
இலங்கையின் பொருளாதாரதிற்கு ஒத்துழைப்பு வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தினால் ஐந்தாம் கட்ட நிதியுதவியை வழங்குவதற்கான நிறைவேற்றுக் குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் பிரகாரம் இலங்கைக்கு 216 தசம் 6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளன.
இதனுடன் சேர்த்து மொத்தமாக ஒன்று தசம் 516 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படவுள்ளது.
இதற்கு முன்னர் வழங்கப்பட்ட நிதி இலங்கை அதிகாரிகளால் சிறந்த முறையில் பயன்படுத்தப்படாமையால் தொடர்ந்தும் நிதியுதவி வழங்குவதற்குத் தீர்மானித்ததாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் பிரதிப் பணிப்பாளரும் பதில் தலைவருமான நயோயுகி சினொகரா கூறினார்.
2009 ஆம் ஆண்டு ஜூலை 24 அம் திகதி இலங்கைக்கு இரண்டாயிரத்து 599 தசம் 4 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தினால் அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment