Monday, April 26, 2010

வவுனியாவில் கடத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் பொலிஸாரினால் மீட்பு

Monday, 26 April 2010
வவுனியாவில் கடத்தப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தர் இன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று முன்தினம் வவுனியா வைத்தியசாலைக்கு செல்லும்போது, கடத்தப்பட்டிருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில், வவுனியா அலுவலக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கைதுசெய்யப்பட்ட குறித்த உறுப்பினர் வழங்கிய தகவலையடுத்தே, மேற்படி கடத்தப்பட்டிருந்த நபர் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டார்.

ஜெனரலின் அடிப்படை உரிமை வழக்கு இன்று

Monday, 26 April 2010
கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஜெனரல் சரத் பொன்சேகா தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனு, உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிரதம நீதியரசர் அசோக என் டி சில்வா தலைமையில் காமினி அமரதுங்க, கே ஸ்ரீபவன் ஆகிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிரதிவாதிகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆட்சேபனைகளுக்குப் பதிலளிக்கும் முகமாக மனுதாரர் சார்பில் விடயங்களை முன்வைப்பதற்கு மூன்று வாரகால அவகாசம் வழங்குமாறு ஜெனரல் பொன்சேகா சார்பில் பிரசன்னமாகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி ஷிப்லி அஸீஸ் உயர்நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
ஜெனரலைக் கடந்த சில நாட்களாகச் சந்திக்கமுடியாமல் போனதால் உரிய பதிலை வழங்கமுடியாமல் போனதாக ஜனாதிபதி சட்டத்தரணி உயர் நீதிமன்றில் தெரிவித்தார்.
இதற்கிணங்க ஜெனரல் பொன்சேகா சார்பில் விடயங்களை முன்வைப்பதற்காக மூன்றுவார கால அவகாசத்தை உயர்நீதிமன்றம் வழங்கியது.
சட்டவிரோதமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளதால் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக ஜெனரல் சரத் பொன்சேகா தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே கூடிய விரைவில் தம்மை விடுவிக்குமாறு பொன்சேகா நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மனுமீதான விசாரணை ஜூலை மாதம் 8 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

பூட்டானில் எமது ஜனாதிபதிக்கு உற்சாகமான வரவேற்பு!

Monday, 26 April 2010
பூட்டான் தலைநகரான திம்புவில் நாளை மறுதினம் ஆரம்பமாகும் 16 ஆவது சாh;க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவூக்கு பாரோ சா;வதேச விமன நிலையத்தில் பெரும் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
பூட்டான் ஜனாதிபதி ஜிக்மி யோசா; தின்லேயூம் மற்றும் அமைச்சா;கள் பலரும் விமான நிலையம் வந்து ஜனாதிபதிக்கும் அவா; தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவூக்கும் உற்சாகமான வரவேற்பளித்தனா;.
பூட்டான் உச்சிமாநாட்டை பொறுப்பேற்று நடத்துவது இதுவே முதல் முறையாகும். சார்க் அமைப்பின் தலைமைப் பதவியை தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வகித்து வருகின்றார என்பது குறிப்பிடத்தக்கது

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மீண்டும் கோத்தாபய ராஜபக்ஷ!

Monday, 26 April 2010
புதிய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சு செயலாளராக கோத்தாபய ராஜபக்ஷ மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளாh;. நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற வைபவத்தில் இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கினாh;.
கடந்த 2005 ஆம் ஆண்டு நவம்பா; மாதம் 25 ஆம் திகதி இவா; முதலில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டாh;.
கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் சிறப்பாகப் பணிபுரிந்த இவா; இலங்கையில் மூன்று தசாப்தங்கள் நிலவிய பயங்கரவாதத்தை முறியடித்து புலிகளை தோற்கடிக்க முப்படைகளின் சேனாதிபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவூக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கினாh;.

Followers

Blog Archive