
மெதிரிகிரிய கவுடுல்ல ஓயா நீர்த் தேக்கத்தின் வான்கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதால் அண்மித்த பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அந்த இடங்களில் இருந்து அகற்றப்பட்டு வருவதாக பொலநறுவை இடர்முகாமைத்துவ இணைப்பதிகாரி உபுல் நாணயக்கார குறிப்பிட்டார்.
மாவட்ட செயலாளரின் ஆலோசனைக்கமைய இராணுவம் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புக்களும் இந்த நடவடிக்கைக்காக பெறப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment