விருப்பு வாக்கு சண்டை சச்சரவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உள்ளூராட்சி சபைகள் சட்டத்தில் விரைவில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுத் தெரிவித்தார். எதிரணியினரின் பொய்ப் பிரசாரங்க ளையும், சேறுபூசும் நடவடிக்கைகளையும் நம்பாது நாட்டு மக்கள் தொடராக எமக்கு ஆணை வழங்கி வருகின்றார்கள். மக்களின் ஆணையை மதித்து அதனைத் தொடர்ந்து பேணிப் பாதுகாப்பதுடன் மக்களின் தேவைகளை நிறைவேற்றி வைக்க வேண்டியதும் உங்களது பொறுப்பு என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறினார். உள்ளூராட்சி சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் வெற்றி பெற்ற உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களும் பிரதித் தலைவர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில் நேற்றுக் காலை 10.07 மணிக்கு சுபநேரத்தில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 205 உள்ளூராட்சி சபைகளை ஆளும் ஐ. ம. சு. மு. யும், அதன் கூட்டுக் கட்சிகளான ஸ்ரீல. மு. கா. 4 உள்ளூராட்சி சபைகளையும், தேசிய காங்கிரஸ் 2 சபைகளையும், மலையக மக்கள் முன்னணி ஒரு உள்ளூராட்சி சபையுமாக மொத்தம் 212 உள்ளூராட்சி சபைகளை ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இவற்றின் தலைவர்களும் பிரதித் தலைவர்களும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இவ்வைபவத்தில் தொடர்ந்தும் உரையாற்றுகையில், உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களாகவும், பிரதித் தலைவர்களாகவும் இப்போது சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளுகின்ற உங்களுக்கு நான் முதலில் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். மக்களுக்காக சேவை செய்யப் புறப்படுகின்ற நீங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும், எவற்றை நினைவில் வைத்து செயற்பட வேண்டும் என்பன தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் நாயகமும் இங்கு தெளிவுபடுத்தினார்கள். நாட்டு மக்கள் சுமார் இரு தசாப்தங்களாக எமக்குத் தொடராக ஆணை வழங்கி வருகின்றார்கள். அதுவும் எதிர்க்கட்சிகளின் பொய்களுக்கும் புரட்டுகளுக்கும் மத்தியில் மக்கள் எமக்கு ஆணை வழங்குகின்றார்கள். எதிரணியினர் எம் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்களை சிறிதளவேனும் நம்ப நாட்டு மக்கள் தயாரில்லை. அவை அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுகள். இதனை நன்குணர்ந்து தான் மக்கள் எமக்கு தொடர்ந்து ஆணை வழங்குகின்றார்கள். ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்க்கட்சியினர் மட்டும் தான் எனக்கு சேறு பூசினர். ஆனால் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்ட நீங்கள் எதிர்க்கட்சிகளது சேறு பூசுதல்களுக்கு முகம் கொடுத்தீர்கள். அதே போல் விருப்புவாக்குக்காக உட்கட்சிக்குள்ளும் சேறுபூசல்களை எதிர்கொண்டீர்கள். அவ்வாறான சேறு பூசல்களுக்கும் அப்பால் மக்கள் எம்மீதும் ஐ. ம. சு. மு. மீதும், உங்கள் மீதும் நம்பிக்கை வைத்துத்தான் ஆணை வழங்கியுள்ளார்கள். ஐ. ம. சு. மு. யை அமோக வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். ஆகவே மக்களின் ஆணையை மதித்து நடக்க வேண்டியது எமது பொறுப்பாகும். அவர்களது எதிர்பார்ப்புக்களையும் தேவைகளையும் நிறைவேற்றி வைக்க வேண்டியது உங்களது கடமையாகும். எதிரணியினர் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது அரசைக் கவிழ்க்கவே மக்களிடம் ஆணை கோரினர். இந்தக் காலப் பகுதியில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரித்திருந்தன. இவ்வாறான சூழ்நிலையினால் தான் நாம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொண்டோம். இத் தேர்தலில் எதிரணியினரின் அதிக உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும் எனச் சிலர் எதிர்பார்த்தனர். ஆனால் நாட்டு மக்கள் வயிற்றைப் பார்க்கவில்லை. எதிரணியினர் கூற்றுக்களை நம்பவில்லை. மாறாக அவர்கள் எதிர்பார்த்திராத அமோக வெற்றியை எமக்குத் தந்திருக்கின்றார்கள். மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்திருப்பதன் வெளிப்பாடு தான் இது. இந்தத் தேர்தலில் எமக்குக் கிடைக்கும் வெற்றி தாம் அரசுக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கும் பிரசாரங்களுக்கு வலு சேர்க்கும் என்றும் யுத்த நீதிமன்றத்திற்குச் செல்ல முடியும் என்றும் எதிரணியினர் எதிர்பார்த்தனர். அவர்களது எதிர்பார்ப்புகளை நாட்டு மக்கள் படுதோல்வி அடையச் செய்துள்ளனர். நாட்டு மக்கள் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும், ஐ. ம. சு. மு. யையும், உங்களையும் நம்பித்தான் இத் தேர்தலில் ஆணை வழங்கியுள்ளார்கள். நீங்கள் இந்த ஆணையை மதித்து நடக்க வேண்டும். மக்கள் மத்தியில் வாழ்பவர்கள் நீங்கள். கிராமத்தையும் நகரத்தையும் துரிதமாக அபிவிருத்தி செய்ய வேண்டியது உங்களது பொறுப்பே. ஜனாதிபதி, அரசாங்கம், மாகாண சபை, மற்றும் மக்கள் என சகல தரப்பினரும் உங்களுடன் இருக்கின்றனர். ஆகவே கிராமத்தையும், நகரத்தையும் துரிதமாக அபிவிருத்தி செய்வது கஷ்டமான காரியமாக இருக்காது. நாம் பதவிக்கு வந்த பின்னர் ஒவ்வொரு கிராமத்தையும் அபிவிருத்தி செய்யவென முப்பது மில்லியன் ரூபாவை ஒதுக்கினோம். ஆனால் ஒருசில உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களைத் தவிர ஏனைய வர்கள் இந்நிதியைப் பயன்படுத்திக் கொள்ள வில்லை. இந்த நிலை நீடிக்கக் கூடாது. மக்கள் குப்பை கூளங்களுக்கு மத்தியில் வாழ விரும்புபவர்கள் அல்லர். அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டியது உங்களது பொறுப்பாகும். அதேநேரம் நீங்கள் எப்போதும் முன்னுதாரணம் மிக்கவர்களாக செயற்பட வேண்டும். அப்போதுதான் நீங்கள் கூறுவதையும் மக்கள் ஏற்று செயற்படுவார்கள். விருப்பு வாக்குக்காக சண்டை, சச்சரவில் ஈடுபடுவதை இந்த சந்தர்ப்பத்தோடு கைவிடுங்கள். இதன் பின்னரும் அது நீடிக்கக் கூடாது. சகலரையும் ஒனறிணைத்துக் கொண்டு உங்களது கிராமத்தையும், நகரத்தையும் மேம்படுத்தும் பணியை ஆரம்பியுங்கள். நாம் விரைவில் உள்ளூராட்சி சபைத் திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்குக் கொண்டு வந்து நிறைவேற்றுவோம். அதன் பின்னர் விருப்பு வாக்கு சண்டையில் நீங்கள் ஈடுபட நேராது. இச்சட்டம் நிறைவேற்றப் பட்ட பின்னர் உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகம் சட்டத்திடம் இருக்கும். தலைவர்களுக்கும், உப தலைவர்களுக்கும், பொறப்புக்கள் சட்டப்படியே வழங்கப்படும். தற்போதைய ஏற்பாடுகளின்படி உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களுக்கு நிறைவேற்று அதிகாரம் வழங்கப் பட்டிருக்கிறது. காசோலைகளுக்குக் கையெழுத்திடும் அதிகாரமும் அவர்களிடமே உள்ளது. இது சில சமயம் உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களை சிறை செல்லக்கூட வழி செய்துவிடக் கூடிய அச்சம் நிலவுகிறது. இந்த விடயத்திலும் திருத்தம் கொண்டு வர உத்தேசித்துள்ளோம். காசோலைகளுக்கு அதிகாரிகள் கையெழுத்திடும் முறை கொண்டுவரப்படும். அது நிர்வாகத்தை வலுப்படுத்தவும் வழி செய்யும். இதேநேரம் உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களுக்கும், கட்சியின் தொகுதி மட்ட, மாவட்ட மட்ட அமைப்பாளர்களுக்கிடையில் நெருக்கமான உறவு இருப்பது அவசியம். இதனைப் பேணவேண்டியதும் உள்ளூராட்சி சபைத் தலைவர்கள், உபதலைவர்களின் பொறுப்பாகும். அத்தோடு கட்சியோடும் நெருங்கிச் செயற்படுவதும் அவசியம். இதனூடாக எமது கட்சியைப் பிரதேச மட்டத்தில் மேலும் வலுப்படுத்த முடியும். இந்த விடயத்திலும் ஒவ்வொருவரும் கூடிய கவனம் செலுத்துவது அவசியம் என்றார். இவ்வைபவத்தில் பிரதமர் டி. எம். ஜயரத்ன, அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, சுசில் பிரேமஜயந்த், தினேஷ் குணவர்தன, ஏ. எல். எம். அதாவுல்லா, ரிஷாட் பதியுத்தீன், பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண, கெஹலிய ரம்புக்வெல்ல அனுர பிரியதர்ஷன யாப்பா, டொக்டர் ராஜித சேனாரட்ன, ஏ. எச். எம். பெளஸி, நிமல் சிறிபால டி. சில்வா, பிரதியமைச்சர்கள் முத்து சிவலிங்கம், பiர் சேகுதாவூத், மேல் மாகாண ஆளுநர் எல். அலவி மெளலானா, பாராளுமன்ற உறுப்பினர்கள் வி. இராதாகிருஷ்ணன், ஏ. எச். எம். அஸ்வர், ஹுனைஸ்பாரூக் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
Wednesday, March 30, 2011
நான் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளேன். அந்தக் காட்சிகள் நம்ப முடியாதனவையாக இருந்தன - இயன் பொத்தம்!
யாழ் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக வசந்தி அரசரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான நியமனக் கடிதம் இன்று யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தருக்கான தேர்தல் நடைபெற்றிருந்த பொழுதும் அடுத்த துணைவேந்தரை தெரிவு செய்யாததினால் தொடர்ந்தும் துணைவேந்தராக பேராசிரியர் என்.சண்முகலங்கன் பணியாற்றினார். துணைவேந்தர் தெரிவில் தொடர்ச்சியாக இழுபறிநிலை நடந்தது. இதனிடையில் தன்னை துணைவேந்தராக ஜனாதிபதி நியமித்தாக போராசியர் இரட்ணஜீவன்ஹீல் தெரிவித்திருந்தார். அந்தச் செய்தில் உண்மையில்லை என்றும் தொடர்ந்தும் என். சண்முகலிங்கனே துணைவேந்தர் என்றும் உத்தியோக பூர்வ தகவல்கள் தெரிவித்தன. இதனிடையில் இன்றைய தினம் (29.03.2011) மருத்துவப் பேராசிரியர் செல்வி வசந்தி அரசரத்தினம் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை பல்கலைக்கழக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அவர் நாளை முதல் கடமை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேராசிரியர் வசந்தி அரசரத்தினத்தை துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என தொடர்ச்சியாக அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்து வந்தார். அவரது கோரிக்கைக்கு ஏற்பவே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேராசிரியர் இரட்ணஜீவன்ஹீலை துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் ஜனாதிபதிக்கு நெருக்கமான அங்கஜன் இராமநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் ரங்கா போன்றவர்களும் கோரிக்கை விடுத்து வந்தார்கள் என ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று வருடங்களாக யாழ் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் என். சண்முகலிங்கன் யாழ் பல்கலைக்கழகத்தின் ஏழாவது துணைவேந்தராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் யாழ் பல்கலைக்கழக எட்டாவது துணைவேந்தராக வசந்தி அரசரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.
Sunday, March 20, 2011
உள்ளுராட்சி மூலம் மலையகத்தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட்டுள்ளது - பி.திகாம்பரம்!
Sunday, March 20, 2011தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்திலும் மலையக மக்கள் முன்னணியுடனான கூட்டுத்தொடருமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தேர்தல் முடிவுகள் வெளியாகியதைத் தொடர்ந்து நுவரெலியாவில் இடம் பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசிய பொதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்தக்கூட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் தலைவி சாந்தினி தேவி சந்திரசேகரன் மலையக மக்கள் முன்னணியின் அரசியற்பிரிவு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வி. இராதாகிருஸ்ணன் உட்பட வெற்றிப்பெற்ற உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட பி.திகாம்பரம் மலையகத்தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தினைத் தக்க வைத்துக்கொள்வதற்காக இந்தத்தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிட்டதாகவும் இதன் மூலமாக பாரிய வெற்றி கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மலையகத்தில் சிறுபான்மை கட்சிகளின் ஒத்துழைப்பின்றி பெரும்பான்மைக்கட்சிகள் வெற்றிப்பெற முடியாது என்பதை இந்தத்தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளது. மலையக மக்கள் முன்னணியும் தொழிலாளர் தேசிய சங்கமும் இணைந்து நுவரெலியா பிரதேச சபையைக் கைப்பற்றியுள்ளமை வரலாற்றுச சாதனையாகும்.
நுவரெலியா பிரதேச சபைத்தேர்தலில் மக்கள் வாக்களிப்பதைத் தடுக்க முற்பட்ட போதும் மக்கள் துணிந்து வாக்களித்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். இந்தத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தைச் சேர்ந்த 9 உறுப்பினர்கள் வெற்றிப்பெற்றுள்ளனர். இவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறுயள்ளார்.
அகற்றப்படும் உயர் பாதுகாப்பு வலயங்கள்!
Sunday, March 20, 2011யுத்த காலத்தின் பொழுது பல்வேறு துன்பதுயரங்களையும் அழிவுகளையும் தாங்கிக்கொண்ட யாழ். மக்கள் இன்று சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கியுள்ளனர். யுத்த காலத்தின் பொழுது நாட்டின் பாதுகாப்பிற்காக அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட பிரதேசத்திலிருந்து படிப்படியாக இராணுவத்தினர் விலக்கிக் கொள்ளப்பட்டு பொது மக்களுடைய நிலங்கள் அவர்களிடமே கையளிக்கப்படுகின்றன.
1995ஆம் ஆண்டு முதல் இராணுவப் பயன்பாட்டில் வைக்கப்பட்டிருந்த சுபாஸ் ஹோட்டல் 16 வருடங்களின் பின்பு அதன் உரிமையாளரிடம் கடந்த 17ஆம் திகதியன்று கையளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு அதியுயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டதால், தமது காணி பூமிகளை இழந்து நீண்டகாலமாக அவதிப்படும் மக்களுக்கு எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையை ஊட்டியுள்ளது.
“நாட்டின் பாதுகாப்பிற்காக 1995ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்திற்குப் பின்னர் நேற்று வரை சுபாஸ் ஹோட்டல் இராணுவத்தினரின் வசமிருந்தது. ஆனால் இன்று எமது ஹோட்டல் எம்மிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இது எனக்குச் சந்தோசமளிப்பதாகவுள்ளது” என யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதியிடம் சுபாஸ் ஹோட்டலைப் பெற்றுக்கொள்ளும் பொழுது சுபாஸ் ஹோட்டல் உரிமையாளர் எஸ். ஹரிகரன் தெரிவித்துள்ளார்.
சுபாஸ் ஹோட்டல் ஒப்படைக்கப்பட்டதுபோல் விக்டோறியா வீதியும் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல் குடாநாட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு யுத்த காலத்தின் பொழுது தடைசெய்யப்பட்டிருந்த பல வீதிகளும் திறந்துவிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் வீடுகளும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு பொது மக்களின் இயல்பான நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீண்ட கால யுத்தம், பொருளாதாரத் தடை, பல்வேறு வகையான தடைச் சட்டங்கள், அப்பொழுது குடாநாட்டின் அதிகாரத்தினைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த புலிகளின் அடக்கு முறைகள், எதிர்பாராத யுத்த அவலங்கள் போன்ற பல்வேறு துன்ப துயரங்களால் அவல வாழ்க்கை வாழ்ந்த இவர்கள் தமது பூர்வீக நிலங்களைவிட்டு இடம்பெயர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
பாதுகாப்பு வலயங்கள் அறிவிக்கப்பட்டு மக்களை இடம்பெயர் செய்த பொழுதும், அவர்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்து கொடுக்கப்படவில்லை என்பது கடந்த யுத்த காலத்தின் பொழுது சுட்டிக்காட்டப்பட்ட விடயமாகவிருந்தது. இதனைத் தற்பொழுதுள்ள அரசாங்கம் உடனடியாகவே நிறைவு செய்து வருவது பொதுமக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீதுள்ள நம்பிக்கையை வலுவடையச் செய்துள்ளது.
வலிகாமத்திலும், வடமராட்சி கிழக்குப் பகுதியிலும் பல்வேறு கிராமங்களில் மக்கள் மீள்குடியமர அனும திக்கப்பட்டுள்ளனர். ஏனைய பகுதிகளிலும் மக்கள் மீள்குடியமர உடனடியாக அனுமதியளிப்பதற்கு கண்ணிவெடிகள் தடையாகவுள்ளன. இதனை விரைவாக அகற்றிவரும் இராணுவத்தினர் அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் மக்கள் மீள்குடியமரக் கூடிய அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்து வருகின்றனர். இதன் முன்னேற்பாட்டு நடிவடிக்கையாக மின்சாரமற்ற பல பகுதிகளுக்கு மின்சாரம் வழங்குவதற்கான இணைப்புகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இதேபோல் இராணுவப் பயன்பாட்டிலுள்ள எந்த ஒரு பாதுகாப்பு வலயப்பகுதிகளிலும் பொதுமக்கள் ஆலய வழிபாடுகளில் ஈடுபட அநுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்விடயம் இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்திற்குட்பட்ட மதச் சுதந்திரம் சகல மக்களுக்கும் கிடைக்கக்கூடியதான ஏற்பாடுகளை இராணுவத்தினர் செய்து வருகின்றமையைக் காட்டுகிறது. தமது பகுதிகளுக்கு குடியிருக்கச் செல்ல முடியாத இம்மக்கள் ஆலய வழிபாடுகளுக்காக இப்பகுதிகளுக்குச் சென்று தமது குல தெய்வங்களினை வழிபட்டு வருகின்றபொழுது யுத்த அவலங்களால் ஏற்பட்ட பாதிப்புக்களை மறந்து இயல்பு வாழ்வுக்குத் திரும்புகின்றனர். இம்மக்களின் ஆன்மீக வாழ்வுக்கு வழிவகை செய்து கொடுக்கப்பட்டது போன்று சொந்த இடங்களில் மீள் குடியமரவும் அநுமதிக்கப்படவேண்டும் என்பது வடபுலத்திலுள்ள அனைத்து மக்களினதும் வேண்டுகோளாகவுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் அவர்களின் அழிவோடு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டாலும் நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இலங்கை இராணுவத்தினரிடமிருப்பதை மறந்து தமிழ் இனவாதக் கட்சிகள் குடாநாட்டின் உண்மை நிலையினை திரிவுபடுத்தித் தகவல்களை வெளியிட்டு வருகின்றன. பாதுகாப்பு வலயங்கள் தளர்த்தப்பட்டு பொது மக்களிடம் அவ்விடங்கள் ஒப்படைக்கப்படுவதால், இந்தக் கட்சிகளைச் சேர்ந்தோரும் நலன்களை அநுபவித்து வருகின்ற பொழுதும் இராணுவத்திற்கெதிரான பரப்புரைகளினைச் செய்வதில் தீவிர ஆர்வமுடையவர்களாக செயற்பட்டு தமது கட்சி நலன்களைப் பாதுகாப்பதில் குறியாகவுள்ளனர்.
குடாநாட்டைப் பொறுத்தவரையும் மொத்த நிலப்பரப்பில் 30%மான நிலப்பகுதி அதியுயர் பாதுகாப்புவலயமாக அறிவிக்கப்பட்டுள்ள பொழுதும், இந்த நிலப்பரப்பிலிருந்து படிப்படியாக இராணுவத்தினர் வெளியேறி பொது இடங்களில் முகாமமைத்து வருகின்றனர். இது குறித்து தவராகப் பிரசாரம் செய்ய வேண்டாம் என இராணுவத் தளபதியே அறிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு என்பதும், கடந்த 30 வருடங்களாக யுத்தத்துடன் வாழ்ந்த சமூகத்தில் உள்ள விஷமிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்பதும் முக்கியமான ஒரு விடயமாகவே பார்க்கப்படவேண்டும்.
பயங்கரவாதத்தினை முற்றாக ஒழிப்பதற்காக நன்கு திட்டமிடப்பட்ட நிலையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களை உடனடியாக அகற்றி எம்மை மீள் குடியமர்த்துமாறு கேட்பது எமக்கே ஆபத்தாக முடியும் என்பதே பொதுமக்கள் நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும். வெடி பொருட்கள் அகற்றப்பட்டால்தான் மனித நடமாட்டம் சாத்தியம் என்பதையும், யுத்தம் நடைபெற்ற பகுதிகளில் வெடி பொருட்களை அகற்றுவது இலகுவான காரியமில்லை என்பதையும் பொதுமக்கள் நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும்.
பாதுகாப்பு வலயங்களாக இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்ட பகுதிகளும் பொது மக்களின் நடமாட்டத்திற்குத் தடை செய்யப்பட்ட பகுதிகளும் குடாநாட்டுக்கே மட்டும் உரியவை அல்ல. யுத்த காலத்தின் பொழுது இவை நாடுபூராகவும் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றிலிருந்து இராணுவத்தினர் விலகுவது பொது மக்களுக்கு நன்மைதரும் விடயமாகவே அமைகிறது.
குடாநாட்டினைப் பொறுத்தவரையும் பலர் இந்த பாதுகாப்பு வலயங்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டாண்டு 8!ளிதி!8 வாழ்ந்து வந்த பூர்வீக நிலங்கள் அதியுயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டதால் கடந்த 20 வருடங்களாக இடம்பெயர்ந்து வாழ்ந்துவரும் இம்மக்களின் அடிப்படை வாழ்வியல் உரிமைகளுக்கு மதிப்புக்கொடுத்து சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படவேண்டும் என்பது இம்மக்களின் நீண்டகாலக் கனவாகவுள்ளது. இதனையே இங்குள்ள சமூக நலன் விரும்பிகளும் புத்திஜீவிகளும் விரும்புகின்றனர்.
மக்களின் மன உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுப்பதுபோன்று இராணுவத்தினரும் இம் மக்களின் பூர்வீக நிலங்களை அவர்களிடமே ஒப்படைத்துவருகின்றனர். கைக்குழந்தையாக இடம்பெயர்ந்த ஒருவர் தனது கைக்குழந்தையுடன் சொந்த நிலத்திற்குச் சென்று முதல் முதலாக தமது ஊரைப் பார்க்கும் நிகழ்வு ஆழ் மனதை உறைய வைக்கும் ஒன்றாக உள்ள பொழுதும், இப்பொழுதாவது இந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு, மக்களைச் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவது மகிழ்வுதரும் ஒரு நிகழ்வாகவே அனைவராலும் பார்க்கப்படுகிறது.
Saturday, March 12, 2011
தமிழகத்தில் புலிகள் அமைப்பின் இரகசிய பயிற்சி முகாம் இயங்குவதாக வெளியிடப்பட்ட கருத்தை இந்தியா நிராகரிப்பு!
Saturday, March 12, 2011தமிழகத்தில் புலிகள் அமைப்பின் இகரசிய பயிற்சி முகாம்கள் இயங்குவதாக இலங்கை அரசாங்கம் வெளியிட்ட கருத்துக்களை இந்திய மத்திய அரசு நிராகரித்துள்ளது.
புலிகள் அமைப்பின் முகாம்கள் உள்ளதாக இலங்கை பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்களை திட்டவட்டமாக நிராகரிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விஷ்ணு பிரகாஷ் கூறியுள்ளார்.
ஊடகவியாளர் சந்திப்பொன்றில் எழுப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தை இந்திய அரசின் கவனத்திற்கு கொண்டுவரவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள இந்த கருத்துக்கள் துரதிஷ்டவசமானலை எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இத்தனைய ஊகங்கள் மற்றும் உறுதி செய்யப்படாத தகவல்களை வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோருவதாகவும் விஷ்ணு பிரகாஷ் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை தமிழகத்தில் புலிகளின் முகாம்கள் செயற்படுவதற்கு எந்தவித ஆதராங்களுக்கும் இல்லையென தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் லத்திக்கா சரண் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Wednesday, March 9, 2011
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்று மன்னாரில் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ.
Wednesday, March 09, 2011ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்று மன்னாரில் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கலந்துகொண்டார்.
மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திர சிறி, அமைச்சர்கலான றிஸாட் பதியுதீன், மில்றோய் பேணாண்டோ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கலான உவைஸ் பாரூக், உள்ளிட்டோரும்; கலந்து கொண்டனர்.
சகல அரச திணைக்கலங்களில் இருந்தும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மன்னார் மாவட்டத்தில் உள்ளுராட்சி சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.
சர்வதேச பெண்கள் தினம்:சவால்களை எதிர்கொண்டு முன் செல்ல சில கருத்துக்கள் - சிறிதரன். (பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்).
Wednesday, March 09, 2011சர்வதேச பெண்கள் தினம் உலகளாவிய அளவில் நினைவு கூரப்படும் நிலையில் இலங்கையில் பெண்கள் நிலையையும் ,பால் சமத்துவமின்மையையும் எண்ணிப்பாhர்க்க வேண்டும். இலங்கை யுத்தத்தில் மரணமடைந்தவர்கள் போக வடக்கு கிழக்கில் பெரும்பான்மையான குடும்பங்கள் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களாகவே இருக்கின்றன.
இவர்கள் பல்வேறு சவால்களை எதிர் நோக்குகிறார்கள் .பாலியல் தக்குதல்கள் வீட்டிலும் வெளியிலும் இவற்றையும் தாண்டி வீட்டின் பொருளாதாரம், பிள்ளைகளின் கல்வி இன்னோரன்ன விடயங்களுக்கான தேவைகளுக்காககவும் அலைய வேண்டியருக்கிறது
சிறையிலுள்ள பிள்ளைகளின் விடுலைக்காக சிறப்பு முகாகளுக்கும் சிறைகளுக்கும் இவர்களே பெரும்பாலும் செல்ல வேண்டியிருக்கிறது. வீட்டைப்புனரமைப்பது ,நிவாரணம் மற்றும் கடன்களுக்காக இவர்களே அலைகிறார்கள். குடும்பத்திற்கு வருமானத்தைப் பெறுவதற்காக அன்றாட உழைப்பிலும் இவர்களே ஈடுபட வேண்டியிருக்கிறது.
கடந்த 30 வருட வன்முறை மயப்பட்ட சூழல் ,அதற்குப் பிந்திய சூழலில் கூடுதலாகப் பாதிக்கபட்டவர்கள் பெண்களே. வீடுகள் தனிமைத்துவங்கள் இழக்கப்பட்டதால் அசௌகரியங்களை எதிர்நோக்குபவர்கள் பெண்களே.
தனிமை, சமூகப்பாதுகாப்பின்மை என்பன எமது சமூகத்தில் மிக மோசமான பிரச்சனைகளாகும். மத்திய கிழக்கிலும், மேற்காசியாவிலும் வேலைக்குச் சென்ற பெண்கள் அனுபவிக்கும் துன்பங்கள் நாளாந்தச் செய்திகள் ஆகிவிட்டன.
சவுதி அரேபியாவில் மரணதண்டனையை எதிர் நோக்கி நிற்கும் மூதூர் சபீனா நாபிக் சிறுமியாக கைதுசெய்யப்பட்டு செய்யாத குற்றத்திற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு பல வருடங்களாக சிறை வாசம் அனுபவித்து வருகிறார். சவுதி அரேபியாவின் மானிடதர்மங்களற்ற அந்தக நீதிதிதுறையோ, அரசோ உலக மனிதாபிமானக் குரலுக்கோ அல்லது பகுத்தறிவு, உண்மைக்கோ செவிசாய்ப்பதாக இல்லை. மாத்தறையைச் சேர்ந்த இன்னொரு பெண்ணுகோ சிலுவை சுமந்த யேசுவிற்கு நடந்த கொடுமைகளை விட அதிகமாக கொடுமைகள் நடந்துள்ளன.
அவருக்கு வேலை வழங்கியவன் அவரின் உடல் முழுவதும் இரும்பாணிகளைச் செலுத்தியுள்ளான். பாலியல் வன்முறை சித்திரவதைகளுக்குள்ளான பெண்களும், பலசநதர்ப்பங்களில் கொல்லபட்ட பெண்களின் சவப்பெட்டிகளும் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்திறங்குவது சர்வ சாதாரணமாகி வருகிறது. அரசியல் சண்டியர்கள் பெண்கள் மீது நடத்தும் தூற்றுதல் அவதூறுகள் வன்முறைகள் என்பவற்றுக்கும் குறைவில்லை.
ஊடகத்துறையைச் சேர்ந்த பெண் ஒருவர் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதல் பலருக்கு ஞாபகமிருக்கும். அரசியலிலும் சினிமாவிலும் பிரபலமான பெண் ஒருவர் அண்மையில் உயிராத்தை விளைவிக்கும் விதமாக அவரின் தலையில் அவரது கணவரால் தாக்கப்பட்டுள்ளார்.
யுத்த சூழ்நிலையில் திருமணம் செய்ய நிர்பந்திக்கபட்டவர்கள் பலாத்காரமாக பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் பெண்களும் சிறுமிகளுமாகவே காணப்படுகின்றனர். சில சிறுமிகள் தமது அவலத்தைப்பற்றி பங்கர்கள் காப்பரண்களிலிருந்து எழுதிய கடிதங்கள் மன அதிர்ச்சியை ஏற்படுத்துபவை.
1930 களில் சர்வசன வாக்குரிமை வழங்கப்பெற்ற நாடாக இலங்கை இருப்பினும் தீர்மானம் எடுப்பதற்கான நிலைகளில் அரசியலில் பெண்களின் பங்காற்றல் குறைவாகவே இருக்கிறது. வவுனியா யாழப்;பாணம் கிளிநொச்சி மாவட்டசெயலாளர்களாக பெண்களே இருக்கிறார்கள்
எனினும், இலங்கையில் ஒட்டு மொத்த சமூக நிலைகளிலும் ஆணாதிக்க நிலைகளில் பெண்களுக்கெதிரான வன்முறைகளில் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டு விடவில்லை. பின்நோக்கிய நிலையே காணப்படுகிறது. வன்முறைகள் அதிகரித்துள்ளன.
யுத்தம் தேசிய விடுதலை இயக்கம் என்பவற்றால் பெண்களின் நிலையில் மாறுதல் ஏதும் ஏற்பட்டு விடவில்லை. தேசிய விடுதலை இயக்கம் பாசிசமாக உருத்திரிபடைந்தபோது ஜனநாயக இயத்தினுள் செயற்பட்ட பெண்கள் கொல்லபட்டதோடு தெருவுக்கு விரட்டப்பட்டார்கள். அவர்கள் கால வெளியில் உருவானகறுப்பு வெற்றிடத்தில் இழுக்கபட்டு உருவழிந்து போனார்கள.; தனது யுத்த யந்திரத்தேவைக்காக பாசிசம் பெண்களை தற்கொலை குண்டுதாரிகளாகவும் ,துப்பாகிதாரிகளாகவும் அணிதிரட்டியது.. பல சந்தர்பங்களில் பலவந்தம் செய்தது- ஈவிரக்கமற்ற கட்டாய ஆட் சேர்ப்பு முறையாக. இதன் விபரித விளைவு பேரினவாதம் பாலியல் பலாத்காரம், ஆட்கடத்தல் உட்பட பெண்ளுக்கெதிரான வன்முறை கட்டவிழ்த்து விட்டது.
தவிர எமது சமூகத்தில நிலவும் தீண்டாமைக் கொடுமைகளுடன் குறிப்பாக கிராமியத்தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் பேரினவாத ஒடுக்குமுறைகளுடன் மேலதிக சுமைகளைச் சுமந்தார்கள். யுத்தத்திலும் இந்த விழிம்பு நிலை பெண்களே பெருமளவுக்கு ஈடுபடுத்தப்பட்டார்கள். பெருமளவற்கு பிள்ளைகளின் இழப்பையும், வன்முறையையும் சந்தித்தார்கள். இது முழு வடக்குகிழக்கிற்கும் பொதுவானது.
தவிர எல்லையோரக்கிராமங்களில் வாழ்ந்த பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் அடிக்கடி வன்முறை தாக்குதல்களை எதிர் கொண்டார்கள். பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளானார்கள்;. இவர்கள் அனுபவித்த துன்பங்கள் பற்றிய யதார்த்த சினிமாக்கள் வெளிவந்துள்ளன.
காணாமல் போதல் யுத்தத்தில் பிள்ளைகளைப் பலிகொடுத்தல் என்பன தமிழ் சிங்கள சமூங்களிடையே பாரிய அளவில் நடந்துள்ளது. உடுத்த துணியுடன் விரட்டப்பட்ட வடபகுதி முஸ்லீம் பெண்கள் புத்தளத்திலும் அனுரதபுரம் போன்ற பகுதிகளிலும் அனுபவித்த துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
இந்த 3 வருடங்களும் நிகழ்ந்த இடம்பெயர்வு வங்க கடலை கடந்து அகதிகளாகச் செல்கையில் இறந்தவர்கள் அதிகமாக பெணகளும் குழந்தைகளுமே. சுனாமி அனர்த்தம், கிழக்கு- தெற்கு- வடக்கு கரையோரங்களிலும் இந்தோனேசியா இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகளிலும் பெருமளவிற்கு பெண்களையே காவு கொண்டது. எமது கரையோரச்சமூகங்களில் பாரிய அளவில் வெற்றிடம் ஒன்றைத்தோற்றுவித்துள்ளது.
மூதூர் மட்டக்களப்பு வன்னி இடம்பெயர்வுகளில் அகதி முகாம்களில் பெண்கள் அனுபவித்த துன்பங்கள் அளிவிடமுடியாதவை.
அவர்கள் யுத்தத்;தின் போதும் இடம்பெயர்வுகளின்போதும், சிறை சித்திரவதை முகாம்களிலும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத துன்பங்களை அனுபவித்தார்கள்.
யுத்தம் ஓய்ந்த பின்னர் புதிய வடிவங்களில் பெண்கள் மீதான வன்முறைகள் உருவாகியிருக்கின்றன. வன்முறையின் சாயல்கள் எமது சமூகத்திலிருந்து ஓய்ந்துவிடவில்லை. தற்போது நிகழும் ஆட்கடத்தல் காணாமல் போதலிலும் பெண்களே பெருமளவில் இலக்காகிறாhர்கள.;
திருமணம் என்பது மனிதர்களின் வாழ்க்கையில் நிகழும் முக்கிய நிகழ்ச்சி .ஆனால் ஆணாதிக்க நிலையை வலியுறுத்தும் சடங்காசாரங்கள் இன்று பெரும் எடுப்பிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.
பூப்புனித நீராட்டு விழா என்று சிறப்பு அழைப்பிதழ்கள் அச்சடிக்கபடுகின்றன. மனித உடலில் நிகழும் இயற்கை மாறுதல்களுக்கு விழா எடுப்பவர்கள் உலகத்தமிழர். கேட்க சற்று வெட்கமாகத்தான் இருக்கிறது.
எமது சமூகத்தின் தாரதம்மியத்தை உணர்த்துவதாக இவை அமைந்துள்ளன. ஒரு கடைந்தெடுத்த பிற்போக்கு உணர்வுநிலைமட்டம் காணப்படுகிறது.
எட்டுத்திக்கும் சென்றிருந்தாலும் பாமரராய் ,விலங்குகளாய் வாழ்கிறோம். கல்வி. தொழில் ஆகிய விடயங்களில் ஆண்களை விஞ்சிய நிலையில் பெண்கள் இருந்தாலும் சடங்காசாரங்கள் சம்பிருதாயங்கள் அவர்கள் மீது அடிமை உடைமைப்பிரகடனம் செய்கின்றன. வாழ்க்கையின் ஏணிப்படிகளில் அவர்கள் மேலே வருவதற்கு அவர்கள் பல சவால்களைச் சந்திக்கவேண்டியருக்கிறது.
தகவல்தொழில் நுட்பம் மல்டி மீடியாக்கள் போன்ற வசதிகள் பெண்களை ஆபாசமாகச் சித்தரிப்பதிலும் பிளக் மெயில்;;; செய்வதிலும் பயன் படுகின்றன. குறிப்பாக தமிழ் சூழலில் மெகா தொடர்களும், சினிமாவும் பெருமளவுக்கு பெண்களுக்கெதிரான வன்முறைகளை நியாயப்படுத்துகின்றன. அடங்கிப்போதல் .பொறுமை என்ற மந்திர உச்சாடனங்களைச் செய்கின்றன. எத்தகைய வன்முறைகளையெல்லாம் பெண்களுக் கெதிராக பிரயோகிக்கலாம் என்ற புதிய புதிய கண்டு பிடிப்புக்களை எல்லாம் செய்கின்றன.. பெண்களைப்பற்றிய ஒரு பாசிச மன நிலையுடன் இவை செயற்படுகின்றன. ஆனால் தமிழ் பெண்களில் ஒரு பகுதியினர்; உலகளாவிய அளவில் இந்த மெகாத்தொடர் போதையில் கிறங்கி கிடக்கிறார்கள்.
ஒருசில விதிவிலக்குள் இருக்கின்றன. அங்காடித்தெரு திரைப்படம் நகர்ப்புற ஜவுளிக்கடைகளில் வேலை செய்யும் பெண்கள் அனுபவிக்கும் துன்பங்கள் பற்றிய அதிர்ச்சியான செய்தியை எமக்களிக்கிறது. பெரும்பாலானவை அடி. உதை, படுகொலை, சகித்துப்போ என்பது போல்தான் இருக்கின்றன. பாதகம் செய்பவரை கண்டால் நீ பயங்கொள்ளலாகாது பாப்பா மோதி மிதித்துவிடு பாப்பா அவர் முகத்தில் உமிழந்து விடு பாப்பா என்பது போல் விடயங்கள் இல்லை.
யதார்தத்தை பிரதிபலிப்பதாகக் கூறி இந்த தொடர் தயாரிப்பாளர்கள் முடிவற்ற வன்முறையை சித்தரிக்கிறார்கள். இதுவே சமூக நியதி என மனதில் பதிய வைக்கப்படுகிறது. பெண்களைப்போகப் பொருளாக சித்தரிக்கும் போக்கு உலகமயமாக்கலுடன் முன்னெப்போதும் கண்டிராத அளவிற்கு மோசமடைந்துள்ளது
தமிழில் மட்டரகமான ஆண் மேலாதிக்கம் கொண்ட இரட்டை அர்த்தப்பாடல்கள் ,குரூர நகைச்சுவைகள் அதிகரித்துள்ளன. உயிரியல் தொழில் நுட்பத்தை வைத்து பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா என கருவிலேயே தீர்மானித்து அழித்து விடும் போக்குள் அதிகரித்துள்ளன.
ராஜம் கிருஸ்ணனின் மண்ணகத்துப் பூந்தளிர்கள் நாவலில் வரும் கள்ளிப்பால் பருக்குவது, மூக்கினுள் நெல்மணியைச் செலுத்துல் எல்லாம் மாறி பெண் குழந்தைகளை கருவறுக்கும் செயற்பாடுகள அதிகரித்துள்ளன. தமிழ் சமூகத்தில் பெண்களின் பண்பாட்டு புரட்சி ஒன்று தேவைப்படுகிறது. அதுவும் ஒரு சமூக இயக்கமாக முன்னெடுத்துச் செல்லப்படவேண்டும்.
இந்த விடயத்தல் தமிழர்கள் மத்தியில் நிலவும் ஆதிக்க கருத்துக்கள் மிகவும் கயமைத்தனம் நிறைந்ததும் நயவஞ்சகத்தனமானது என்பதிலும் எதுவித ஐயமும் இல்லை. ஆதனால் தான் வரலாற்று வெளிப்பாடாக தந்தை பெரியார் தோன்றினார். தந்தை பெரியாரின் முனைப்பான போராட்டம் சாதியமைப்பு பெண்ணடிமைத்தனம் இவற்றுக்கெதிராகவே.
திராவிடப்பேரியக்கம் இருந்த சூழலில் தமிழகத்தில் ஜனரஞ்சக சினிமாவில் எங்காவது பெரியாரின் சுயமரியாதை திருமணத்தைப் பார்த்திருக்கி;றீர்களா? பட்டிதொட்டியெல்லாம் பெரியார் இயக்கம் நடத்தியே அதனைச்செய்யமுடியவில்லையே.
பெண்கள் பலதுறைகளில் சவால்களுக்கு மத்தியில் முன்னேறி இருந்தாலும் .பெண்கள் இரண்டாம் பட்சமானவர்கள் அவர்களை இரட்சிக்க கதாநாயகர்கள் தேவை என்றெல்லவா வலியுறுத்தப்படுகிறது. பெண்களின் சுதந்திரதிற்கான இயக்கம் ஒரு தொடர் போராட்டமாகும்.
பொருளாதார சமத்தும் கல்வி என்பன இங்கு முக்கியமான விடயங்கள். இன்று பெருமளவிற்கு ஊதியமில்லாத உழைப்பாளர்கள் கீழைத்தேசத்துப் பெண்களே. குடும்ப உழைப்பிற்காக பெண்களுக்கு எதுவும் தரப்படுவதில்லை.வன்முறையற்ற சமூக ச+ழல், சட்டங்களில் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கெதிராக மாற்றம் கொண்டு வருதல், மரபுரீதியான சம்பிருதாயங்கள் தழைகளிலிருந்து விடுதலை சமூகப்பாதுகாப்பு கல்வி உத்தரவாதம் என்பன இங்கு முக்கியமான விடயங்கள்.
இந்தியாவில் பெண்களுக்குமேல் ஆண்கள் புரியும் அத்துமீறல்களுக்கெதிராக அண்மையி;ல் கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மகளிர் காவல்நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இலங்கையிலும் இத்தகைய அணுகுமுறைகள் தேவைப்படுகின்றன.
தமிழ் அரசியல் அரங்கைப்பொறுத்தவரை அதில் எத்தனை பெண்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை வைத்தே தமிழ் அரசியலின் தார்மீகத்தனத்தை நாம் புரிந்து கொள்ளமுடியும்
மிகவும் வளாச்சியடைந்ததாகச் சொல்லப்படும் நாடுகளில் கூட மிகவும் விகாரமான முறையில் பெண்களி மீது வன்முறை பிரயோகிக்கப்படுவதை நாம் பார்க்க முடியும். அமெரிக்காவில் பாடசாலை சிறுமியை 20 வருடங்களுக்கு முன்னர் கடத்தி பாலியல் பலாத்காரம் புரிந்ததையும் ,இவ்வளவு காலமும் அச்சிறுமியை வீட்டினுள்ளே சிறைவைத்திருந்ததையும,; பொலிசார் அண்மையில் தான் அப்பெண்ணை மீட்ட செய்தியையும் இது போன்ற பல வக்கிர குரூர வன்முறைகளையும் கேள்விப்பட்டிருக்றோம்.
மத ஒழுக்கத்தின பெயரில் மரபுகளின் பெயரில் ஒழுக்கத்ததை மீறியதாக பெண்கள் மீது பலர் பலாத்காரம் புரிந்தசெய்திகளையும் நிர்வாண ஊர்வலங்கள் நடத்தபட்ட செய்தியையும் நாம் அடிக்கடி கேளிவிப்படுகிறோம் இவ்வாறு பாதிக்கப்படும் பெண்களுக் உடனடியாக சட்டம் ஆதரவாக இல்லை சமூகமும் ஆதரவாக இல்லை. பாகிஸ்தானில் இத்தகைய சம்பவங்களை அடிக்கடி ளே;விப்படுகிறோம்.
அன்றாடம் லட்சக்கணக்கான பெண்கள் உலகளாவிய அளவில் துன்புறுத்ல்களுக்குளாகிறார்கள. அங்சாங்சுஜி மியன்மார் மக்களின் மனங்கலந்த ஜனநாயக இயக்கத்தின் தலைவி. மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்கள் உலகமே எதிர்த்துநின்றபோதும் அவருக்கெதிரான அச்சுறுத்தல்களை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
எனினும் ஒருகாலத்தில் இடதுசாரி இயக்கத்தின் கெரில்லாப் போராட்டக்காரர் இராணுவ சிறைகளில் சித்திரவதைகளை அனுபவித்தவர் டில்மா பிறேசிலின் ஜனாதிபதியாகியிருக்கிறார்.
ஒடுக்கபட்ட சமூகப் பின் புலத்தில் வந்த மீரா குமார் இந்தியாவின் சபாநாயகர் ஆகியிருக்கிறார். ஆனால் உலகில் பால் நிலை சமத்துவம் வேண்டி நெடுந்தூரப் பயணமொன்றை மேற்கொள்ளவேண்டியருக்கிறது.
பெண்களுக்கு 30 வீத நாடாளுமனற் ஒதுகீடு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இலங்கையில் 2வீதமான பெண்கள கூட பாராளுமன்றத்தில் இல்லை என்பது வேறு கதை. சமூக பொளாதார வாழ்விலும் அரசியலிலும் சம பங்குதாரர்கள் ஆவதற்கான அடிப்படை மாற்றங்கள் நிகழ்ந்தாகவேண்டும். ஆபிரிக்க ,ஆரேபிய நாடுகளில் நிகழும் கிளர்ச்சிகளில் குறிப்பாக எகிப்தில் நடத்தப்பட்ட ஜனநாயகப் பேரியக்கத்தில் பெண்களின் பங்கு முக்கியமானது.
அந்த எழுச்சிகள் மத அடிப்படைவாதத்தை கொண்டிருக்கவில்லை.பெங்களுரில் இரவு உணவு விடுதிக்குச் சென்ற பெண்கள் தாக்கப்பட்டதை கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த காட்டுமிராண்டித்தனத்தை இந்தியாவின் அனைத்து ஊடகங்களுமே கண்டித்தன.
பிரேமனந்தா வகையறா போலிச்சாமியார்களின் பெண்களை இழிவு படுத்தும் சித்து விளையாட்டுகளுக்கெதிராகவும் பாரிய இயக்கங்கள் நடத்தப்படுகின்றன.
இலங்கையின் ஆடைத்தொழில் துறையில் ஈடுபட்டிருக்கும் குறைந்தகூலி பெறும் பெண்தொழிலாளர் பட்டாளத்தின் நிலையும் ,மலையகத் தோட்டத் தொழிலாள பெண்களின் நிலையும் இங்கு குறிப்பிட்டேயாகவேண்டும். இவர்களின் வாழ்க்கை தரம் இலங்கையின் சராசரி வாழ்க்கை தரத்தை விட கீழானது. வீடு, தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் கல்வியின்மை, போசாக்கன்மை என்பன இங்கு பாரிய பிரச்னைகள்
தொழிற்சாலைகளில் வங்கிகளில் ஏன் ஆஸ்பத்திரிகளில் ஏன் போக்குவரத்தில் பெண்கள்மீதான பாலியல் சார்ந்த துஸ்பிரயோகங்கள் அதிகமாகவே நடைபெறுகின்றன. இதனை பல சந்தர்பங்களில் நேரிடையாகவே அவதானிக்கமுடியும்
இதை விட யாழ்ப்பாணத்தல் அரச அலுவலகங்கிளில் வேலைசெய்யும் பெண்கள் சேலை அணியவேண்டும் என்று அரசாஙக அதிபர் சொன்னதாக ஒரு செய்தி இதற்கு முன்னர் நல்லூர் கோயிலுக்குவரும் பெண்கள் சேலை அணிந்து வரவேண்டும் என்று மாநகரசபை முதல்வரால் அறிவுறுத்தப்பட்டு அது ரத்துச்செய்யப்பட்டது. இவ்வாறான கருத்துக்கள் ஒருவருடைய உடைத்தேர்வு தொடர்பான ஜனநாயகப் பிரச்சனையாகும.; தென்னாசியாவில் 30 வீத்ததிற்கு மேற்பட்டபெண்கள் சுரி;தார் அணிகிறார்கள் அவர்களை நிந்தனை செய்வதுமாகும் .
ஆண்களின் அத்துமீறலுக்கு காரணம் பெண்களின் நடைஉடைபாவனைகளே என்ற பத்தாம் பசலி ஆணாதிக்க எண்ணப்பாடு இன்றளவில் எமது சமூகத்தில் நின்று நிலவுகிறது. பெண்கள் தொடர்பாக எமது சிந்தனன முறையிலும் ,சமூகச்செயற்பாடுகளிலும் மாற்றங்கள் தேவை.
அதற்கு சுதந்திரமான பிரக்ஞையுள்ள பெண்கள் இயக்கங்கள் தோன்ற வேண்டும். .இப்போது சில பெண்கள் நலன்சார்ந்த அரசார்பற்ற அமைப்புகள் இயங்குகின்றன. அவை மாத்திரம் போதாது. வரலாற்றின் தேவை இது
Sunday, March 6, 2011
TNAயில் நான் இருந்திருந்தால் புலிகளின் தலைவர் பிரபாகரனை காப்பற்றி இருப்பேன் -புலிகளின் எடுபிடி- ஆனந்தசங்கரி..
Sunday, March 6, 2011தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இருந்திருந்தால் தான் புலிகளின் தலைவர் பிரபாகரனை காப்பற்றி இருப்பேன் என்று தமிழர் விடுதலைக்கூட்டனியின் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
மன்னார் மாவட்டம் முசலி பிரதேச சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் பொதுக்கூட்டம் நேற்று சனிக்கிழமை(05-03-11)அரிப்பு பொது மைதானத்தில் இடம் பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
நான் என்றும் புலிகளுக்கு எதிரானவன் இல்லை. அதில் இணைந்திருந்தவர்கள் எமது பிள்ளைகள்.எமது பிள்ளைகளை அழிக்க வேண்டாம் என்று மட்டும் தான் கூறிவருகின்றேன்.தற்போது கே.பி என்பவர் அரசாங்கத்திற்கு எடுபிடியாகவுள்ளார்.
மக்களுக்கு தொண்டு செய்து வந்த பல தொண்டு அமைப்புக்களை அரசாங்கம் தடை செய்துள்ளது. ஆனால் கே.பி தொண்டு நிறுவனமொன்றை நடத்தி அரசாங்கத்திற்கு எடுபிடியாக செயற்பட்டு வருகின்றார். இது எந்த வகையில் ஞாயம் என கேட்டார்.
ஆகவே முசலி வாழ் மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றும் அரசாங்கத்தினாலும் அமைச்சர்களினாலும் கொடுக்கும் பிச்சை பொருட்களை வேண்ட வேண்டாம் என்றும் அதனை தூக்கி எறிந்து விடுங்கள் என தெரிவித்தார்.
மேற்படி கூட்டத்திற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞரனித்தலைவர் சிவகரன்,சட்டத்தரணி சிறாயிவா ஆகியோரும் முசலி பிரதேச சபையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தொடர்ச்சியாக இருந்திருந்தால் பிரபாகரனை காப்பாற்றியிருப்பேன் - ஆனந்தசங்கரி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியில் தாம் தொடர்ச்சியாக அங்கம் வகித்திருந்தால் புலிகளின் தலைவர் பிரபாகரனை காப்பாற்றியிருப்பேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வேலுப்பிள்ளைப் பிரகாரனை தாம் விரோதியாக பார்க்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தவறான வழியில் சென்ற பிரபாகரனை சரியான பாதைக்கு திசை திருப்பும் முயற்சியில் தாம் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தை ஒருபோதும் வெற்றிகொள்ள முடியாது என தாம் பிரபாகரனுக்கு கடிதம் ஊடாக அறிவித்திருந்ததாக ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
தமிழீழக் கனவினால் இளம் உயிர்கள் காவு கொள்ளப்படுவதாக தாம் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடுதிரும்பிய இலங்கையர் கவலை 232 இலங்கையர் நாடு திரும்பினர்.
Sunday, March 6, 2011லிபியாவில் சிக்கியிருந்த இலங்கையர்களுள் மேலும் 138 பேர் விசேட விமானமொன்றின் மூலம் நேற்று இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யூ. எல். ரக விமானத்தில் நேற்று பகல் 138 பேரும் நாடு திரும்பினர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பிற்கமைய இந்த விசேட விமானத்தை வெளிவிவகார அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது. திரிபோலியிலுள்ள இலங்கைத் தூதர் சுதந்த கனேகம ஆராச்சி இவர்களை திரிபோலி விமான நிலையத்திற்கு அழைத்துவந்து வழியனுப்பிவைத்தார்.
இதேவேளை லிபியாவில் எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலையொன்றில் தொழில்புரிந்த மேலும் 20 பேரும் நாடு திரும்பினர். நேற்றுக் காலை 8.35 மணிக்கு எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானமொன்றில் இலங்கை வந்தனர்.
ஏற்கனவே 104 பேர் இலங்கை வந்திருந்தனர். இவர்களுடன் இதுவரை 232 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். மேலும் விசேட விமானம் மூலம் நாளை லிபியாவிலிருந்து இலங்கையர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டு வருகிறது.
Thursday, March 3, 2011
பயங்கரவாதத்தினாலேயே நாடு அழிவடைந்தது- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
Thursday, March 3, 2011எமது நாடு யுத்தத்தினால் அன்றி பயங்கரவாதத்தினாலேயே அழிவடைந்தது. யுத்தத்தினால் அழிந்த நாடு என்று எமது நாட்டை அடையாளப்படுத்துவது நாட்டிற்கு செய்யும் அவமதிப்பாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
பயங்கரவாதத்தினால் அழிக்கப்பட்ட நாட்டை கட்டியெழுப்பவே இன்று முப்படையினரும் ஈடுபட்டு வருகின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மனிதாபிமான நடவடிக்கை மூலம் பெற்ற வெற்றியை விற்றுப் பிழைக்க நாம் ஒரு போதும் தயாராக இல்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.
இலங்கை விமானப் படையின் 60ஆவது ஆண்டு பூர்த் தியை முன் னிட்டு கோலா கலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரதான வைபவம் இரத்மலானை விமானப் படைத் தளத்தில் நேற்றுக் காலை இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்:-
அதிசக்தி வாய்ந்த தொழில்நுட்ப வசதிகள், திறமையான விமானிகளைக் கொண்ட எமது விமானப்படை மிக சக்தி வாய்ந்ததாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. 1983ஆம் ஆண்டு உலகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த பயங்கரவாதத்திற்கு எதிராக போராட ஆரம்பித்தது. தாய்நாட்டுக்காக பாரிய பங்களிப்புக்களை செய்துள்ளது.
மனிதாபிமான நடவடிக்கையின் போது பயங்கரவாதிகள் மக்கள் மத்தியில் முகாமிட்டு இருந்தனர். இந்நிலையில் மக்களுக்கு எந்தவித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் தாக்குதல் நடத்தும் பொறுப்பு விமானப் படையினரிடம் இருந்தது.
இந்த சந்தர்ப்பத்தில் தான் மனித உரிமைகள் மீறல் தொடர்பாக உலகம் முழுவதும் பிரசாரம் செய்யப் பட்டது. அந்த நிலையில் தான் விமானப்படையினர் தமது நடவடிக்கைகளை பொது மக்களுக்கு பாதிப்புக்கள் இன்றி வெற்றிகரமாக முடித்தனர் என்றார்.“நான் நினைக்கின்றேன் உலகிலேயே எந்த ஒரு விமானப்படையினருக்கும் ஏற்பட்டிராத ஒரு இக்கட்டான நிலை எமது விமானப் படையினருக்கு ஏற்பட்டிருந்தது.
விமானப்படையின் இலக்கு தவறுதலாக பொதுமக்கள் வாழும் பிரதேசத்தில் விழுந்து அவர்கள் கொல்லப்பட்டிருந்தால் இப்போதைய நிலைமையை விட எமது நாட்டின் வரலாறு வேறாக எழுதப்பட்டிருக்கும். இவ்வாறான கஷ்டமான சூழநிலையை வெற்றிகொள்ள முடியாமல் இருந்திருந்தால் நாட்டை மீட்பதற்கான யுத்தத்தில் பாரிய தடை ஏற்பட்டிருக்கும்.
உலகிலேயே பாரதூரமான நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலகத்தில் சிறந்த விமானப்படை என்று சொல்லும் படையினரால் ஏற்படும் அழிவுகள் எதனையும் எமது விமானப் படையினர் தமது மனிதாபிமான நடவடிக்கையின் போது செய்யவில்லை என்பதை நான் பெருமையுடன் சொல்லிக்கொள்கின்றேன். யாழ். கோட்டையை மீட்டுக்கொண்டது முதல் உணவு எடுத்துச் செல்லல், படையினரை ஏற்றிச் செல்லல், படையினரை மீட்டெடுத்தல், உயிர் பாதுகாப்பு வழங்குதல் போன்ற விமானப் படையின் பல்வேறு நடவடிக்கைகள் பாராட்டத் தக்கன.
கடலில், தரையில் செல்ல முடியாத சந்தர்ப்பங்களில் எல்லாம் சென்று முப்படையினருக்கு தொடர்புகளை ஏற்படுத்தி நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்கு, பயங்கரவாதிகளை கட்டுப்படுத்தி செய்ய முடியாத பல வீரதீர செயல்களை விமானப்படை செய்தது. இதன் பெருமை அதனை சாரும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் எந்த சந்தர்ப்பத்திலும் கெளரவமாக நினைவு கூரத்தக்க ஒரு படையாக விமானப் படை கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. அதேவேளை, இலங்கைக்கு ஏற்ற வகையில் ஆளில்லா விமானங்களை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சுதந்திரமான இலங்கையில் மனிதாபிமானத்தை எப்போதும் வலுப்படுத்தும் விதத்திலேயே செயல்பட வேண்டும் என்று நான் இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.
60 ஆண்டு காலத்தில் உங்களுக்கு ஒரு சிறந்த தலைமைத்துவங்கள் கிடைத்துள்ளன. நாம் பெற்ற வெற்றிகளை நினைவு கூர வேண்டாம் என்றும், இவ்வாறான வெற்றிகளை கொண்டாடுவதற்கான நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என்றும் சிலர் கூறிக்கொண்டு இருக்கின்றார்கள்.
நாம் யுத்தத்தை விலை பேசிக்கொண்டிரு க்கின்றோம் என்றும் அவர்கள் கூறிக்கொண்டிருக்கின்றார்கள். சிலர் இவை தொடர்பாக நினைவு கூர வேண்டாம் என்றும் கூறுகிறார்கள் அன்று நாட்டை மீட்பதற்காக போராடிய போது அதற்கு எதிராக செயற்பட்டவர்கள் தான் இவ்வாறு கூறுகிறார்கள்.
உலகிலேயே மிகவும் மோசமான, பலம் வாய்ந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும்போது அதனை குழப்ப முயற்சித்தார்கள். உலகம் முழுவதும் தவறான பிரசாரங்களை கொண்டு சென்றார்கள் என்பதை நாம் நன்கு அறிவோம். இவ்வாறான நடவடிக்கைகள் இன்றும் இப்போதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
எனவே நாம் ஒருபோதும் இந்த மனிதாபிமான நடவடிக்கையை விலை பேச ஆயத்தமாக இல்லை. இந்த வெற்றியை எப்போதும் எந்நேரத்திலும் மறந்துவிட முடியாது.
சரித்திரத்திலிருந்து துடைத்தெறிய முடியாது. மக்களின் மனதிலிருந்து அதனை நீக்கிவிட முடியாது. நன்றி உணர்வு கொண்ட மக்கள் இதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்பதை நான் மிகவும் பெருமையுடன் கூறிக்கொள்கின்றேன்
Monday, February 28, 2011
இலங்கையர்களை அழைத்துவர தயார் நிலையில் விமானங்கள்!
Thursday, March 3, 2011லிபியாவில் சிக்கியுள்ள இலங்கையர் களுள் 400 பேர் நாளை வெள்ளிக் கிழமையும் மறுநாள் சனிக்கிழமையும் இரண்டு விசேட விமானங்கள் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
ஜோர்டானுக்கு சொந்தமான ரோயல் ஜோர்தானியன் எயார் வேஸ¤க்கு சொந்தமான இரண்டு விமானங்கள் திரிபோலி விமான நிலையத்திலிருந்து ஜோர்டான் - டுபாய் ஊடாக இவ் இலங்கையர்களை அழைத்து வரவுள்ளதாக திரிபோலியிலுள்ள இலங்கைத் தூதுவர் சுதந்த கனேகம ஆராச்சி தினகரனுக்குத் தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பணிப்பிற்கமைய காலி மாவட்ட எம்.பி. சச்சின்வாஸ் குணவர்தன விசேட விமானங்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக லிபியாவிலுள்ள இலங்கைத் தூதுவர் சுதந்த கனேகல ஆராச்சி தெரிவித்தார்.
ஜோர்தானியன் எயார்வேஸ¤க்கு சொந்தமான ஒரு விமானம் வெள்ளிக் கிழமை திரிபோலியிலிருந்து புறப்படுகிறது. மறுநாள் சனிக்கிழமையும் மற்றொரு ஜோர்தானியன் விமானம் திரிபோலியிலிருந்து புறப்படுகிறது.
எனினும் இவ் விமானங்கள் திரிபோலி யிலிருந்து புறப்படும் நேரங்களை தற்போது கணிப்பிட முடியாதுள்ளது என தெரிவித்த இலங்கைத் தூதர், திரிபோலி விமான நிலையம் பரபரப்பாக இருப்பதால் முன்கூட்டியே நேரத்தை கூற முடியாதுள்ளது எனத் தெரிவித்தார்.
இதேவேளை, திரிபோலி உட்பட லிபியாவின் ஏனைய பகுதிகளிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்பவிரும்பாத னால். உடனடியாக தூதரகத்துடன் தொடர்பு கொண்டு கடவுச் சீட்டு இலக்கம் பெயர் என்பவற்றை பதிவு செய்யுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள தாகவும் அவர் கூறினார்.
சில இலங்கையர் நாடு திரும்ப விருப்பம் தெரிவிக்கவில்லை என்று கூறிய சுதந்த கனேகல ஆராச்சி, லிபியாவின் தற்போதைய நிலை, அதனால் ஏற்படும் அச்சுறுத்தல் தொடர்பாக எமது மக்களுக்கும் விளக்கமாக கூறியிருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.
லிபியாவின் பேர்த் நகரிலிருந்து சைப்பிரஸின் நார்மாத்தா நகருக்குக் கொண்டு சென்ற 29 இலங்கையரின் நிலை தொடர்பாக இலங்கைத் தூதுவர் சுதந்த கனேகல ஆராச்சியிடம் தினகரன் கேட்ட போது,
நார் மாத்தா நகரிலுள்ள கொன் சியூலர் 29 பேரையும் பொறுப்பேற் றுக் கொண்டதாக சைப்பிரஸிலிரு ந்து தொலைபேசி மூலம் தெரிவித் ததாகவும் விரைவில் 29 பேரும் இலங்கை வந்து சேருவார்கள் என் றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, லிபியாவில் சிக்கியிருந்த மேலும் 22 பேர், அவர்கள் தொழில்புரிந்த நிறுவனத்தினூடாக கப்பல் மூலம் மோல்டாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மோல்டாவிலுள்ள 22 பேரும் நேற்று மாலை இலங்கைக்கு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சைப்பிரஸிலுள்ள நார்மாட்டா நகரிலுள்ள 29 இலங்கையர்களும் இன்று 3 ஆம் திகதி அதிகாலை இலங்கை வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கிறது.
மேலும், 54 பேர் கப்பல் மூலம் கடந்த முதலாம் திகதி மோல்டாவை வந்தடைந்துள்ளனர். இவர்களும் இன்று இலங்கை வருவரென எதிர்பார்க்கப்படுகிறது.
Sunday, February 27, 2011
ஜனாதிபதியின் வாழ்க்கை வரலாறு முதன் முறையாக தமிழில் வெளியீடு.
Sunday, February 27, 2011ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கை வரலாற்றினை உள்ளடக்கிய நூல் முதன் முறையாக தமிழில் வெளி வந்துள்ளது. இந்நூலுக்கு ‘மஹிந்த’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மூன்று தசாப்தங்களாக இலங்கை மக்களை துன்புறுத்திய பயங்கர வாதத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றி மக்கள் அனைவரும் சமாதானமாகவும், ஒற்றுமை யாகவும், புரிந்துணர்வுடனும் வாழ வழியமைத்துக் கொடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விற்கு தமிழ் மக்கள் சார்பாக
நன்றியினைத் தெரிவிக்கும் முகமாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.
சிறுவயது முதல் ஜனாதிபதி மாளிகை வரையிலான மஹிந்த ராஜபக்ஷவின் விசேட நிகழ்வுகள் இந்நூலில் வர்ணப் புகைப் படங்களுடன் உள்ளடக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.
நாட்டின் சகல இன மக்களினதும் மனிதாபிமான உரிமைகளை பெற்றுக் கொடுத்த தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பற்றி தமிழ் மக்கள் கூறும் கருத்துகளும் இந்நூலில் உள்ளடக் கப்பட்டுள்ளன.
தினகரன் நாளிதழின் பிரதம ஆசிரியரான எஸ். தில்லைநாதனினால் இந்த வரலாற்று நூல் எழுதப்பட்டுள்ளது.
இந்நூலின் முதற் பிரதி கடந்த வாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி மாளிகையில் வைத்து நூலாசிரியர் தில்லைநாதனால் கையளிக் கப்பட்டது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வரும், எஸ். தில்லைநாதனின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
மொபைல் போனில் ஆபாச வீடியோவா?4 மாதம் சிறை செல்ல நேரிடும்.
Sunday, February 27, 2011மொபைல் போனில் ஆபாச வீடியோக்களை வைத்திருப்பவர் களுக்கு எதிராக சட்டம் கடும் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் மொபைல் போனில் ஆபாச வீடியோ வைத்தி ருந்த நபர் ஒருவருக்கு நீதிமன்றத்தால் நான்கு மாதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த செவ் வாய்க்கிழமை தெல்லிப்பளைப் பொலி ஸாரால் சோதனைக்கு உட்படுத் தப்பட்ட இளைஞர் ஒருவரின் மொபைல் போனில் ஆபாச வீடியோ இருந் துள்ளது. பொலிஸார் குறிப்பிட்ட இளைஞரை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்தி தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்றன.
விசாரணைகளுக்கு அமைய குறிப்பிட்ட இளைஞர் குற்றவாளியாக இனம் காணப்பட்டார். அவருக்கு நான்கு மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கல்லூரி செல்லும் இளைஞர்கள் தொடக்கம், பள்ளி செல்லும் மாணவர்கள் வரை பலரது மோபைல் போன்களில் இவ்வாறான ஆபாசப்படங்கள் பரவலாகக் காண்பபடுகிறது. இது போன்ற படங்களை மாணவிகளுக்கு காண்பித்து உணர்ச்சிகளைத் தூண்டி சிலர் அதில் குளிர் காய்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
முஸ்லிம் காங்கிரஸின் பலம் தேர்தலில் வெளிப்படும்.
Sunday, February 27, 2011ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸி டமிருந்து பறித்தெடுக்கப்பட்ட பேரம் பேசும் அரசியல் பலத்தை மீளப் பெறுவதற்கானதோர் சந்தர்ப்பமே எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலாகும்.
இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும், உள்நாட்டு வர்த்தக, கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில், நிந்தவூர் பிரதேச சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையி லேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஸ்ரீல. மு. காங்கிரஸ் நிந்தவூர் மத்திய குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கூட்டத்தில் (2011-02-25) திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். சி.பைசால் உட்பட பெருந்தொகை யான பொது மக்களும் கலந்து கொண்டனர்.
பிரதி அமைச்சர் பசீர் சேகுதாவூத் மேலும் பேசியதாவது, கிழக்கு மாகாண சபைக்கான அடுத்த தேர்தலில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை பெற்றுக் கொள்வதற்கான முதற்கல்லை நடுகின்ற நாளாக எதிர்வருகின்ற மார்ச் 17 ஆம் திகதி அமையப் போகின்றது. இதற்காக முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்திற்கு இந்த உள்ளூராட்சி சபைத் தேர் தலில் வாக்களிக்க கடமைப்பட்டுள் ளனர். கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்போ, அரசாங்கக் கட்சியோ அடுத்து வரும் தேர்தலில் தனித்து வெல்ல முடியாத ஒரு சூழலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடனோ தமிழ் தேசிய கூட்டமைப்புடனோ சேர்வதன் மூலம் ஆட்சியமைப் பதற்கான காலம் நிச்சயம் வரும்.
முஸ்லிம்களுக்கென்று தனி யலகு கோரிக்கைக்கான அரசியல் போராட்டம் கைவிடப்படாத நிலையில் கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை பெற்றுக் கொள்வதற்கான வியூகங்களுக்கு வலுச் சேர்க்க வேண்டிய காலம் இது. இச்சந்தர்ப் பத்தில் தமிழ் மக்களுக்கும் நீதியான நேர்மையான தீர்வு கிடைக்க வேண்டும் என பிரார்த் திக்கின்றோம்.
எனவே தான் முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளை அடைந்து கொள்வதற்கான போராட்ட வியூகத்திற்கு வழிசேர்க் கின்ற தேர்தலாக இந்த தேர்தலை முஸ்லிம் மக்கள் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் செல்வாக்கை தேசிய அரசியலில் இருந்தும், சமூக அரசியலில் இருந்தும் ஒரு போதும் ஓரங்கட்ட முடியாது என்ற செய்தியை வெளிக்காட்ட முடியும் எனக் கூறினார்.
இக் கூட்டத்தில் மு.கா. வேட்பாளர் களான எம்.ஏ.எம். தாஹிர், ஏ.ஏ.எம். நெளசாத், எம்.ரீ. ஜப்பார் அலி, எம்.எம். அன்சார், றியாஸ் உட்பட பலரும் உரையாற்றினர்.
Wednesday, February 23, 2011
அடையவே முடியாத மகாதேவிக்காக வாளைத் தூக்கி வீசிக் கொண்டிருப்பதைவிடவும் சாத்தியமான வழிமுறைகளைக் குறித்துச் சிந்தியுங்கள்-முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்!
Wednesday, February 23, 2011இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக ஏறக்குறைய ஏழு மாதங்களுக்கு முன்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் சில அபிப்பிராயங்களை தெரிவித்திருந்தார்.
13வது திருத்தச்சட்;டத்தின் அடிப்படையில் முதற்கட்டமாக அதிகாரப் பகிர்வுகளை சாத்தியப்படுத்துதல், இநத அதிகாரப் பரவலாக்கல் சம்பந்தப்பட்ட விடயத்தை சரியான முறையில் செயற்படுத்துதற்கு உடனடியாக ஒரு ஆனைக்குழுவை ஏற்படுத்துதல். இந்த அதிகாரப் பரவலாக்கல் ஆனைக்குழுவில் அரசியல் யாப்பு சம்பந்தமான விடயங்களில் நிபுணத்துவமுடையவர்கள் விடயங்களைத் திறமையாக நிர்வகிக்கக்கூடிய திறனாளர்களைக் கொண்ட நிபுணர்குழுவொன்றை அதை;தல் அவசியமாகும் என்பது வரதராஜப்பெருமாளின் சாராம்சக் கருத்தாகும். அடையவே முடியாத மகாதேவிக்காக வாளைத் தூக்கி வீசிக் கொண்டிருப்பதைவிடவும் அடைய முடிந்த ஸ்ரீதேவிக்காக கைகளை நீட்டலாம் என்பதைப் போல் சாத்தியமான வழிமுறைகளைக் குறித்துச் சிந்தியுங்கள் என்பதாக வரதராஜப் பெருமாள் இந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார். தன்னுடைய இந்த நிலைப்பாட்டை அவர் இலங்கையில் பல்வேறு இடங்களிலும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார். யாழ்ப்பாணம், கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் நடைபெறும் கூட்டங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பெருமாளின் பிரசன்னம் அதிகளவில் காணப்படுகிறது.
அத்துடன் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று புலம்பெயர் மக்களையும் விடுதலைப் போராட்ட அமைப்புக்களில் திவிரமாக செயற்பட்டிருக்கும் முக்கிய உறுப்பினர்களையும் சந்தித்து தனது நிலைப்பாட்டை விளக்கியிருக்கிறார். வரதராஜப்பெருமாள் இலங்கை அரசியல் களத்தில் நன்றாக அறியப்பட்டவர். வடக்கு கிழக்கு மாகாண சபையின் முதல் அமைச்சர். முப்பது ஆண்டுகளுக்கு மேலான அரசியல் செயற்பாடு அனுபவங்களையுடையவர். கல்வியியலாளர். பொருளியல் சிந்தனையாளர். ஆயுதப் போராட்ட அரசியல் அனுபவத்தையும் ஆயுதமற்ற அரசியல் நடவடிக்கைகளின் அனுபவத்தையும் கொண்டவர். இந்தப் பின்புலத்தில் தனது கடந்தகால அரசியல் அனுபவத்தையும் இலங்கைத் தமிழர்களின் அரசியல் அனுபவத்தையும் தொகுத்து தனது இன்றைய நிலைப்பாட்டை அவர் உருவாக்கியிருக்கிறார். இதை அவர் பகிரங்கமாகத் தெரியப்படுத்தியும் வருகிறார்.
இதேவேளை வரதihப்பெருமாளை கடுமையாக விமர்சிப்போரும் உள்ளனர். குறிப்பாக இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டவர் என்றும் இந்திய விரிவாக்கத்துக்கு ஆதரவளிப்பவர் என்றும் பெருமாளை இவர்கள் விமர்சிக்கின்றனர்.
ஆனால் பெருமாளோ தான் கடந்த கால அனுபவங்களின் வழியாகவும் இன்றைய உலக ஒழுங்கின் வழியாகவும் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கின்றேன் என்கின்றார். பிரச்சினைக்கான சூழல் அற்றுப்போனதென்றால் அடுத்த கட்டமாக எது சாத்தியமோ அதைப் பற்றித்தானே நாம் சிந்திக்க வேண்டும்? என்பதுதான் பெருமாளின் தீர்க்கமான நிலைப்பாடு.
இங்கே நாம் வரதராஜப்பெருமாளை முக்கியப்படுத்துவதை தவிர்த்து விட் அவருடைய கூற்றுக்களையும் நிலைப்பாடுகளையும் அவதானிக்கலாம்
தமிழர்கள் இன்று எத்தகைய நிலையில் இருக்கின்றனர்? தமிழ் பேசும் சமூகங்கள் இப்போது எவ்வாறுள்ளன? இந்த இரண்டு கேள்விகளும் முக்கியமானவை. அதாவது அரசியல் ரீதியாசும் சரி, பொருளாதார சமூக இருப்பு நிலையிலும் சரி தமிழர்களும் தமிழ் பேசும் மக்களும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றனர்.
தமிழ் பேசும் சமூகங்களை பிரதிநிதிதுவப்படுத்தும் அரசியல் சகதிகளில் பலவும் இன்று ஐக்கிய இலங்கைக்குள் தான் அரசியற் தீர்வு என்ற நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டன. இந்த நிலைப்பாட்டுடன்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பும் உள்ளது. நாடு கடந்த தமிழீழக் கோட்பாட்டாளர்களைத் தவிர ஏனையோர் அனைவரும் யதார்த்த அரசியலைப் பற்றி சிந்திக்க முற்பட்டுள்ளனர். இந்த யதார்த்த அரசியல் வெளிக்கு அப்பால் நிற்போரில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு சிறு பிரிவினரும் உள்ளடங்குவர். இத்தகைய பிரிவினர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்று விட்டனர்.
கூட்டமைப்பில் ஓரளவுக்கு யதார்த்தமாகச் சிந்திப்பவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். ஆனால் அண்மையில் இவர் நாடாளுமன்றத்தில் ஆற்றும் உரைகளும் ஊடகங்களுக்கு விடுக்கும் அறிக்கைகளும் யதார்த்த சிந்தனை முறைக்கு அப்பாலானவையாக இருக்கின்றன. கூட்டமைப்புக்குள் இருக்கும் நெருக்கடியைச் சமாளிக்கவும், அந்தக் கட்சியின் அரசியல் இருப்பை உறுதி செய்யவும் சரேஷ் பிரேமச்சந்திரன் முனையலாம்.
ஆனால் அவ்வாறு அவர் முயற்சிப்பாராயின் அவருடைய அரசியல் வெற்றிகள் என்பதும் அடையாளம் என்பதும் எதிர்காலத்தில் கேள்விக்குறியாகவே அமையலாம். பல மந்தைகளில் ஒன்றாக நிற்பதை விடவும் தனித்து சிங்கமாக இருக்க வேண்டிய அரசியல் தலைமையாளரின் பண்புகளில முக்கியமானது என்பார்கள். இந்த் தனித்துத் தெரிதல் என்பது சிந்தனையையும் செயற்பாட்டாலுமே அமையும்.
சுரேஷ் பிரேமச்சந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்ல. ஆயுதப் போராட்ட முன்னோடிகளில் ஒருவர். நீண்டகால அரசியல் அனுபவத்தையுடையவர். சுக ஊடாடத்திலுள்ளனர். பல்வேறு நெருக்கடி பாதைகளால் பயணித்து வந்தவர். ஆகவே நடைமுறைக்குரிய திட்டங்கள் நிலைப்பாடுகள் என்பவற்றைப் பற்றி சிந்திக்க வேண்டிய பொறுப்பில் இன்று இவர் இருக்கின்றார். கூட்டமைப்பிலுள்ளோரில் அதிக ஆற்றலும் நம்பிக்கையும் தரக்கூடியவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்தான். தலைமைத்துவப் பண்பு நிறைய பெற்றவரும் அவர்தான்.
எனவே சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்று கூட்டமைப்பின் மையச் சுழற்சியைத் தீர்மானிக்க வேண்டிய பொறுப்பிலிருக்கிறார். கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நோய்வாய்ப்பட்டிருப்பதுடன் முதுமை நிலையில் இருக்கின்றார். இதேவேளை சம்பந்தனும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் அதிகம் முரண்பாடற்ற நிலைப்பாட்டை உடையவர்கள்.
எனவே இன்றுள்ள நிலையில் தமிழ் பேசும் சமூகங்களின் அரசியற் தீர்வைப் பற்றி சிந்திக்க வேண்டுமாயின் இன்னொரு யதார்த்தத்தையும் மனங்கொள்வது அவசியம். அதாவது தமிழ் பேசும் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியற் கட்சிகளில் (மலையகம்- முஸ்லீம் தரப்பு மற்றும தமிழ் தரப்பு ஆகியவற்றில்) பெரும்பாலானவை அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்றன. அல்லது அரச ஆதரவை கொண்டிருக்கின்றன. டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி, பிள்ளையான் எனும் சிவனேசதுரை சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், ரிஷாத் பதியுதீனின் அணி, இ.தொ.கா, மலையக மக்கள் முன்னணி, இப்படி பல கட்சிகளும் புலிகளின் பரிவுகள் கே.பி அணியினர் வரையில் அரசு வட்டத்துக்குள் உள்ளடக்கப்பட்டு விட்டன.
ஆனாலும் இந்தத் தரப்பினரில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் தமிழ் பேசும் மக்களின அரசியல் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு- அபிவிருத்தி நடவடிக்கைகள் வரையிலும் செயற்பட்டு வருகின்றன.
ஆகவே இனப்பிரச்சினைக்கான தீர்வு தமிழ் பேசும் சமூகங்களின் அபிவிருத்தி வடக்கு-கிழக்கு பிரதேச மேம்பாடு என்றெல்லாம் பேசப்படும் போது இந்தத் தரப்புக்களும் தமக்குரிய இடத்தைக் கோரும். அத்துடன் பெரும்பாலான தரப்புகள் அரச தரப்பு நிலைப்பாட்டுடன் இருக்கும போது வெளித்தரப்புக்களின் பலமும் நியாயப்பாடுகளும் கேள்விக்குரியதாகவே காணப்படும்.
புலிகள் பலமான நிலையில் இருந்தபோது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் வேறு. அவர்கள் வெளிப்படுத்திய நிலைப்பாடுகள் வேறு. தாம் தெரிவித்த நிலைப்பாட்டை நோக்கி நகரும் செயற்பாடு முறையைப் புலிகள் கொண்டிருந்தனர். ஆனால் புலிகள் முன் முன்வைத்த தனிநாட்டுக் கோரிக்கை அதற்கான போராட்டம் என்பன இன்று தோல்வி கண்டிருப்பதற்கு புலிகளால் முன்வைத்த உப கோரிக்கைகளே நிறைவேற்றப்படவில்லை.
உதாரணமாக பொருளாதாரத்தடை நீக்கம், கடல் வலயச் சட்டம், சில குறிப்பிட்ட பாதைகளை பொதுமக்களுக்கு திறந்து விடுதல். அரசியல் கைதிகளின் விடுதலை, சுனாமியினால் ஏற்பட்ட பாதிப்புக்களை மீள் கட்டமைப்புச் செய்வதற்கான ஒருங்கிணைவு போன்றவற்றிலேயே வெற்றியை காண முடியவில்லை புலிகளால்.
இவ்வாறான ஒரு பின்னணியில் எடு;த்த எடுப்பிலேயே சிங்களத் தரப்பை மீண்டும் கலவரமடைய வைக்கும் இனவாதிகளுக்கு அதிக வாய்ப்பைக் கொடுக்கும் கோரிக்கைகளை தமிழர்கள் முன் வைக்க முடியுமா? அதாவது சமஷ்டி, சுயாட்சி, வடக்கு கிழக்கு இணைப்பு என்ற வகையிலான கோரிக்கைகள் மீண்டும் இனவாதத்தை வளர்க்கவே வாய்ப்பளிக்கும். பிரச்சினையைத் தீர்க்கவோ தமிழ் பேசும் மக்களுக்கு நன்மை பயக்கவோ மாட்டாது.
இதேவேளை தமிழ் பேசும் மக்களுக்கு இவை அடிப்படையானவை. எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்க முடியாதவை. எனவே இந்த இரு யதார்த்த நிலைமையில் விடயங்களை புத்திபூர்வமாக கையாள்வது மட்டுமே சாத்தியமான வெற்றிகளைத் தருவதாக இருக்கும்.
இதற்கு மாற்றுச் சொற்கள் மாற்று அணுகுமுறைகளைப் பற்றி சிந்திப்பது அவசியம். அதாவது அடைய முடியாத மகாதேவிக்காக வெற்றி வெளியில் வாளை வீசுவதை விடவும் அடையக்கூடிய ஸ்ரீதேவியை வரவேற்பது கட்டாயமானது.
இன்னும் இனப்பிரச்சினையை நீடிக்க முடியாது. இன்றும் தமிழ் பேசும் மக்களின் துயரங்களும் அவலங்களும் நீடிக்கக் கூடாது. அவ்வாறு அவை நீடிக்குமானால் அதற்குப் பொறுப்பு தமிழ் பேசும் சமூகங்களை பிரதிநிதித்துவபடுத்தும் கட்சிகளும் அவற்றின் தலைமையாளர்களும் இவற்றை வழி மொழியும் ஊடகங்களுமே
Sunday, February 20, 2011
வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டோர் வேறு வழிகளில் பிரசாரம் செய்ய முடியாது: தேர்தல் ஆணையாளர்!
Sunday, February 20, 2011எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் சமர்ப்பித்து நிராகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள், உள்ளூராட்சித் தேர்தலுக்குப் போட்டியிடும் வேறு அரசியல் கட்சிகள் சுயேட்சைக் குழுக்கள் சார்பாகத் தமது பெயர்களைப் பதிலீடு செய்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிய வந்துள்ளது.
இது குறித்து தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கா இது குறித்து நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
போட்டியிடுகின்ற ஏதேனும் ஒரு அரசியல் கட்சியின் அல்லது ஒரு சுயேட்சைக் குழுவின் வேட்பாளர்கள் சார்பாக உரிய தேர்தல் சின்னம் மற்றும் வேட்பாளர்களின் இலக்கங்களின் கீழ் போட்டியிட வேறெந்தவொரு நபருக்கும் உள்ளூர் அதிகார சபைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஏற்பாடுகள் செய்யப்படவில்லையென்றும் எவரேனும் ஒரு வேட்பாளரின் பெயரைப் பதிலீடு செய்ய முடியாதெனவும் அனைத்து வேட்பாளர்களுக்கும் வாக்காளர்களுக்கும் இத்தால் அறிவிக்கப்படுகின்றது.
உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலொன்றில் வாக்கெடுப்பு முடிவடைந்ததன் பின்னர், போட்டியிட்ட அரசியல் கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்கள் என்பவற்றினால் பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்குகளுக்கு விகிதாசாரமாக குறித்த கட்சி அல்லது குழு உரித்தாக்கிக் கொண்டுள்ள உறுப்புரிமைகளின் எண்ணிக்கை அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ள வேட்பாளர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும்.
எவரேனும் ஓர் உறுப்பினரின் மரணம், கேட்டு விலகல் மற்றும் வேறெனுமொரு காரணமொன்றினால் வெற்றிடம் ஏற்படுகின்ற போது அவ்வெற்றிடத்திற்குத் தகுதியான நபரொருவராக அக்கட்சியின் அல்லது அக்குழுவின் கீழ் போட்டியிட்டு கணிசமானளவு விருப்புக்களைப் பெற்றுள்ள வேட்பாளர்கள் உரிய கட்சிச் செயலாளரால் அல்லது சுயேட்சைக் குழுத் தலைவரால் குறிப்பாகப் பெயர் குறிப்பிடப்படுகின்ற வேட்பாளரே தேர்ந்தெடுக்கப்படுவார். இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் பயங்கரவாதத்தை தோற்கடிக்க பெளத்தநாடுகள் ஒன்றிணைய வேண்டும் - ஜனாதிபதி!
Sunday, February 20, 2011போர்ப் பயம் மற்றும் பயங்கர வாதத்திலிருந்து விடுபட்ட ஒரு உலகத்தை தோற்றுவிப்பதற்கு சர்வதேச ரீதியாக உள்ள பெளத் தர்கள் மற்றும் பெளத்த நாடுகளும் ஒத்துழைப் புடன் செயற்பட வேண்டு மென ஜனாதிபதி மகிந்த ராஜபக் தெரிவித்துள்ளார்.
இது தற்காலத்திற்கு ஏற்ற அத்தியாவசிய தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிப்போன் சிறிலங்கா கல்வி மற்றும் கலாசார கேந்திரத் தின் பொதுச் செயலாளர் சாஸ்திரபதி மீகஸ்தென்னே சந்திரசிறி தேரருக்கு, சிறி ஜெயவர்த்தனபுர பிரதான சங்க நாயகர் பதவி வழங்கப்பட்டதை முன் னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உப சார நிகழ்வில் கலந்துகொண்டு உரை யாற்றும் போதே ஜனாதிபதி இவ் வாறு தெரிவித்தார்.
இந்த உபசார நிகழ்வு அலரி மாளிகையில் நேற்று இடம்பெற் றுள்ளது. இதன்போது மீகஸ் தென்னே சந்திரசிறி தேரர், கல்வி மற்றும் கலாசார மேம்பாட்டுக்காக ஆற்றிய சேவை தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Sunday, February 13, 2011
யாழ்ப்பாண மீனவர்களின் பிரதிநிதிகளை இந்தியத் துணைத் தூதுவர் இ.மகாலிங்கம் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்!
Sunday, February 13, 2011யாழ்ப்பாண மீனவர்களின் பிரதிநிதிகளை இந்தியத் துணைத் தூதுவர் இ.மகாலிங்கம் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் சி.தவரட்ணம், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் அ.ஸ்ரனிஸ்லஸ் ஆகியோரை, யாழ் பலாலி வீதியில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, இந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பிரச்சினைகளுக்கு முடிவு காண்பதற்கு இரு நாட்டு மீனவர்களும் தமக்கிடையில் உறவைப் பேண வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இரு நாட்டு மீனவர்களும் தமக்கிடையே புரிந்துணர்வுகளை வளர்ப்பதன் மூலமும் தொடர்புகளை ஏற்படுத்துவதன் மூலமும், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என்றும், இந்தியத் துணைத் தூதுவர் இ.மகாலிங்கம் தெரிவித்தார். இதேவேளை, யாழ்ப்பாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக யாழ் கடற்றொழிலாளர் சங்க சமாசத் தலைவர்கள் கூட்டாக இணைந்து, கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் ஆர். ரவீந்திரனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அடிக்கடி குடாநாட்டுப் பரப்புக்குள் பிரவேசிக்கின்ற இந்திய றோலர்களாலும், குடாநாட்டில் குருநகர் உள்ளிட்ட சிறு பிரதேச கடற்றொழிலாளர்களால் மேற்கொள்ளப்படுகின்ற றோலர் தொழிலாலும், குடாநாட்டுக் கடல்வளம் அழிவதோடு தொழிலாளர்களின் வலைகளும் நாசமாக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
மன்னார் கடற்பகுதியில் எண்ணெய் அகழ்வை மேற்கொள்வதில் இந்தியா, சீனா, ரஸ்யா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது
Sunday, February 13, 2011மன்னார் கடற்பகுதியில் எண்ணெய் அகழ்வை மேற்கொள்வதில் இந்தியா, சீனா, ரஸ்யா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளை சிறிலங்கா அரசாங்கம் எட்டு பகுதிகளாகப் பிரித்துள்ளது. இவற்றில் இரண்டு பகுதிகள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வழங்கப்பட்டுள்ளன. முன்னதாக இந்திய அரச நிறுவனமான 'கெய்ன் இந்தியா' என்ற நிறுவனத்துக்கே இந்த பகுதி ஒன்று வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் சீனாவுக்கும் ஒரு பகுதி வழங்கப்பட்டுள்ளதாக தற்போது தெரிவிக்கப்படுகின்றன
ஏனைய ஐந்து பகுதிகளையும் விரைவில் அனைத்துலக மட்டத்தில் ஏலத்தில் விற்பதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் கெய்ன் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பகுதியில் எதிர்வரும் ஜுலை மாதம் எண்ணெய் கிணறு துளையிடும் பணிகள் மேற்கொள்ளப்பபடவுள்ளன. இதற்கென ஆழ்துளையிடும் கப்பல் ஒன்று மன்னார் கடற்பகுதிக்கு கொண்டு வரப்பட்டு அது சார்ந்த ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கெய்ன் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது
தமிழக தேர்தல்களை இலக்கு வைத்து புலிகள் தாக்குதல் நடத்தக் கூடும்?.
Sunday, February 13, 2011தமிழக சட்ட சபை தேர்தல்களை இலக்கு வைத்து புலிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தின் அதி முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் பிரமுகர்களை இலக்கு வைத்து புலிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புலிகளின் சில உறுப்பினர்கள் தமிழகத்திற்குள் ஊடுறுவியுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சு தமிழகத்தின் முக்கிய அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை அறிக்கை விடுத்துள்ளது.
ஊடுறுவிய புலி உறுப்பினர்கள் மறைவிடமொன்றில் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளில் குறித்த புலி உறுப்பினர்கள் ஆர்வம் காட்டி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
புலிகளின் நிதி மற்றும் விமானப்படைப் பிரிவைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர் சென்னையில் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்கொலைப் போராளிகள் இலங்கை அகதிகள் தங்கியிருக்கும் முகாம்களில் ஊடுறுவியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, தமிழகத்தில் புலிகள் உறுப்பினர்கள் எவரும் கிடையாது என மாநில காவல்துறை ஆணையர் லத்திக்கா சரண் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், எச்சரிக்கை அறிக்கைகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Friday, February 4, 2011
நாட்டின் எதிர்காலப் பாதை தீர்மானம் மிக்கது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்!
Friday, February 4, 2011முப்பது வருடகால பயங்கரவாதம் காரணமாக தேசத்திற்கு ஏற்பட்டுள்ள உயிரிழப்புக்களைத் தவிர ஏனைய அனைத்தையும் பெற்றுக் கொடுக்க வேண்டிய சவாலை எதிர்நோக்கியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
சுதந்திரத்தை வென்றெடுப்பது இனமொன்றின் முன்பாகவுள்ள சவாலாக அமைந்துள்ளதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இத்தகு சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்வது அதனைவிட பாரிய சவாலாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இன்று முற்பகல கதிர்காமத்தில் நடைபெற்ற 63 ஆவது சுதந்திரதினக் கொண்டாட்ட தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்த விடயங்களைக் கூறினார்.
காலநிலை மாற்றம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தரத்தை மேம்படுத்துவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார்.
சுதந்திரத்தினை பெற்றுக் கொள்வது என்பது நாட்டிற்கு மிகவும் சவாலான விடயமாகும் என்றும் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தினைப் பாதுகாப்பது அதனைவிட சவாலான விடயமாகும் எனவும் ஜனாதிபதி தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
இந்த சுதந்திரத்தினை அடைவதற்காகவும் அதனை எமது தாய் நாட்டில் பாதுகாப்பதற்காகவும் யாருமே முயற்சித்திராத பல முயற்சிகளை தாம் மேற்கொண்டதாக ஜனாதிபதி கூறினார்
நாட்டின் எதிர்காலப் பாதை தீர்மானம் மிக்கதாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கடந்த காலங்களில் கொழும்பில் மட்டுமே நடைபெற்ற தேசிய சுதந்திரதின நிகழ்வு தற்போது கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
எனவே சட்டத்திற்கு மதிப்பளிக்கும் சமூகத்தினை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்திய ஜனாதிபதி பிரபல்யமான தீர்மானங்களை எடுப்பதனால் மட்டும் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்றும் கூறினார்.
நாட்டிற்காக தீர்மானங்ளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜனநாயத்தினை போன்றே தாய்நாட்டின் ஒருமைப்பாட்டினையும் ஐக்கியத்தையும் பாதுகாக்க வேண்டியுள்ளதாக தமது சுதந்திரதின உரையில் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மெதிரிகிரிய கவுடுல்ல ஓயா நீர்த் தேக்கத்தின் வான்கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன!
Friday, February 4, 2011மெதிரிகிரிய கவுடுல்ல ஓயா நீர்த் தேக்கத்தின் வான்கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதால் அண்மித்த பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அந்த இடங்களில் இருந்து அகற்றப்பட்டு வருவதாக பொலநறுவை இடர்முகாமைத்துவ இணைப்பதிகாரி உபுல் நாணயக்கார குறிப்பிட்டார்.
மாவட்ட செயலாளரின் ஆலோசனைக்கமைய இராணுவம் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புக்களும் இந்த நடவடிக்கைக்காக பெறப்பட்டுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு ஐந்தாம்கட்ட நிதியுதவி வழங்கப்படவுள்ளது!
Friday, February 4, 2011இலங்கையின் பொருளாதாரதிற்கு ஒத்துழைப்பு வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தினால் ஐந்தாம் கட்ட நிதியுதவியை வழங்குவதற்கான நிறைவேற்றுக் குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் பிரகாரம் இலங்கைக்கு 216 தசம் 6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளன.
இதனுடன் சேர்த்து மொத்தமாக ஒன்று தசம் 516 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படவுள்ளது.
இதற்கு முன்னர் வழங்கப்பட்ட நிதி இலங்கை அதிகாரிகளால் சிறந்த முறையில் பயன்படுத்தப்படாமையால் தொடர்ந்தும் நிதியுதவி வழங்குவதற்குத் தீர்மானித்ததாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் பிரதிப் பணிப்பாளரும் பதில் தலைவருமான நயோயுகி சினொகரா கூறினார்.
2009 ஆம் ஆண்டு ஜூலை 24 அம் திகதி இலங்கைக்கு இரண்டாயிரத்து 599 தசம் 4 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தினால் அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Friday, January 28, 2011
தொடரும் குற்றச் செயல்களை தடுக்க இராணுவம் ரோந்துயாழ். இராணுவத் தளபதி அறிவிப்பு.
Friday, January 28, 2011யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை முற்றாகக் கட்டுப்படுத்துவதற்காக குடாநாடு முழுவதும் இன்று முதல் இரவு இராணுவ ரோந்து நடைமுறைக்கு வருகின்றது என யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்தா ஹதுறுசிங்க அறிவித்துள்ளார்.
அவர் யாழ்ப்பாண செயலகத்தில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு இதனை தெரிவித்தார்.
கலந்துரையாடலில், வட பிராந்திய பதில் பொலிஸ் மா அதிபர் சுசில் பெரேரா தகவல் தருகையில், பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய யாழ்ப்பாணத்திலுள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் குற்றச் செயல்களை தடுக்க மூன்று அம்ச செயல் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
சாதாரண உடை தரித்த பொலிஸாரும் பொலிசாரும் இரு பிரிவுகளாக மக்களிடமிருந்து புலனாய்வுத் தகவல்களைப் பெற்று 24 மணித்தியாலத்துக்குள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்தரங்க தகவல்களை தமிழில் வழங்க பொலிஸ் நிலையங்களுக்கு பிரத்தியேக தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினரும் பொலிஸாரும் வீதி சோதனை, வாகன சோதனை, சந்தேகமானவர்களை விசாரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளனர்.
நீதி நேர்மையான தேர்தலுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்-பிரதமர் டி. எம். ஜயரட்ன.
Friday, January 28, 2011நீதியும், அமைதியுமான தேர்தலை நடத்துவதற்கு சகல அரசியல்வாதி களும் கட்சித் தலைவர்களும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென பிரதமர் டி. எம். ஜயரட்ன கேட்டுக்கொண்டார்.
கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் வேட்புமனுத்தாக்கல் செய்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
மக்களின் விருப்பத்திற்கு இடமளித்து வன்முறை, ஊழல் மோசடியற்ற தேர்தலொன்றை நடத்துவதற்குச் சகல தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியமெனவும் பிரதமர் இதன் போது வேண்டுகோள் விடுத்தார்.
அதேவேளை எதிர்வரும் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் அமோக வெற்றியீட்டுவது உறுதி எனவும் பிரதமர் தெரிவித்தார்.
கண்டியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப்போட்டியிட்ட போதும் அரசாங்கத்துக்கு எந்தவித பாதிப்பும் அதனால் ஏற்படப் போவதில்லை என குறிப்பிட்ட அவர், கண்டியிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், கண்டியில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டாலும் பிரதியமைச்சர் அப்துல் காதர் போன்றோரின் வாக்குகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குக் கிடைப்பது நிச்சயம். குறிப்பாக முஸ்லிம் மக்களின் வாக்குகளில் எந்த குறையும் இருக்காது எனவும் பிரதமர் தெரிவித்தார்
Monday, January 24, 2011
புலிகளின் உலக தமிழர் அமைப்பின் உடமைகளை முடக்க உத்தரவு-கனேடிய நீதிமன்றம்.
Monday, January 24, 2011கனடாவின் ஒன்டாறியோ மற்றும் கியூபெக் மாநிலங்களில் செயற்பட்டு வந்த உலகத் தமிழர் அமைப்பின் உடமை களை கனேடிய அரசாங்கத்திடம் கையளிக்குமாறு கனேடிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உலகத் தமிழர் அமைப்பின் உடமைகள் பயங்கரவாத அமைப்பினால் பயன்படுத்தப் பட்டவை என்றும் அதன் சொத்துக்களை முடக்குமாறு கனேடிய நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பானது, கனடாவில் புலிகளுக்கு நிதி சேகரிக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட புலி ஆதரவு நடவடிக்கைகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாகவும் கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகத் தமிழர் அமைப்பானது கனடாவில் புலிகளுக்கு மிகவும் முக்கிய மானதொரு அமைப்பாகச் செயற்பட்டு வந்தது என கனேடிய றோயல் பொலிஸ் அதிகாரி ஸ்ரீவ் டப்ரெயுல் தெரிவித்துள்ளார்.
இந்த அமைப்பின் உடமைகளை முடக்கி கனேடிய அரசாங்கத்துக்கு வழங்குமாறு கனேடிய நீதிமன்றம் வழங்கியிருக்கும் உத்தரவைத் தாம் சாதகமாகவே பார்ப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் கனேடிய றோயல் பொலிஸின் பிரதி ஆணையாளர் கிலிஸ் மிச்சவுட் கனேடிய ஊடகங்களுக்குக் கூறியுள்ளார்.
பயங்கரவாத அமைப்புக்களின் செயற்பாடுகளைத் தடுப்பதற்கு தாம் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகளை கனேடிய நீதிமன்றத்தின் தீர்ப்பு மேலும் உறுதிப்படுத்துவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் கூட்டணி தொடர்பில் விரைவில் தீர்மானம்.
Monday, January 24, 2011எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் எந்தெந்தப் பகுதிகளில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவது என்பது தொடர்பில் அடுத்துவரும் ஓரிரு தினங்களில் தீர்மானம் எடுக்கப்படவிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளாரும். வர்த்தக மற்றும் கூட்டுறவுத்துறை பிரதி அமைச்ச ருமான பiர் சேகுதாவூத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அரசாங்கத் தரப்புடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், சில இடங்களில் தனித்தும், சில இடங்களில் அரசாங்கத்துடன் இணைந்தும் போட்டியிடுவதற்குக் கட்சி ஏற்கனவே தீர்மானித்திருப்ப தாகவும் கூறினார்.
அரசாங்கத்துடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும். வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான காலம் நெருங்கிவரும் நிலையில் தனித்துப் போட்டியிடவேண்டுமென்ற கோரிக்கைகள் கீழ்மட்டத்தில் விடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களுக்கான பட்டியல்கள் அனைத்தும் தயாரிக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சியும், ஜே. வி. பி.யும் தெரிவித்துள்ளன.
Monday, January 17, 2011
கூட்டமைப்பின் சொல் விளையாட்டால் தமிழ் மக்களுக்கு எவ்வித விமோசனமும் இல்லை!
வட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அ. வரதராஜப்பெருமாள், உடனான நேர்காணல். நேர் கண்டவர்: சுஐப் எம். காசிம்
வட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அ. வரதராஜப்பெருமாள், உடனான நேர்காணல். நேர் கண்டவர்: சுஐப் எம். காசிம்
Monday, January 17, 2011பெயர் : அ. வரதராஜப் பெருமாள்
பிறந்த திகதி : 1953 ஜூன் 08
பிறந்த இடம் : யாழ்ப்பாணம்
பாடசாலை : கொட்டடி நமசிவாயம் வித்தியாலயம் (ஆண்டு 10 வரை)
க.பொ.த. உயர்தரம் (தனியார் நிறுவனம்)
பதவிகள் : யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்
வடக்கு - கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்
கல்வித்தகைமை : யாழ். பல்கலைக்கழகம் (பொருளியல் சிறப்பு)
அரசியல் விஞ்ஞானம் (M. A) டெல்லி பல்கலைக்கழகம்
L. L. B.(டெல்லி)
பிள்ளைகள் : 3 பெண் பிள்ளைகள்
1985 ஆம் ஆண்டு திம்புப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றமை.
கேள்வி:- தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகின்aர்கள்?
பதில்:- கடந்த 3 தசாப்தங்களுக்கு மேலாக இந்நாட்டை உலுக்கி வந்த கோர யுத்தம் முடிவுக்கு வந்திருப்பது மிக நல்ல விடயம்.
யுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட அழிவுகள், சிதைவுகள், சீரழிவுகள் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக நாம் ஒரு முன்னோக்கிய கால கட்டத்தில் போக வேண்டிய சூழல் இன்றுள்ளது.
புனர்வாழ்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது. மக்கள் மத்தியில் பீதியற்ற ஒரு சூழல் உருவாக வேண்டும். ஜனநாயகம் என்பது தேர்தலில் மட்டும் நின்றுவிடாது எல்லா விடயங்களிலும் பிரதிபலிக்க வேண்டும். போர் சுனாமி மற்றும் வெள்ள அனர்த்தங்களினால் மக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நமது நாட்டு மக்களை மீட்கும் துரித வேலைத்திட்டங்கள் தேவை. ஜனாதிபதியும் அரசாங்கமும் இதற்கு முன்னுரிமை அளித்துச் செயற்பட்டு வருகின்ற போதும் இன்னும் வேகப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
ஆளுங்கட்சிகளுக்கும் எதிர்க்கட்சிகளுக்குமிடையே ஒரு ஜனநாயக பூர்வமான, நாகரீக பூர்வமான ஓர் அச்சமற்ற உறவு வளர்ச்சியடைய வேண்டும். அரசியல் நாகரீகம் மேலோங்கியுள்ள ஒரு நாடு என்ற வகையில் ஒரு மனப்பக்குவம், அரசியல் முதிர்ச்சி ஆகியவை நமக்கிடையில் வளர்ந்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது.
இவை படிப்படியாக மாறும் என்றே நான் நம்புகின்றேன்.
கேள்வி:- யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் கொலைகள், கொள்ளைகள், கடத்தல் என்பவற்றை நீங்கள் எந்தக் கோணத்தில் பார்க்கின்aர்கள்?
பதில்:- இவை மக்கள் மத்தியில் பயபீதியை ஏற்படுத்தியிருக்கின்றன. இவற்றை நீக்க வேண்டிய முதற் பொறுப்பு அரசுக்கு உண்டு. குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்தி மக்களுக்கு ஒரு பயம் ஏற்படாத வண்ணம் கருமங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். இந்தச் சம்பவங்களை வெளியில் கொண்டு வரக்கூடிய பொறிமுறை அரசாங்கத்திடமே இருக்கின்றது. என்னைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சம்பவங்களை தொகுத்து பார்க்கும் போது வெறுமனே அரசியலற்றது என்று சொல்வதற்கில்லை. தனிப்பட்ட கொலைகள், கொள்ளைகள் நடந்திருக்கும் அதேவேளை அரசியலும் ஏதோ வகையில் கலந்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. அங்கு இடம்பெறும் சம்பவங்களை தனிப்பட்ட மோதல்களின் விளைவுகள் என்று கூறுவது சரியானதல்ல. இது மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் கூற்றுமல்ல. ஏனெனில் அங்கு வாழும் மக்களுக்கு நடைபெறும் விடயங்கள் தெரியும். மக்கள் மத்தியில் பயப்பீதியை அதிகரிப்பதில் ஊடகங்களும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன. மக்களுக்கு அதிகரிப்பதில் நம்பிக்கை வழங்க வேண்டிய அரசியல்வாதிகள் பயப்பீதியை ஏற்படுத்துபவர்களாகவே இருக்கின்றனர். 30 வருடங்களாக யுத்த வெறியர்களுக்குப் பயந்து பயந்து வாழ்ந்த மக்களுக்கு இப்போது இடம்பெறும் சம்பவங்கள் இன்னும் பாதிப்பையே ஏற்படுத்துகின்றது. மீண்டும் பழைய நிலை வந்து விடுமோ என்ற அச்ச உணர்வும் அவர்களிடம் உள்ளது. எனவே இந்த நிலையை மாற்றுவதற்கு அனைவரும் உதவ வேண்டும்.
கேள்வி:- மீள்குடியேற்றம் தொடர்பாக?
பதில்:- யுத்தத்தினால் சுமார் 3 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர். எல்லாமே அழிந்தன. அனைத்தையும் இழந்தனர். மாற்று உடுப்புக்களின்றியே அகதி முகாம்களுக்கு வந்தனர். தற்போது 90 சதவீதமானவர்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு சென்றுள்ளனர். ஜனாதிபதியும் அரசாங்கமும் இந்த மக்களை மீள்குடியேற்றும் விடயத்தில் அக்கறை காட்டி வருவது வரவேற்கத்தக்கதே. எனினும் அங்கு குடியேறியுள்ள மக்களுக்கு போதிய உதவிகள் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சமூகத்தொண்டு நிறுவனங்களின் கடந்தகால நடவடிக்கைகள் தொடர்பாக அரசுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளபோதும் தற்போதைய சூழலில் அவர்களை அங்கு அனுமதிப்பதால் நஷ்டம் ஏற்படாது. ஏனெனில் புலிகள் அங்கு இல்லை. எனவே தொண்டு நிறுவனங்களை சில கட்டுப்பாடுகளுடன் பணிபுரிய அனுமதித்தால் மக்கள் இன்னும் நன்மை பெறுவர்.
கேள்வி:- தமிழ்க் கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாடு பற்றி நீங்கள் கருதுவது என்ன?
பதில்:- ஜனநாயக அரசியலில் இருக்கும் ஒரு கட்சி அரசாங்கத்துடன் ஒத்துழைக்க வேண்டுமென வலியுறுத்துவது சரியல்ல. ஜனநாயக அம்சங்களில் பலமான எதிர்க்கட்சியும் அவசியமான விடயம். அதற்காக எதிர்க்கட்சிகள் வெறுமனே எதிர்ப்பு அரசியல் நடத்துவதும் மக்களுக்கு நல்லதல்ல. இந்த வகையில் ஒரு சமநிலையை எதிர்க்கட்சிகள் கையாள வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கம் மேற்கொள்ளும் புனர்வாழ்வு, அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்போவதாக அறிவித்துள்ளனர். அதற்கான சமிக்ஞைகளையும் காட்டியுள்ளனர். இதற்கான நல்லெண்ணத்தைக் காட்டும் வகையில் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் வாக்களிப்பிலும் பங்குபற்றவில்லை. இது இக்கட்சியின் நிலைப்பாடு. ஆனால் இதற்குப் பெயர்தானா ஒத்துழைப்பு. இவ்வாறான ஒத்துழைப்பை எதிர்பார்த்தா அரசு இருக்கிறது. அபிவிருத்தி, புனர்வாழ்வு நடவடிக்கைகளை எதிர்ப்பதென்று ஒன்றில்லை. புலிகள் கொடிகட்டிப் பறந்த காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகளைத் தடுத்தனர். ஆனால் தமிழ்க் கூட்மைப்புக்கு அவ்வாறு முடியுமா? அபிப்பிராயத்தை மட்டும்தான் அவர்களால் கூற முடியும். கூறவும் வேண்டும். ஆளுங்கட்சி தனக்கிருக்கும் வருமானம், வளங்களுக்கு ஏற்றவகையில் தான் அபிவிருத்தியை மேற்கொள்ளும். தம் வசமிருக்கும் திட்டங்களை செயல்படுத்தும். அந்தவகையில் தமிழ்க் கூட்மைப்பின் ஒத்துழைப்பு, ஒத்துழைக்காமை என்ற பதங்கள் எனக்குப் புரியவில்லை. எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு என்று சொல்வதன் அர்த்தம் நமக்கு விளங்கவில்லை. இந்த விடயங்களை தமிழ்க்கூட்டமைப்பு விமர்சித்தாலும் அரசுக்கு எந்த வகையிலும் பாதிப்பில்லையே.
கேள்வி:- அவ்வாறெனின் அக்கட்சியினரின் உள்நோக்கம் என்ன?
பதில்:- அவர்களின் உள்நோக்கமும் தெரியவில்லை. அவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதுவும் விளங்கவில்லை.
பொதுமக்களுக்கு சொல் விளையாட்டுக்களால் பயன் ஏற்படப்போவதில்லை என்பதே என் எண்ணம்.
கேள்வி:- தமிழ் அரங்கத்தின் செயற்பாடுகள் பற்றி கூறுவீர்களா?
பதில்:- தமிழ் அரங்கம் மிகத் தெளிவான கண்ணோட்டத்திலேயே உருவாக்கப்பட்டது. தமிழ்க் கட்சிகளின் அரங்கம் என்பது ஒரு குறிப்பிட்ட கட்சிகளின் அரங்கமில்லை. அது ஒரு திறந்த முன்னணி. அதிலே அனைத்துத் தமிழ்க்கட்சிகளும் பங்கேற்க வேண்டும். தமிழ் அரங்கம் ஓர் அணி. தமிழ்க் கூட்டமைப்பு இன்னொரு அணி என்றில்லை. மொத்தத்தில் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் என்பது ஓர் அணியே இல்லை - தேர்தலுக்கானதுமல்ல. கொள்கை அடிப்படையிலானதுமல்ல. வேறுபாடற்ற கூட்டுமல்ல. அதன் ஒரே நோக்கம் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற உடனடிப் பிரச்சினைகள் தொடர்பாக ஓர் ஒருமித்த சூழலை வெளிப்படுத்தினால் அந்தக் கோரிக்கைக்கு வலுவாகவிருக்கும். அந்தக் கோரிக்கைக்கு செவிசாய்க்கும் நிலை ஏற்படும். இதற்காகவே இது உருவாக்கப்பட்டது. ஏற்கனவே அரங்கம் 12 விடயங்களை நிரற்படுத்தியுள்ளது. அது தொடர்பாக ஆராயும்.
கேள்வி:- தீர்வு தொடர்பாக உங்கள் கட்சி என்ன நிலைப்பாட்டில் உள்ளது?
பதில்:- இந்த நாட்டின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சரியான உபாயம் சமஷ்டித்தீர்வாக இருந்த போதும் இன்றைய அரசியல் சூழ்நிலையில் அதற்கு உடனடிச் சாத்தியமில்லை. 1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவ்வாறான நிலையொன்று உருவாகியபோதும் அது இடம்பெறாது போய்விட்டது. எனினும் எவ்வாறான தீர்வொன்று தமிழ் பேசும் மக்களுக்கு உதவும் என்பதைத் தீர்மானிக்கும் பிரதான ஒருவராக ஜனாதிபதியே விளங்குகின்றார். அந்த வகையில் அரசு என்ன தீர்வை வைத்திருக்கின்றது என்பது எனக்குத் தெரியாது. எனினும் 13வது திருத்தத்தின் அடிப்படையில் தீர்வு சாத்தியம் எனக் கூறப்படுகின்றது.
எல்லோரினதும் விருப்பு, வெறுப்புக்களுக்கு அப்பால் அரசியல் யாப்பில் கடந்த 22 வருடங்களாக இந்நாட்டில் இருக்கின்ற ஒரு விடயமே. ஆனால் அது முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அது சரியாகவும் நிறைவேற்றப்படவில்லை. இல்லையென்றால் அதன் அர்த்தம் புரிகின்றதல்லவா?
எந்தத் தீர்வானாலும் இந்த நாட்டிலிருந்துதான் வரவேண்டும். இந்தியாவோ மேற்கத்தேய வல்லரசுகளோ யாரும் எதையும் திணிக்க முற்பட்டாலும் அது வெற்றிகரமாக அமையாது. இந்நாட்டில் அதிகாரப் பகிர்வு என்பது ஒரு சரியான முறையில் முன்னேறிச் செல்லும் அம்சமாக நடக்க வேண்டும் என்றால் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை தம் வசம் வைத்துள்ள ஜனாதிபதியும் அவரது அமைச்சரவையும் தமக்கு சரியென்று எண்ணுவதை அதனைச் சரியாகவும் முழுமையாகவும் நிறைவேற்ற வேண்டும்.
கேள்வி:- நீங்கள் 13வது திருத்தம் பற்றி முன்னர் விமர்சித்திருந்தீர்களே?
பதில்:- அடிப்படையில் 13வது திருத்தம் ஒரு பிழையான சட்டம். அந்தச் சட்டத்தின் கட்டமைப்பே பிழையானது.
ஜே.ஆர். ஜயவர்தன எந்த நோக்கத்தில் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தாரோ தெரியாது. ஆனால் அவர் பிழையான முறையில் அதனை அமைத்தார். இந்தியாவின் நெருக்குதலினால் அவசர அவசரமாக தெரிந்து கொண்டே பிழையான ஒன்றை அந்தச் சந்தர்ப்பத்தில் தயாரித்தார். அந்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் இன்று நிரந்தரமாக மாறிவிட்டன. வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல ஏனைய மாகாணங்களில் இயங்கும் சபைகள் கூட தமக்கு அதிகாரம் இல்லை என்றுதான் கூறி வருகின்றன. எனவே இந்த மாகாணங்களுக்கு மத்தியில் இருந்து அதிகாரங்களைப் பகிர வேண்டும்.
அபிவிருத்தி, அதிகாரப்பகிர்வு, ஜனநாயக மயமாக்கம் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை. அதிகாரப்பகிர்வு நடக்காது உண்மையான ஜனநாயகம் வரப்போவதில்லை. அபிவிருத்தி இடம்பெறாது. அந்தவகையில் அபிவிருத்தியில் முன்னேற்றம் ஏற்பட ஜனநாயகம் மேலோங்க அதிகாரப் பகிர்வு அவசியமாகின்றது. சிங்கள மக்கள் மத்தியில் அதிகாரப் பகிர்வு தொடர்பான விருப்பம் எவ்வளவுக்கு விரிவடைகின்றதோ அதனைப் பொறுத்தே இதில் முன்னேற்றம் காணமுடியும்.
கேள்வி:- யுத்த வெற்றியை நீங்கள் எவ்வாறான கண்ணோட்டத்தில் பார்க்கின்aர்கள்?
பதில்:- ஜனாதிபதி மஹிந்தவின் காலத்தில் யுத்தத்தில் வெற்றி கிடைத்துள்ளது. அதற்கு முன்னர் இருந்த எந்த ஒரு அரச தலைவருக்கும் யுத்தத்தின் மூலம் வெற்றிபெற முடியுமென்ற நம்பிக்கை இருக்கவில்லை. அவர்கள் அதற்கு முயற்சிக்கவுமில்லை. அந்தத் துணிவும் இருக்கவில்லை. ஆனால் ஜனாதிபதி மஹிந்த துணிகரமாக இறங்கினார். மாவிலாறு விடயத்தில் மக்கள் பாதிப்புக்குள்ளாகியபோதுதான் அவர் இந்த நடவடிக்கையை தீவிரமாக எடுத்தார். மாவிலாறில் ஏற்பட்ட வெற்றியின் மூலம் புலிகளின் பலம், பலவீனத்தை கண்டு கொண்டனர். அதற்கு முன்னர் எல்லோரும் புலிகளை ஓர் அசாத்தியமான, அதீதமான சக்தி என்று நினைத்திருந்தனர். இந்தியா, நோர்வே, மற்றும் ரணில் விக்கிரமசிங்க உட்பட இலங்கைத் தலைவர்கள் புலிகளுடன் பேசி விரக்தி கொண்டவர்கள் தான்.
நாங்கள் உட்பட தமிழ்க்கட்சிகளில் சில புலிகள் பற்றி நன்கு அறிந்திருந்தமையால் அவர்களைப் பற்றி அறிந்திருந்தோம். அவர்கள் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்ற தீர்க்கமான நிலைப்பாட்டுடன் நாம் இருந்தோம்.
அந்த வகையில் ராஜபக்ஷவின் காலகட்டத்தில் உள்நாட்டில் நிலைமை கனிந்திருந்தது. சர்வதேச ரீதியாகவும் நல்ல நிலை இருந்தது. எனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சர்வதேச நிலைமைகளை சாவதானமாகக் கையாண்டார். அரச அமைப்பு முழுவதையும் ஒன்றாகக் கொண்டு செல்லும் அவரது திறமையும் யுத்த வெற்றிக்கு இன்னுமொரு காரணம்.
ஒருவன் வெற்றிகரமாக இருக்க வேண்டுமெனின் அவன் முதலில் தன்னைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அடுத்து எதிரியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் புலிகள் இவையிரண்டையும் பற்றி அறியவில்லை. அரசியல் இராஜதந்திரத்தில் ஏற்பட்ட குறைபாடு மட்டுமல்ல உலக நாடுகள் தங்களுக்கு கைகொடுக்கும் என்ற நினைப்புத்தான் அவர்களின் பிழைப்பைக் கெடுத்தது.
கேள்வி:- நாடு கடந்த தமிbழம், புலம் பெயர் தமிழர்களின் எதிர்ப்புக்கோஷங்கள் பற்றி நீங்கள் என்ன கூறப் போகின்aர்கள்?
பதில்:- எட்டு இலட்சம் புலம்பெயர் தமிழர்கள் வாழுகின்றார்கள். இவர்களில் எண்ணூறு பேரே எதிர்ப்பில் ஈடுபடுகின்றனர். முன்னர் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்கள், புலிகளின் தீவிர அபிமானிகள் மற்றும் ‘சனல் - 4’ வெளியிட்ட காட்சிகளால் பாதிக்கப்பட்டவர்களே இவர்கள். அத்துடன் இவர்களில் சிங்கள எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்களும் அடங்குகின்றனர்.
இவர்களின் எதிர்ப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதுவுமே செய்யப்போதில்லை.
எல்லா மக்களும் நித்திரைக்குச் சென்ற பின்னர் இரவு நேரத்தில் இரண்டு பேர் கடைபோட்டிருப்பது போன்றதற்கு ஒப்பானதே நாடு கடந்த தமிbழம். யாராவது ஒருவர், இருவர் வருவார்கள். அவர்களுக்கு வியாபாரம் நடத்தலாம் என்று இவர்கள் எண்ணுவது போன்று புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் வெளிநாடுகளில் பணம் திரட்ட மேற்கொண்ட முயற்சி. இப்போது புலம்பெயர் தமிழர்களிடம் பணம் திரட்டுவது பெருமளவில் குறைந்துள்ளபோ தும் இன்று ஒரு புதிய இரவுக்கடை திறக்கப்பட் டுள்ளது.
Sunday, January 16, 2011
இந்திய உறவை பாதிக்கும் வகையில் இலங்கை கடற்படை செயற்படுவதில்லை-புதிய கடற்படைத் தளபதி சோமதிலக்க திஸாநாயக்க!
Sunday, January 16, 2011இலங்கை - இந்தியாவுக்கு இடையிலான உறவில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் வகையில் கடற்படையினர் எந்த விதத்திலும் செயற்படுவ தில்லை என்று புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க தெரிவித்தார்.
இந்திய மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல் நடத்துவதாக கூறப்படும் குற்றச்சாட் டுக்களில் எந்த விதமான உண்மைகளும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவிப்பதுடன் முற்றாக மறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் 17 வது கடற்படைத் தளபதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட வைஸ் அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க நேற்று கடற்படைத் தலைமையகத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண் டார். இதன்போது, அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தற்போதைய நவீன யுகத்தில் ராடார், செய்மதி போன்ற தொழில்நுட்ப வசதிகள் நிறைந்து காணப்படும் நிலையில் அவ்வாறன குற்றஞ்சாட்டுக்களை இவற்றை பயன்படுத்தி நிரூபிக்க முடியும். ஆனால் அவ்வாறான எந்த சாட்சிகளும் கூட இல்லை என்று சுட்டிக்காட்டினார்.
தளபதி உட்பட உயர் அதிகாரிகளின் எந்தவொரு உத்தரவுமின்றி கடற்படையினர் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கப் போவதில்லை. அவ்வாறான தேவைகள் அவர்களுக்கு இல்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் தனது தளபதிகளை மீறி கடற்படையினர் எந்தவொரு தாக்குதல்க ளையும் நடத்துவதில்லை.
அவ்வாறு நடந்துகொள்வது தாய் நாட்டுக்கு செய்யும் துரோகமாக கருதப்ப டும். அவ்வாறு மீறி நடக்கும் எந்த ஒரு கடற்படையினரையும் நாங்கள் பாதுகாக்கப் போவதில்லை என்றும் கடற்படைத் தளபதி தெரிவித்தார்.
Subscribe to:
Posts (Atom)

