவில்லையா?

ப: ஆயூதங்கள் வாங்குவது என்பது ஒரு இராணுவ தீர்மானம். நாம் ஒரு யூத்தத்தை செய்து கொண்டிருந்தோம். சாத்தியமானது எதுவோ அதனை இந்தியாவிலிருந்து பெற்றுக் கொண்டோம். மற்றவை சீனாஇ பாகிஸ்தான்இ ஐரோப்பிய யூ+னியன்இ இஸ்ரேல்இ ஏன் அமெரிக்காவிடம் இருந்து கூட பெற்றுக்கொண்டோம். அது ஒரு சுலபமான விதி. எமக்கு எவரிடம் இருந்து விரைவாக பெறமுடிந்ததோ அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டோம்.

கே: சீனாவூடன் இலங்கையின் உறவூகள் நெருங்கி வருவதை யிட்டு இந்தியாவின் அக்கறை அதிகரித்துள்ளது அத்துடன் இந்து சமுத்திரத்தில் கால் ஊன்றிக் கொள்ள சீனா இதனை பயன் படுத்திக்கொள்வதாகவூம் கூறப் படுகிறது. இலங்கை-இந்திய உறவூகளுக்கு இது எவ்வாறான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும்?

ப: அவ்வாறு கூறுவதற்கு எந்த அடிப்படையூம் இல்லை. இந்தியாவூம் இலங்கையூம் வெறுமனே நண்பர்கள் மட்டுமல்ல என்று நாம் எப்போதுமே கூறிவந்துள்ளேன். நாம் உறவினர்களைப் போல் அத்துடன் எமது நட்புறவூ இன்று மிகவூம் உயர்ந்த நிலையில் உள்ளது. நாம் இந்தியாவை எதிர்பார்த்துள்ளோம். இந்தியாவூக்கும் எம்மை பார்க்கும் கடமை உள்ளது. பெரியண்ணனைப் போன்று அல்ல. ஒரு வகையில் கூறப்போனால் தனது சிறிய சகோதரியைப்போல.

கே: அண்மையில் சில இந்திய கிரிக்கெட் வீரர்களை உங்கள் தனிப்பட்ட வைத்தியர் டாக்டர் வைட்டிடம் சிகிச்சை பெறுவதற்கு அழைத்திருந்தீர்கள். இது இந்திய - இலங்கை கூட்டுறவூக்கு ஒரு முன்மாதிரியானதா?

ப: ஆம். அதுபோன்றே கூறப்போனால் சச்சின் டெண்டுல்கர் டாக்டர் வைட்டின் சிகிச்சையினால் பெரிதும் நன்மையடைந்தார். அது பற்றி மற்றவர்களுக்கும் சிபாரிசு செய்துள்ளார். அவர்களுக்கு உதவ முடியூமென்றால் ஏன் உதவக்கூடாது?

கே: ஜூன் எட்டாம் திகதி நீங்கள் இந்தியாவூக்கு விஜயம் செய்கியர்கள். கடந்த இரண்டு வருடங்களாக சிக்கல் நிலையில் இருந்து வரும் இந்திய-இலங்கை பொருளாதார பங்காளி உடன்படிக்கை இந்த விஜயத்தின் போது புத்துயிர் பெறுவதை நாம் காணமுடியூமா?

ப: நாம் பல விடயங் களைப் பற்றி விவாதிப் பதற்கு எதிர்பார்த்துள் ளோம். முன்னோடி விடயங்களில் பொருளா தார அபிவிருத்தி முக்கிய இடத்தில் உள்ளது.

கே: மாநில அரசாங்கங் களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பான இந்தியாவின் தவறில் இருந்து நிறைய தெரிந்து கொண்டதாகவூம் கூறியிருந்தீர்கள். அது இலங்கையில் மாகாண அரசாங்களுக்கு அதிகார பரவலாக்கலை வழங்கும் 13 ஆம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு ஒரு காரணமா?

ப: இந்தியா ஒரு மிகப் பெரிய நாடு. இலங்கையூடன் அதனை ஒப்பிட முடியாது. பொலிஸ் அதிகாரத்தை மாகாணங்களுக்கு வழங்க முடியாது என்றுதான் நான் எப்போதுமே கூறியூள்ளேன். இதில் பல விடயங்கள் உள்ளன.

மும்பாய் தாக்குதலின் போது என்ன நடந்தது என்று பார்த்தீர்களா. கொமாண்டோக்களை கொண்டுவர எவ்வளவூ நேரம் பிடித்தது. பல்வேறு அனுமதிகளை பெற்றே இதனை நிறைவேற்ற வேண்டியிருந்தது. இதனால்தான் பொலிஸ் அதிகாரம் மத்திய அரசிடமே இருக்க வேண்டுமென்று நான் கருதுகிறேன்.

கே: உங்கள் ஆட்சி ஒரு குடும்ப ஆட்சியாக இருப்பதாக கூறுகின்றனரே?

ப: அதற்கு நான் என்ன செய்வது அவர்களை மக்கள் தெரிவூ செய்கின்றனரே. அண்மையில் எமது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு மக்கள் அமோக வெற்றியை வழங்கியிருந்தார்கள். எனவே அது மக்களின் தீர்ப்பு. எப்போது அவர்கள் தேவையில்லை என்று மக்கள் நினைப்பார்களோ அப்போது அவர்களை விரட்டியடிப்பார்கள்.

கே: அலுவலகத்தில் கடுமையான வேலைக்கு பின்னர் எப்படி நீங்கள் ஓய்வெடுப்பீர்கள்? திரைப்படங்கள் பார்ப்பீர்களா?

ப: ஆம்இ நாம் மாலைகளில் ஹிந்தி திரைப்படங்களை பார்ப்பேன்.

கே: நீங்கள் அண்மையில் பார்த்த படம் என்ன?

ப: சாருக்கானின் ‘மைநேம் இஸ் கான்’ அது மேற்குலகில் முஸ்லிம்களுக்கு எதிரான பாரபட்சத்தை மிகவூம் சிறப்பாக எடுத்துக்காட்டியது. அந்தப் படத்தை பார்த்தபின் எம் மீது மனித உரிமை மீறல் பற்றி குற்றம் சாட்டுவோர். அவர்களது நாடுகளில் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை நான் நினைத்துப் பார்த்தது ஞாபகத்துக்கு வருகிறது,

No comments:

Post a Comment

Followers

Blog Archive