Friday, April 2, 2010

FRIDAY, APRIL 02, 2010

தேர்தல் தொடர்பில் நியாயமான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு

தேர்தல் தொடர்பில் நியாயமான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரியவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பான விசாரணைகளின் போது உச்ச நீதிமன்றம் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளது.
தேர்தல் தொடர்பில் சரியான வழிகாட்டுதல்கள் முன்வைக்கப்பட வேண்டுமெனக் கோரி கரு ஜயசூரிய இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
தேர்தல் ஆணையாளர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையாளர் நேரத்திற்கு நேரம் வெளியிட்டு வரும் கருத்துக்கள் மக்கள் மத்தியில் நகைப்புக்கு உரியதாக மாறியுள்ளதென கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
சகல மக்களினதும் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தேர்தல் நியாயமானதும் சுதந்திரமானதுமாக நடைபெறுவதற்கு தேர்தல் ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive