Friday, August 27, 2010

தேசிய வியாபார முகாமைத்து கல்வி நிலைய பட்டமளிப்பு விழாவில் பாதுகாப்புச் செயலாளர்.


Friday, August 27, 2010
தேசிய வியாபார முகாமைத்துவ கல்வி நிலையத்தின் 26வது பட்டமளிப்பு விழா நேற்று(ஆக:18) பன்டார நாயக ஞாபகார்த்த மன்டபத்தில் நடை பெற்றது இதில் பாதுகாப்புச் செயலாளர் கோடாபாய ராபக்க்ஷ அவர்கள் பிரத அதிதியாகக் கலந்து கொன்டார்.

இவ்விழாவில் 3000 அதிகமான மானவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொன்டனர். இவர்கள் மத்தியில் பாதுகாப்புச் செயலாளர் உரையாற்றுகையில் எவ்வேளையும் நல்ல நோக்கத்துக்காக சிந்தித்து செயல்பட வென்டும்.

அந்தக்காலத்தில் குறைந்த அளவில் இருந்த பல்கலைக்களகங்கள் இருந்தன.அனால் இன்று அவ்வாறில்லை எமது பல வகையிலும் கல்வி விடயத்தில் வளர்ச்சி பெற்றுள்ளது.எனவே நாம் தனது சகல திறமைகளையும் விட்டுக் கொடுப்புகளையும் சக்தியையும் நாட்டுக்காக அற்பனித்து நாட்டுக்காக நேசிப்பவர்களாக திகழ வேன்டும் என தெரிவித்தார்.

தான் செய்யும் தொழிலை மதித்து அதற்க்கு முன்னுரிமை வளங்கினால்தான் முன்னேற்றமடையமுடியும் என தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் அமெரிக்க லொயலா நீதி பல்கலைக்களகத்தில் யுனிக்கஸ் சிஸ்டம் முகாமையாளராக கடமையாற்றிய போது பெற்ற அனுபவங்களையும் இங்கு பகிர்ந்து கொன்டார்.

இந்நிகழ்வில் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அளகப்பெருமை மற்றும் பிரதி அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோரும் கலந்து கொன்டனர்.

அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் ஜயந்த தனபால சாட்சியம்,

Friday, August 27, 2010
இனங்களுக்கிடையிலான நல்லெண்ணத்தைப் பொறுத்தவரையில், நாட்டின் தற்போதைய நிலைமைக்கு சகல அரசியல் கட்சிகளுமே பொறுப்பாளிக ளென்றும் இந்தக் கட்சிகள் இதற்கான தார்மீக பொறுப்பை ஏற்று வெளிப்படையாகக் கூட்டு மன்னிப்பைக் கோரும் பட்சத்தில் மக்கள் மத்தியில் நல்லெண்ணம் ஏற்பட பிரதான உந்துதலைக் கொடுக்குமென்றும் சமாதான செயலகத்தின் முன்னாள் பணிப்பாளரும் இராஜதந்திரியுமான ஜயந்த தனபால தெரிவித்தார்.

அதேநேரம் இனங்களுக்கிடையே குரோதத்தை ஏற்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க புதிய சட்டமொன்றை இயற்ற வேண்டுமென்றும் கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன்னிலையில் நேற்று (25) சாட்சியமளிக்கையில் அவர் பரிந்துரைத்தார்.

இந்த நாட்டின் பிரச்சினைக்குப் பிரபாகரன் மட்டும் காரணம் அல்ல. இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள்தான் பொறுப்புக் கூற வேண்டும். இனிவரும் காலங்களிலாவது இந்த நிலையை மாற்ற வேண்டும். அதற்கு அரசியலமைப்பில் துரிதமாக மாற்றங்களைச் செய்து அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும். இந்த ஆணைக்குழு விசாரணை முடியும்வரை இதற்கு காத்திருக்கக்கூடாது.

ஜனாதிபதி நாட்டு மக்களுக்குத் தமிழில் உரையாற்றுவதைப் போல் எதிர்க்கட்சியினரும் பின்பற்றினால் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான ஓர் ஆரம்பமாக அமையுமென்றும் ஜயந்த தனபால குறிப்பிட்டார்.

ஆணைக்குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா தலைமையில் நடைபெற்ற விசாரணையில் சாட்சியமளித்த அவர்,

மனித உரிமைகளைப் பேணி இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இன மற்றும் மத நல்லுறவுச் சட்டமொன்றை உருவாக்க வேண்டும். இனங்களுக்கிடையே குரோதத்தை ஏற்படுத்துவோருக்கு எதிராக இந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.

மதுவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஜனாதிபதியின் செயல் திட்டம் வெற்றியளித்திருக்கிறது. அதுபோல் ஆயுதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில், அரச படைகளைத் தவிர எவரும் ஆயுதம் வைத்திருக்க முடியாது என்ற சட்டம் இருந்தது.

அதுபோல், பொலிஸ், இராணுவம் உள்ளிட்ட அரச பாதுகாப்புப் பிரிவினரைத் தவிர வேறு அமைப்புகள், தனி நபர்கள் ஆயுதம் வைத்திருப்பது மக்களுக்குப் பாதுகாப்பானதாக இருக்காது. அதேவேளை, பொலிஸ் சேவைக்குத் தமிழர்களைச் சேர் த்துக் கொள்வதைப் போன்று முப்படையிலும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். அரசியலமைப்பில் மக்களின் அபிலாஷைகள் பிரதிபலிக்கப்பட வேண்டும். ஒரு சிறு குழு சேர்ந்து அரசியலமைப்பை உருவாக்குவதைவிட கிராமிய மட்டத்தில் மக்களின் கருத்துகளும் அறியப்பட வேண்டும். அப்போதுதான் ஜனநாயக விழுமியத்தைச் சரியாகப் பேண முடியும்.

சர்வதேச சமூகத்துடன் செயலாற்றுவது சவால் மிக்க விடயமாகும். முரண்பட்டுக்கொண்டு நாம் செயற்பட முடியாது. இலங்கையின் நிலவரத்தை அறிவதற்கு அவர்களுக்கு நாம் வாய்ப்பளிக்க வேண்டும். இராஜதந்திர மட்டச் செயற்பாட்டை இன்னும் விளைதிறன் மிக்கதாக மேம்படுத்த வேண்டும்.

வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களைக் கவர்வதற்கும் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

முதலில் இலங்கையர்கள் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பேர் வாழ்கிறார்கள் என்பதைப் பற்றிய தரவுகளைத் திரட்ட வேண்டும். அதற்கு நமது வெளிநாட்டுத் தூதுவர்களை, இலங்கையர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அனுப்ப வேண்டும். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தொடர்பில் அந்நாடு சிறந்த பணியை ஆற்றுகிறது.

அதேபோல நாமும் நமது பணிகளை விரிவாக்க வேண்டும்.

உயிரிழந்த புலி உறுப்பினர்களின் மயானங்களுக்கு அவர்களின் உறவினர்கள் சென்று அவர்களுக்கு கெளரவம் செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதன் மூலம் அவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்’ என்றும் குறிப்பிட்டார்.

Sunday, August 22, 2010

ஜனாதிபதியின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் இப்தார் பெருமளவிலான முஸ்லிம்கள் பங்கேற்பு.


Sunday, August 22, 2010
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் நேற்று முன்தினம் நடத்திய ‘இப்தார்’ நிகழ் வில் ஏராளமானோர் பங்குபற்றினர். அமைச்சர்கள், பிரதி அமைச் சர்கள், எம்.பீ மார்கள், உலமாக்கள், ஊடக வியலாளர்கள், ராஜதந்திரிகள் என அநேகர் ‘இப்தா’ரில் பங்குபற்றினர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரமுகர் களுடன் அமர்ந்து பேரீத்தம்பழத்துடன் நோன்புக் கஞ்சி அருந்தினார்.

மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலான இங்கு பேசுகையில், முஸ்லிம் களின் உற்ற நண்பரான ஜனாதிபதி பலஸ் தீன விவகாரத்தில் காட்டிய, காட்டி வரும் பேரார்வத்தையும், பலஸ்தீன மக்களுக்கான அவரின் ஆதரவையும் பாராட்டிப் பேசினார்.

இலங்கை வானொலியில் ஐந்து நேரத் தொழுகைக்கான ‘பாங்கை’ ஒலிபரப்பச் செய்துள்ள அவர் முஸ்லிம்களை மிகவும் நேசிப்பவர் என்றும் கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் பேசுகையில், ஜனாதிபதி முஸ்லிம்களைக் கெளரவிக்க தமது அலரி மாளிகையில் இவ்வாறு ‘இப்தார்’ மஜ்லிஸை ஏற்பாடு செய்துள்ளமை பாராட்டத்தக்கது.

அவர் முஸ்லிம்களுக்காக நிறைய சேவை செய்துள்ளார். முதலிலும் தாயகம், இரண்டாவதும் தாயகம், மூன்றாவதும் தாயகம் என்ற உயர் கோட்பாட்டை அவர் வலியுறுத்தி வருவது பெரிதும் பாராட்டத்தக்கது என்றார்.

நோன்பின் மாண்புகள் பற்றி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மெளலவி எஸ். எல். எம். ஹஸன் (அல் அஸ்ஹரி) உரையாற்றினார்.

எகிப்திய ‘காரி’மாரின் ஓதல்களும் இடம்பெற்றன. இப்தார் நிகழ்ச்சிகள் வானொலி முஸ்லிம் சேவையின் ஊடாகவும், ரூபவாஹினி ஊடாகவும் நேரடியாக ஒலி, ஒளிபரப்பு செய்யப்பட்டன.

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வரவுள்ளார்.

Sunday, August 22, 2010
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும், அதற்கு முன்னர் இந்தியாவின் உயர் இராஜதந்திரிகள் எவரும் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக இந்திய அரசு இதுவரையில் அறிவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இடம்பெயர் மற்றும் மீள் குடியேற்றப்பட்ட மக்களின் நிலைமைகளை நேரில் பார்வையிடும் நோக்கிலும், மீனவர் பிரச்சினை குறித்து ஆராய்வதற்கும் விசேட பிரதிநிதி ஒருவர் இலங்கைக்கு விரைவில் விஜயம் செய்ய உள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிரூபா ராவ் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த விசேட பிரதிநிதி ஒர் அரசியல்வாதியாக இருக்கக் கூடும் எனவும், குறித்த பதவி நிரந்தரமான ஓர் பதவியாக அமையும் எனவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக வடக்கில் அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இலங்கைக்கான விசேட பிரதிநிதியாக உள்துறை அமைச்சர் சிதம்பரம் அல்லது டீ.ஆர் பாலு விஜயம் செய்யலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Saturday, August 21, 2010

இலங்கை மீனவர் 42 பேர் இந்தியாவிலிருந்து திரும்பினர்,

Saturday, August 21, 2010
தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டிருந்த இலங்கைக் கடற்றொழிலாளர் 42 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் பயணித்த 9 படகுகள் இதுவரை இலங்கையை வந்தடைந்துள்ளதாகக் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

26 கடற்றொழிலாளர்களை ஏற்றிய 5 படகுகள் நேற்றுப் பிற்பகல் இலங்கையை வந்தடைந்துள்ளதாக அமைச்சு கூறுகிறது.

ஏற்கனவே 16 கடற்றொழிலாளர்கள் 4 படகுகளில் கடந்த 16 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

தமிழகக் கரையோரப் பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள ஏனைய மீனவர்களையும் விடுவிப்பதற்குத் தொடர்ந்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சு கூறுகிறது.

Wednesday, August 18, 2010

இந்தியாவின் அரச உயர் அதிகாரி ஒருவர் அடுத்த மாத ஆரம்பத்தில் இலங்கை வருகின்றார் என்று இந்திய வெளியுறவு அமைச்சுச் செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார்.

August ,19, 2010
இந்தியாவின் அரச உயர் அதிகாரி ஒருவர் அடுத்த மாத ஆரம்பத்தில் இலங்கை வருகின்றார் என்று இந்திய வெளியுறவு அமைச்சுச் செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார். அவர் இன்று சென்னையில் தமிழ் நாடு முதல்வர் மு.கருணாநிதியைச் சந்தித்தார். இச்சந்திப்பைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களுடன் பேசியபோதே அவர் இத்தகவலை வெளியிட்டார்.

இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை அவர் நேரில் பார்வை இடுவார். ஈழத் தமிழர் விவகாரம் குறித்தும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல் குறித்தும் இலங்கைத் தரப்பினருடன் அவர் பேச்சு நடத்துவார். யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு இந்தியா உதவி செய்ய தயாராகவே உள்ளது.

மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு அப்பால் அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும்.அவர்களின் வாழ்வாதாரங்களையும் முன்னேற்ற வேண்டும். எப்படி எல்லாம் வடக்கு, கிழக்கு மாகாண மக்களை முன்னேற்ற முடியுமோ அப்படியெல்லாம் முன்னேற்ற வேண்டும்.

வடக்கு கிழக்கில் 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுப்போம் என்று உறுதிமொழி வழங்கி உள்ளோம். 1000 வீடுகளுடன் எமது திட்டத்தை விரைவில் ஆரம்பிப்போம். யாழ்ப்பாண மக்களின் நலனை உத்தேசித்து யாழ்.குடா நாட்டில் இவ்வருட இறுதிக்குள் துணைத் தூதரகம் ஒன்றையும் அமைக்க உள்ளோம்.
தெரிவித்துள்ளார்.

வன்னியில் ராணுவத்தினருக்கான தங்குமிடங்களே அமைக்கப்பட்டு வருகின்றன குடியேற்றங்கள் அல்ல என்கிறார் கோத்தாபய.

August ,19, 2010
யுத்த காலத்தில் புலிகள் பொதுமக்களின் சாதாரண ஆடைகளை அணிந்து தாக்குதல் நடத்தியதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதனால் பொதுமக்களையும் புலிகளையும் பிரித்து அறிவதில் சிக்கல் நிலைமை காணப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்த சில தரப்பினர் யுத்த காலத்தில் தற்பாதுகாப்பிற்காக ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறெனினும், குறித்த குழுக்களின் ஆயுதங்கள் தற்போது களையப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

-------------------------------------------------------------------------------------
வன்னியில் ராணுவத்தினருக்கான தங்குமிடங்களே அமைக்கப்பட்டு வருகின்றன – குடியேற்றங்கள் அல்ல என்கிறார் கோத்தாபய:‐
யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழர் பூர்வீகமான வன்னியில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களை மறுத்துள்ள இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ வன்னியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருக்கும் இராணுவ வீரர்களுக்கான தங்குமிடங்களே அங்கு அமைக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க அணைக்குழவினால் மேற்கொள்ளப்பட்ட இன்றைய விசாரணையில் சாட்சியமளிக்கையிலேயே அவர் இப்படி கூறினார்.

சர்வதேச கற்கைகளுக்கான கதிர்காமர் நிலையத்தில் இன்று நடைபெற்ற இந்த விசாரணையின் போது இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பு செயலளார் கோத்தபாய ராஜபக்ஸ சாட்சியமளித்தார்.

இங்கு சாட்சியமளித்த பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்ததாவது :‐

புலிகள் மிகவும் சக்திவாயந்த போராட்ட அமைப்பு என்பதை நாம் முதலில் ஏற்றுக்கொள்ளவேண்டும். அவர்களிடம் இராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படைகளும் இருந்தன.

நாம் மிகவும் எளிதான அல்லது சுலபமான அமைப்பை வெற்றிகொள்ளவில்லை. மிகவும் சக்கதிமிக்க பலம் வாய்ந்த 30 ஆயிரத்திற்கும் அதிகமான போராளிகளைக் கொண்ட அமைப்பையே வெற்றிக்கொண்டுள்ளோம்.

நடைபெற்று முடிந்த யுத்தத்தில் புலிகள் கொல்லப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் காணப்பட்ட பாரியளவிலான ஆயுதங்கள் விமானம், பீரங்கி உட்பட பலவும் அழிக்கப்பட்டுள்ளது.

இலங்கை படைத்தரப்பிலே 6 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், சுமார் 30 ஆயிரம் பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

ஆகவே இவ்வாறான அழிவை ஏற்படுத்திய புலிகளுக்கு எவ்வளவு இழப்பு நேர்ந்திருக்கும் என யாரும் கதைப்பதில்லை. மாறாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மற்றம் கொல்லப்பட்ட மக்கள் குறித்தே அதிகமாக பேசப்படுகின்றது என்றும் கூறினார்.

இதன் போது வன்னியிலே சிங்கள குடியேற்றங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் வன்னியிலே சிங்கள குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை எனவும், அங்கு கடமையில் ஈபட்டிருக்கும் இராணுவ வீரர்களுக்கான தங்குமிட வசதிகளே ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக இந்தியா கவலைகொள்ள வேண்டிய அவசியமில்லை:பீஜிங்கில் ஜி.எல். பீரிஸ் அறிவிப்பு.

August ,19, 2010
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்மாணம் தொடர்பாகவோ அன்றி அந்தத் துறைமுகம் இராணுவத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுமா என்பது தொடர்பாகவோ கரிசனை கொள்ளவேண்டிய தேவை இந்தியாவிற்கு இல்லை என்று சிறிலங்காவினது வெளி விவகார அமைச்சர் பேராரியர் ஜி.எல் பீரிஸ் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் அறிவித்திருக்கிறார்.

அதிகாரபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு சீனா சென்றிருக்கும் அமைசர் பீரிஸ் அங்கு இந்தியாவினைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

சிறிலங்காவின் தென்முனையில் அப்பாந்தோட்டைப் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் துறைமுகாமானது போர்சார்ந்த அல்லது இராணுவத் தேவைகளுக்காக ஒருபோதும் பயன்படுத்தப்படமாட்டாது. அது தனித்துவமாக வர்த்தகம்சார் செயற்பாடுகளுக்காகவே உபயோகிக்கப்படும்.

உள்ளகத் துறைமுகத்தினை அதாவது கடற்பரப்புக்குள் இல்லாமல் நிலப்பரப்புக்குள் துறைமுகத்தினை அமைத்திருக்கும் ஒரேயொரு ஆசிய நாடு சிறிலங்காதான்.

துறைமுகம் அமைந்திருக்கும் அம்பாந்தோட்டை பகுதியினைக் குறித்த சில தரப்புகள் சந்தேகக்கண் கொண்டு பார்ப்பதாக அராசங்கத்தின் இராசதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.

சீனாவின் நிதியுதவியுடன் இந்தத் துறைமுகம் அமைக்கப்பட்டு வருவது மற்றும் நிர்மாண பணிகளில் சீனப் பொறியியலாளர்களும் பணியாளர்களும் ஈடுபட்டிருப்பது தொடர்பில் அண்மையில் பாராளுமன்ற விவாதத்தின் போது கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

சீனாவின் காலணித்துவ நாடாக சிறிலங்கா மாறுவதற்கு அரசாங்கம் வழிசெய்கிறது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான தயாசிறி ஜெயசேகர பாராளுமன்றில் குற்றம் சுமத்தியிருந்தார்.

"அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்மாணம் தொடர்பாகவோ அன்றி அந்தத் துறைமுகம் இராணுவத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுமா என்பது தொடர்பாகவோ கவலை கொள்ளவேண்டிய தேவை இந்தியாவிற்கு இல்லை.

இந்தத் துறைமுக நிர்மாணத்தில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா இந்தியாவையே முதலில் கோரியிருந்தபோதும் இந்தியா அதனை ஏற்றுக்கொள்ள மறுத்ததுதான் வரலாறு" என பத்திரிகையாளரின் கேள்விக்குப் பதிலளித்தபோது அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

பொருளாதார அமைச்சரும் அதிபர் ராஜபக்சவின் சகோதருமான பசில் ராஜபக்ச, அதிபரின் செயலாளர் வீரதுங்க மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் அடங்கிய சிறப்புக் குழு இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ பயணத்தினை மேற்கொண்டு கடந்த 15ம் நாள் இந்தியாவிற்குப் புறப்படவிருந்தனர்.

ஆனால் தற்போது இந்த விஜயம் 24ம் திகதிக்குப் பிற்போடப்பட்டிருக்கிறது.

சிறிலங்காவில் இந்திய தனது முதலீடுகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையிலேயே இந்த உயர்மட்டக் குழுவின் இந்திய விஜயம் இடம்பெறுவதாகக் கூறப்படுகிறது.

அம்பாந்தோட்டைப் பகுதியில் சீனா முன்னெடுத்துவரும் பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான குழப்பங்களும் சந்தேகங்களும் நிலவிவருகின்ற இந்த வேளையில் இந்தக் குழுவினது இந்திய விஜயம் அமைகிறது.

பசில் ராஜபக்சவின் தலைமையிலான குழு 24ம் நாளன்று மாலை புதுடில்லி நோக்கிப் பயணமாகிறது. இந்தியாவின் பல்வேறுபட்ட மாநிலத் தலைவர்களையும் இவர்கள் 24ம் மற்றும் 25ம் நாட்களில் சந்தித்து உரையாடவுள்ளார்கள்.

வீடமைப்புத் திட்டங்களுக்குக் காணி விபரம் திரட்டப்படுகிறது.

Wednesday, August 18, 2010
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான சகல காணிகளினதும் விபரங்களைத் திரட்டும் நடவடிக்கையை அதிகார சபை ஆரம்பித்துள்ளது.

வடக்கு கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் வீடமைப்புத் திட்டங்களை நிர்மாணிப்பதற்காக இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

காணிகளின் சகல விபரங்களையும் திரட்டும் நடவடிக்கைகள் இம்மாத இறுதிக்குள் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

மிகவும் குறுகிய காலத்திற்குள் காணிகளின் பட்டியலொன்றைச் சரியான முறையில் தயாரித்துக்கொள்ளக் காணி நடவடிக்கைக் குழு ஒழுங்குகளை மேற்கொள்ளும்.

இந்த நடவடிக்கையின்போது கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, கம்பஹா, கண்டி, ஆகிய மாவட்டங்கள் சம்பந்தமாக விசேட கவனம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இம்மாவட்டங்களில் குறைந்த பட்சம் 500 ஏக்கர் அளவிலான காணி விபரங்கள் திரட்டப்பட்டு, வீடில்லாத குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்குத் திட்டம் தயாரிக்கப்படவுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.

வடபகுதி மாணவருக்கு இலவச கல்விச் சுற்றுலா.

Wednesday, August 18, 2010
வடபகுதிப் பாடசாலை மாணவர்களை இலவசக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டமொன்றை வட மாகாண சபை ஆரம்பித்துள்ளது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 500 பாடசாலை மாணவர்கள் இவ்வாறு வெளி மாவட்டங்களுக்கான இலவசச் சுற்றுலாவுக்கெனத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

இதன் முதற் கட்டமாகக் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 250 மாணவர்களும் 20 ஆசிரியர்களும் நாளை தமது சுற்றுலாவை ஆரம்பிக்கவுள்ளனர்.

தரம் 8 முதல் க.பொ.த. சாதாரண தரம் வரை கல்வி கற்கும் மாணவர்கள் இதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அதற்கு 16 இலட்சம் ரூபா நிதியையும் வட மாகாண சபை ஒதுக்கியுள்ளது.

இலவச சுற்றுலாத் திட்டத்தின் கீழ் சுமார் எட்டு நாட்களுக்குக் குறிப்பிட்ட மாணவர்கள் வெளி மாவட்டங்களுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

சுற்றுலாவின் போது மாணவர்கள் பாராளுமன்றம், நூதனசாலை, உயர் கல்லூரிகள், அநுராதபுரம், காலி, மாத்தறை, கதிர்காமம், கண்டி, நுவரெலியா மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கும் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

Thursday, August 12, 2010

மோ;வின் சில்;வாவூக்கு எதிரான நடவடிக்கையை கட்சியே தீர்மானித்தது!

Thursday, August 12, 2010
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேற்கொண்ட தீர்மானத்தின் அடிப்டையிலேயே முன்னாள் பிரதியமைச்சா; மோ;வின் சில்வாவூக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாக சுற்றாடல் அபிவிருத்தியமைச்சா; அநுர பிரியதாஷன யாப்பா தெரிவிததார்.

அமைச்ரவை முடிவூகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளா; சந்திப்பு இன்று பிற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளா; ஒருவா; எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவா; இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சா; மேலும் கருத்துத் தெரிவிக்கையில்

எவரையூம் திருப்பதிப்படுத்துவதற்காகவோ அல்லது எவரது கோரிக்கையையூம் நிறைவேற்றவோ அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிருவாக உறுப்பினாகள் மேற்கொண்ட தீhமானத்தின்படி அவா; கட்சியிலிந்து நீக்கப்பட்டுள்ளார்

இத்தீ மானத்தின் அடிப்படையிலேயே அவரது பிரதியமைச்சா; பதவியூம் பறிக்கப்பட்டுள்ளது. இவருக்கெதிராக ஒழுக்காற்று விசாரணைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவூம் அமைச்சார் கூறினார்.

வீழ்ச்சியும் எழுச்சியும் பெற்று எல்லாவற்றையும் மாற்றிப் போட்ட மே மாதம் (பகுதி 4)

Thursday, August 12, 2010
தனிநாடு என்ற 'உச்சக்கட்ட' த் தீர்வுக்கு முன்பு வேற எந்த அரசியல் தீர்வும் 'சும்மா' என்ற உசுப்பேத்தல் நன்றாகவே தமிழ் மக்கள் மத்தியில் எடுபட்டது. ஏனைய அரசியல் தீர்வுகள் துரோகத்தனமானது காட்டிக் கொடுப்பு என்ற புலிகளின், புலிகளின் மூதாதையரின் பிரச்சார யுக்திகளுக்கு மத்தியில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கான வேறு எந்த அரசியல் தீர்வும் எடுபடாமல் போனது புலி தவிர்ந்த ஏனைய ஈழவிடுதலை அமைப்புக்களின் அரசியல் முன்னெடுப்புக்களை மக்கள் மத்தியில் பெரியளவில் பிரச்சாரப்படுத்தி செயற்பட முடியாமல் போனதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்திருந்தது. கூடவே கருத்துக்களைச் சொல்ல தடை என்ற புலிகளின் ஏகபோக செயற்பாடு மக்களுக்கான உண்மை நிலமைகளையும் சாத்தியமான அரசியல் தீர்வு பற்றி செயற்பாடுகளையும் அவற்றைப் பெறுவதற்கான அணுகு முறமையினையும் இதற்கு புலிகள் தடையாக இருப்பதையும் அம்பலப்படுத்தும் வாய்ப்புக்களை இல்லாமல் செய்திருந்ததும் ஏனைய அமைப்புக்கள் அரசியல் ரீதியாக பலமாக இருந்தாலும் ஆதரவு ரீதியில் பலம் பொருந்திய அமைப்பாக தொடர்ந்தும் தம்மை வளர்தெடுக்க முடியாமல் போனது. கூடவே இவ் அமைப்புக்களின் ஆயுதப் போராட்ட காலத்தில் செயற்பட்ட முறைமைகளில் உள்ள சில விரும்பத்தகாத நிகழ்வுகளும் இன்னொரு காரணமாக இருந்திருக்கின்றது. கூடவே தமிழ் சமூகத்திலிருந்த முற்போக்கு புத்திஜீவிகளை புலிகள் இல்லாதொழித்தது இச் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு மட்டும் அல்லாமல் செயற்படுத்த முடியாமல் போனதற்கும் பெரும் தடையாக இருந்தன. அதனையே ஏகாதிபத்தியங்களும் விரும்பின. இனவாதிகளும் விரும்பின. இதற்கு செயல்வடிவம் கொடுப்பதில் என்னமோ புலிகள் வெற்றிடைந்ததும் ஏனைய விடுதலை அமைப்புகள் தோற்றுப் போனதும் உண்மைதான். இவை எல்லாவற்றிற்கும் மத்தியில் மக்கள் என்னமோ தோற்றுப் போனவர்கள் தான்.

புலிகளின் யுத்தமானது நாளுக்கு நாள் தனது நண்பர் வட்டத்தை குறுக்கி எதிரி வட்டத்தை பெருக்குவதில் பெருவெற்றி கண்டே வந்தது. இதனைப் பற்றி புலிகள் எப்போதும் கவலைப்பட்டதும் இல்லை. வெற்றிகரமான இராணுவத் தாக்குதல் மூலம் எல்லாவற்றையும் சரிகட்டிவிடலாம் என்ற மமதையும் புத்திசாதுர்யம் அற்ற நிலையும் தொடர்ந்து வந்தன. புலிகளால் நிகழ்த்தப்பட்ட இராணுவத்தாக்குதல் மூலம் மாங்குளம் இராணுவ முகாமின் வீழ்ச்சியும், முல்லைத்தீவு இராணுவமுகாமின் விழச்;சியும், யாரும் எதிர்பாராத ஆனையிறவு இராணுவமுகாமின் வெற்றி கொள்ளலும் வெறும் எண்ணிக்கையைக் காட்டி உண்டியல் குலுக்க உதவியதே ஒழிய அரசியல் ஆதரவுத் தளத்தை மக்கள் மத்தியிலும், சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் பலப்படுத்திக் கொள்ள உதவவில்லை என்பதை புலிகளுக்கு உணர்த்தவில்லை. சர்வதேச சமூகத்திடம் தமது போராட்டத்திற்கான தார்மீக ஆதரவை புலிகள் எப்போதும் வளர்த்துக் கொள்ளவில்லை. மாறாக தமது மக்கள் விரோத செயற்பாட்டினால் பயங்கரவாதிகள் என்ற முத்திரையை தாராளமாக குத்திக்கொண்டனர்.

இதேவேளை தமிழ் மக்கள் மத்தியில் தலைவரின் வழிகாட்டலில் இராணுவ வெற்றியீட்டப்பட்டது என்ற தனிநபர் சாகச வணக்கத்தை மேலும் வளர்த்து அவரை வெல்ல முடியாத அழிக்க முடியாத கடவுளாக சிருஷட்டிக்க வைத்தது. ஆனால் நிஜத்தில் பிரபாகரன் அப்படியொன்றும் சிறந்த இராணுவ வியூக வகுப்பாளராகவோ அல்லது செயற்பாடாளராகவோ இருக்கவில்லை. ஏன் மாவீரராகவோ இருக்கவில்லை. மாறாக கோழையாக இருந்தார். இதுதான் செட்டியை கல்வியங்காட்டில் முதுகில் சுட்டுக் கொன்றதில் ஆரம்பித்து, முள்ளிவாய்காலில் இறுதி நாட்களில் பதுங்கு குழிக்குள் மட்டும் பதுங்கி இருந்து தனது மேற்குல மீட்போனை மட்டும் எதிர்பார்த்திருந்த நிகழ்வும் கழுத்தில் எந்நேரமும் கட்டியிருந்து புலுடா விட்ட சயனைற் குப்பியை கடிக்காமல் முழம் தாள் இட்டு மட்டியிட்ட செயற்பாடுகளும் ஆகும். புலித்தலைவர் யாராலும் ஏமாற்றப்படவில்லை தன்னாலே தானே ஏமாற்றப்படார். முட்டாள் ஆக்கப்பட்டார். முடமாகவே என்றும் இருந்தார் என்பதே உண்மை நிலை. புலிகள் அமைப்பும் கறையான் பிடித்த கிடுகு வேலியைப் போல் பலமற்ற மறைப்பு மாயத் தோற்றத்தைக் கொண்டிருந்ததே உண்மை. அதுதான் தொடர்ந்து மகிந்த தட்ட வெளிக்கிட பொலு பொலுவென்று கொட்டுப்பட்டதற்கு காரணம். வான் தரை, கடல், ஈருடகம் என்பவை பிரச்சார யுக்திக்கு உதவியனவேயொளிய மாறாக இலங்கை இராணுவத்தை அடித்து கலைக்க, ஏன் தடுத்து நிறுத்த போதுமானவையாக இருக்கவி;ல்லை என்பதே புலிகளின் பரிதாப நிலை.

உண்மையில் புலிகளின் ஓரளவு பலமான இராணுவப்பிரிவு கடற்புலிகள் தான். அதுதான் போரை மாவிலாற்றில் முடுக்கிவிட முன்பே இலங்கை அரசு கடல் புலிகளைப் பலவீனப்படுத்தி கடற் புலிகளை கட்டிப்போடும் செயற்பாட்டையே முதலில் கன கச்சிதமாக இந்திய இராணுவத்தின் ஆசீர்வாதத்துடன் செய்து முடித்தனர். கூடவே சர்வதேச சமூகத்திடம் புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம், நம்பத் தகுந்தவர்கள் அல்லர், அரசியல் தீர்விற்கு ஓத்து வரமாட்டார்கள் போன்றவற்றை புலிகளாலேயே நிறுவிவிட்டு போருக்கு புறப்பட்டனர். இதற்கு புலிகளின் ரணில் - பிரபா இன் நோர்வே அனுசரணை காலத்து சமாதான காலத்து செயற்பர்டுகளும், சந்திரிகா அம்மையார் காலத்து சர்வதேசங்களுடனான இராஜதந்திர செயற்பாடுகளும் பெரிதும் உதவின. சர்வதேச சமூகத்திடம் புலிகள் தமது தலையில் தாமே மண்ணைவாரிப் போடுவது போல் அம்பலப்பட்டுகொண்டன.

புலிகளினால் பெரும் நிலப்பரப்பு கட்டுபாட்டிற்குள் இருந்த காலத்திலும் விவசாயம், கடற்தொழில். கால்நடை வளர்ப்பு போன்ற எம் மண்ணிற்கு ஏற்ற சுயபொருளாதாரத்தை கட்டியெழுப்புதலில் புலிகள் எப்போதும் எவ் முன் முயற்சிகளையும் எடுத்திருக்கவில்லை. சரி கடலுக்குதான் செல்ல முடியாது இலங்கை இராணுவம் அனுமதிக்கவில்லை நிலப்பரப்பெங்கும் வியாபித்திருந்த குளங்கள் குட்டைகள் நீரேரிகளில் மீன்வளர்ப்பு திட்டங்களை ஊக்கிவித்திருக்கலாம்தானே. விவசாயத்தை தன்னியல்பாக செய்வதற்கு அனுமதித்து இருக்கலாம்தானே. இவற்றிற்கு எல்லாம் பெரிய நவீன உபகரணமோ அல்லது பொருட்களோ தேவையில்லை. சரி இவர்கள்தான் முன்னெடுக்கவில்லை என்றாலும் இயல்பாகவே எம்மக்களால் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த இவ் தொழில் முயற்சிகளை ஊக்கிவிக்காவிட்டாலும் பறவாய் இல்லை குழப்பாமல் இருந்திருக்கலாம். மாறாக உற்பத்திப் பொருட்களை அடிமாட்டு விலைக்கு தமக்கு மட்டுமே விற்க வேண்டும் என்ற நிர்பந்தம் போட்டனர். தாம் கொள்வனவு செய்து அதே மக்களுக்கு கொள்ளை இலாபத்தில் விற்றனர். முதலாளித்துவம் செய்யும் தரகு வேலைகளிலும், வரிகளிலும், கப்பத்திலும் உழைப்பு, உற்பத்தியில் ஈடுபடாத பணம் ஈட்டும் பொருளாதாரக் கொள்கை(ள) களையே புலிகள் கொண்டிருந்தனர்.

இதனால் விரக்தி அடைந்த மக்கள் உற்பத்தியில் ஈடுபடுவதில் மெது மெதுவாக விலத்தி யாரிடமாவது தங்கியிருத்தல் என்ற நிலைக்கு தள்ளப்பட்டன ர், மிகச்சிலர் வெளிநாடுகளில் உள்ள தமது உறவுகளிடத்தும், இன்னும் சிலர் அரசு கொடுக்கும் நிவாரண பொருட்களிலும் இன்னும் சிலர் புலி உறுப்பினர்களாக தம்மை காட்டிக்கொண்டு உயிர்வாழ பழகிக் கொண்டனர். மொத்தத்தில் உற்பத்தியில் ஈடுபடுவதில்லை என்ற சோம்பேறித்தனமான சமூகத்தை கட்டியெழுப்புவதில் புலிகளின் பங்கு மகத்தானதாக இருந்தது. புலிகளின் ஆயுதப் போராட்டத்தில்தான் புலிகளின் தலைவன் தான் சாப்பிடும் தோசை மாவிற்கு கூட தனது எதிரி இலங்கை அரசிடம் கையேந்தி நிற்கும் நிலமையில் இருந்தான். இதனையும் இலங்கை அரசே வழங்கிக்கொண்டு அவனுக்கு எதிரான யுத்தத்தை தொடர்ந்தது. இந்த யுத்தம் ஒரு வலிமை மிக்க உழைக்கும் மக்களை சோம்பேறிகளாக ஆக்கியும் விட்டுச் சென்றிருக்கின்றது என்பது போரின் பின்னான நிகழ்வுகளில் கிராமங்கள் தோறும் உணரப்படுகின்றது.
(தொடரும்...)

வீழ்ச்சியும் எழுச்சியும் பெற்று எல்லாவற்றையும் மாற்றிப் போட்ட மே மாதம் (பகுதி 3)

Thursday, August 12, 2010
நாச்சிக்குடா வீழ்ந்தவுடன் புலித்தலைவன் பிரபாகரன் ஓட வெளிக்கிட்டதுதான் உண்மையான விடயம். ஆனால புலித் தலைவனின்; தாமதமான தீர்மானத்தால் தப்பி ஓடமுடியாமல் மறிக்கப்பட்டது தான் இலங்கை அரசுபடைகளின் வியூகம். மாவிலாற்றில் போர் தொடங்கப்படுவதற்கு முன்பு இலங்கை அரசபடைகள் செய்த போர் வியூகங்களில் முதன்மையானது கடல் பகுதியில் உள்ள புலிகளின் செயற்பாட்டை முற்று முழுதாக தடுத்து நிறுத்தல். இடைவிடாது தொடர்ந்து யுத்தத்தை புலிகளுக்கு எதிராக தொடர்தல் என்ற தாக்குதல் வியூகம். முந்திய அரசுகள் செய்த அடிதல் பின்பு பேசுதல் மீண்டும் அடித்தல் மீண்டும் பேசுதல் என்ற கண்ணாம் பூச்சி விளையாட்டை செய்வதில்லை என்ற தீர்மானத்துடன் தான் மாவிலாற்றில் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை ஆரம்பித்தது மகிந்த அரசு.

புலிகளால் பொதுமக்கள் முள்ளிவாய்கால்வரை வலுக்கட்டாயமாக சாய்த்துச் செல்லப்பட்டதுதான் உண்மை நிகழ்வு. இதில் சிறிய பகுதி மக்கள் விரும்பியே தவிர்க்க முடியாமல் அவர்களுடன் சென்றார்கள். தம் பிள்ளைகள் புலிகளிடம் உள்ளனர். சிலர் விருப்புடன், பலர் விருப்பின்மையுடன் செல்லவேண்டிய சூழ்நிலைப் பொறியில் இருந்தனர். யுத்தத்தின் போது கிழக்கு மக்கள் செய்த புதிசாலித்தனமாக புலிகளின் பிடியிலிருந்த பிரதேசத்திலிருந்து அரசு விடுவித்த பிரதேசங்களுக்கு இடம் மாறுதல் என்பதை மாவிலாறு தொடக்கம் வெருகல் ஊடாக மட்டக்களப்பு ஐத் தொடர்ந்து அம்பாறை வரை கடைப்பித்து வந்தனர். இவ்விடயத்தில் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் சமயோசித புத்திசாலித்தனமான செயற்பாட்டைக் கொண்டிருந்தனர். இதனால் தான் 50 இற்கும் குறைவான பொது மக்களின் உயிர் இழப்புடன் கிழக்கு மாகாணம் புலிகளின் கைகளில்? இருந்து இலங்கை அரசின் கைகளுக்கு முழுமையாக மாறியமைகான முக்கிய காரணியாக அமைந்தது. வேறு பல விடயங்களும் காரணமாக அமைந்திருந்தன. சிறப்பாக கருணாவின் வெளியேற்றமும் முஸ்லீம்மக்கள், தமிழ் மக்களுடன் இணைந்த இடம்பரம்பலுமாகும். இதனை வன்னி மக்கள் செய்யவில்லை, செய்யமுடியவில்லை.

கிழக்கு மாகாண தமிழ் மக்கள் பாவித்த இந்த தந்திரோபாய இடம்பெயர்வை வடக்கு மக்கள் சிறப்பாக வன்னி மக்கள் தன்னக்தே கொண்டிருக்கவில்லை. யாழ்பாணத்து மக்கள் 1995ம் ஆண்டு நடைபெற்ற தமது முதலாவது புலிகளுடனான வலிந்த இடம் பெயர்வில் கிடைத்த அனுபவத்தில் இருந்து கற்ற பாடத்தினால் இப் பொறியினுள் தடக்கி விழாமல் தப்பிக் கொண்டனர். மன்னார் மக்களில் ஒரு பகுதியினரும் இது போன்ற நிலமையில் இருந்தமையினால் தம்மை காத்துக்கொள்ள முடிந்தது. ஆனால் துணுக்காயில் ஆரம்பித்து இதனைத் தொடர்ந்த பிரதேசங்கள் ஊடாக கிளிநொச்சி வரையிலான மக்கள் இது போன்ற செயற்பாட்டை கொண்டிருக்கவில்லை. கிளிநொச்சியின் வீழ்ச்சிக்குப் பின்பு விழித்தெளிந்த மக்கள் புலிகளின் பொறிக்குள் தாம் முழுமையாக வீழ்ந்து விட்டதை உணர்ந்து சுதாகரித்து தப்பிக்கும் செயற்பாட்டை செய்யமுடியாதவாறு புலிகளாலும், இலங்கை அரசாங்கத்தின் படைகளினாலும் பின்னப்பட்ட வலைப்பின்னலுக்குள் வீழ்ந்து விட்டதுதான் பரிதாபத்திலும் பரிதாபம்.

ஏ 9 பாதைக்கு கிழக்காக புலிகளால் இழுத்துச் செல்லப்பட்ட நிலமைகள் ஏற்பட்டதும் பொதுமக்கள், புலிகள், புலி ஆதரவாளர்கள் யாபேருக்கும் தெரியும் பொறிக்கும் மாட்டிவிட்ட நிலமை ஏற்பட்டு விட்டது என்று. இந் நிலையில் புலிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் தப்பி வர முடியாது. ஆனால் பொது மக்கள் அவ்வாறு செய்ய முற்பட்டனர். ஆனால் புலிகள் பொது மக்களை அவ்வாறு செயற்பட அனுமதிக்கவில்லை என்பதே முதன்மையானது. இதற்கு எவ்வளவோ குறைந்த அளவிலேயே இராணுவத்தின் பகுதிக்கு வந்தால் தாம் எவ்வாறு இலங்கை இராணுவத்தால் கையாளப்படுவோம் என்ற பயப்பிராந்தியம் பொதுமக்களிடம் இருந்தன. புலிகளின் துப்பாக்கிகள் இக்காலப்பகுதியில் துப்பாக்கி வைத்திருந்த இராணுவத்திற்கு எதிராக செயற்பட்டதை விட துப்பாக்கி இல்லாத பொதுமக்களுக்கு எதிராக பலமாக செயற்பட்டது. மே 18 இற்கு பின்னான மக்கள் வாக்கு மூலங்கள் இவற்றை மேலும் நிறுவி நிற்கின்றன.

இதேவேளை புலிகளின் தலைமை மேற்குலக மீட்போன் தம்மை பிணை எடுப்பான் என்பதில் மட்டும் மிகவும் நம்பிக்கை வைத்திருந்த சரணாகதி நிலையில் இருந்தனர். சரணாகதி நிலையில் மட்டும் இருந்து கொண்டு புலம் பெயர் மக்ளின் துணையுடன் புதிக் குடியிருப்பு ஒரு லெனின் கிராட்டாக மாறும் என்ற வரையிலான வீரதாபங்களை பரப்புரை செய்து வந்தனர். மேற்குலகம் ஆகாயத்திலிருந்து குதித்து தம்மை மரியாதையுடன் மீட்கும் என புலம் பெயர் புலித் தலைமைகளும், புலம் பெயர் புலி ஆதரவாளர்களும் ஏற்படுத்தியே இருந்தனர். இதனை நம்பும் அளவிலேயே நிலத்தில் உள்ள புலிகள் சிறப்பாக பிரபாகரன் நம்பி இருந்தான். இதனைத் தவிர வேறு மார்க்கம் அவர்களுக்கு இருக்கவில்லை என்பதுவும் இங்கு உண்மைதான். புலிகளின் இராணுவ பலம் அவ்வாறே இருந்தது. ஆனால் புலிகளின் அரசியல் பலம் சர்வ தேசத்தில் வேறுவிதமாக இருந்தது. புலிகள் தமது ஆயுத நடவடிக்கைகளுக்கான தார்மீக ஆதரவை சர்வதேசத்தில் இழந்தே இருந்தனர். புலிகளுக்கு அரசியல் பலம் எப்போதுமே சர்வ தேச சமூகத்திடம் இருந்தது இல்லை. இதனால் சர்வ தேசம் பொது மக்களை காப்பாற்றும் காத்திரமான புத்திசாலித்தனமான செயற்பாட்டை இறுதிக்கட்டப் போரில் கொண்டிருக்கவும் இல்லை, செயற்படுத்த முயலவும் இல்லை என்பதே இறுதித் தினங்களில் பொது மக்களின் பரிதாப நிலைகளுக்கு காரணமாக இருந்தன.

வெளிநாடுகளைப் பொறுத்தவரையில் புலிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதைவிட இல்லாமல் செய்யப்படவேண்டும் என்பதை இந்தியா மட்டும் அல்ல சோசலிச நாடுகளும் ஏன் மேற்குலக நாடுகளும் விரும்பின. ஆனால் இலங்கை அரசை தமது செ(h)ல்வாக்கிற்குள் உள்ள நாடாக வைத்திருப்பதற்காக பொதுமக்கள் பாதிப்பு, போர்நிறுத்தம் போன்றவற்றைத் தூக்கிப்பிடித்தன மேற்குலக நாடுகள். இன்றும் தூக்கிப் பிடிக்கின்றன. மற்றபடி யாரும் புலிகளை காப்பாற்றத் தயாராக இருக்கவில்லை. புலிகள் வேண்டப்படாத சக்தி, நம்ப முடியாதவர்கள், பயங்கரவாதிகள் என்பதில் எல்லேர்ருக்கும் ஒருமித்த கருத்தே இருந்தது. அப்படியொரு அனுபவத்தை புலிகள் தமது செயற்பாடுகளினூடாக சிறப்பாக ரணில் பிரபா சமாதான ஒப்பந்த காலத்தில் தோலுருத்திக் காட்டிவிட்டனர். அப்படியொரு அரசியல் சாணக்கியம் பிரபாகரனுக்கும் அவர் குழுவிற்கும்.

கிட்லர்; பாவித்த தேசியம் என்ற அரசியல் தந்திரோபாயத்தைத் தவிர வேறு எந்த அரசியல் தந்திரோபாயத்தையும் புலிகள் கொண்டிருக்கவில்லை மக்களில் ஒரு பகுதியினர் வெறித்தனமாக புலிகளை அன்றும் ஏன் இன்றும் நம்புவதற்கு இது ஏதுவாக இருந்திருக்கின்றது, இன்றும் இருக்கின்றது. இதுவே கிட்லருக்கு ஏற்பட்ட எழுசிக்கும் தோல்விக்கும் காரணமாக அமைந்ததைப் போல் ஒரு படிமேல் போய் புலிகளுக்கும் எற்பட்டிருக்கின்றது. இனியும் ஏற்படப் போகின்றது.

1980 களின் நடுப்பகுதியில் புலிகள் தன்னோடு கை கோர்த்து நின்றவர்களின் ஒவ்வொரு கரமாக அறுக்க முற்பட்டபோதே பொது மக்கள் விழித்திருக்க வேண்டும். சோடா உடைப்பதற்கு பதிலாக விழித்திருந்க் வேண்டும் அன்று விழித்திரந்தால் முள்ளிவாய்காலில் நடைபெற்ற மனிதப் பேரலவலங்ளை தவிர்திருக்க முடியும். நாம் இங்கு கூறுவது புலிகளுக்கு நடைபெற இருந்த பேரவலத்தை அல்ல. பொது மக்களுக்கு ஏற்பட்ட பேரவலத்தை. புலிகளுக்க எற்பட்ட பேரவலம் தவிர்கப்படமுடியாததும், தவிர்கப்பட வேண்டியதும் அல்ல.

ஒடுக்கு முறைக்குள்ளாகும் எந்த ஒரு இனமும், இனக் குழுமமும் அது தேசிய இனமாக இருந்தால் என்ன இல்லாவிட்டால் தனது உரிமைகளை நிலைநாட்ட, நிறுவிக் கொள்ள போராடும் உரிமை உண்டு. அவை மறுக்கப்படும் போது அதற்கான தீர்வை முன்வைத்து போராடுவது இயல்பானது, தார்மீகமானதும் ஆகும். அந்த வகையில் இலங்கை தமிழ் மக்களின் போராட்டமும் 50 இற்கு 50, சமஷ்டி, தனிநாடு, ஆயுதப் ஆயுதப் போராட்டம், மாகாணசபை என்ற பரிமாணத்திற்கூடதாக பயணித்ததற்கு நியாயங்கள் நிறையவே உண்டு.
(தொடரும்...)

Sunday, August 8, 2010

வீழ்ச்சியும் எழுச்சியும் பெற்று எல்லாவற்றையும் மாற்றிப் போட்ட மே மாதம் (சாகரன்) (பகுதி 2)

Sunday, August 8, 2010
இதனை கனக்கச்சிதமாக செய்து முடித்தனர் புலிகள். ஆமாம் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்து முன்னோக்கி பலமாக நகரத் தொடங்கியிருந்த ஈபிஆர்எல்எவ், ரெலோ, ஈரோஸ் ஆகிய மூன்று இயங்கங்களின் ஈழத் தேசிய விடுதலை முன்னணி (ENLF) இல் திடீரென ஒருநாள் தானும் இணைந்து செயற்படப் போவதாக அறிவித்து இணைந்து கொண்டது புலிகள் அமைப்பு. தந்திரோபாய ரீதியில் முற்போக்குச் சிந்தனை கொண்ட இளைஞர்கள் பலரை தன்னகத்தே கொண்ட புளொட் அமைப்பை ஐக்கிய முன்னணிக்குள் இணைத்தல் மூலம் புலிகளைத் தனிமைப்படுத்தி பலவீனப் படுத்தலாம் என்பதில் தோற்றுப்போனது ENLF. ஆனால் முந்திக் கொண்ட புலிகள் ஐக்கிய முன்னணியில் இணைந்தது மட்டும் அல்லாமல், ஐக்கிய முன்னணியை இல்லாமல் செய்யும் செயற்பாட்டையே தமது பிரதான செயற்பாடாக கொண்டு செயற்பட்டனர். ஏற்கனவே உடன்பாட்டிற்கு வந்திருந்த பொதுவான செயற்பாட்டிற்கான முடிவுகளை (பொது நிதி, பொதுவான பிரச்சாரம், பொதுவான தாக்குதல் போன்றவை இவற்றில் சில) முதலில் இல்லாமல் செய்தனர். இதற்கு ஐக்கியத்தை பலமாக்க ஐக்கிய முன்னணியிற்குள் கடைப்பிடித்து வந்த ஜனநாயக மத்தியத்துவத்திற்கு பதிலான ஏகோபித்த முடிவு என்ற வகையிலான செயற்பாட்டை புலிகள் தமது 'வீற்ரோ' பவர் ஐ பாவித்து சிதைத்தது வந்தனர்.

கூடவே ஐக்கிய முன்னணியிற்குள் இருந்த சகோதர அமைப்பு போராளிகளை அவ் அமைப்புக்களுடன் பேசிக்கொண்டும், கை கோர்த்துக் கொண்டும் முரண்பாடுகளை தாமே செயற்கையாக உருவாக்கி அவற்றைப் பேசித்தீர்க்;காமல் சகோதரப் படுகொலை செய்யத் தொடங்கினர். இது வன்னியில் ஈபிஆர்எல்எவ் இன் ரீகனில் மாத்தையாவால் ஆரம்பித்து வைக்கப்பட்டு, யாழ்பாணத்தில் ஈபிஆர்எல்எவ் இன் அமீன் என பிரகடனப்படுத்தாத சகோதரப் படுகொலைகள் கிட்டுவினால் தொடர் பரிணாமம் அடைந்து ரெலோ என்ற அமைப்பின் மீது பிரகடனப்படுத்திய சகோதர யுத்தத்துடன் அகோர நிலையை அடைந்தது. இது ஏற்கனவே புலியாக வாழ விரும்பிய பாலகுமாரை அவர் தம் இயக்கத்திடம் கூடக் கேட்காமலே பிரபாகரன் காலடியில் விழுந்து சேவகம் செய்ய வைத்தது. இறுதியில் 1986 டிசம்பர் மாதம் ஈபிஆர்எல்எவ் உடன் ஈழவிடுதலைப் போராட்ட அமைப்புக்கள் யாவற்றினதும் செயற்பாட்டை முழுமையாக தடை செய்து இலங்கை அரசின் விருப்பை நிறைவேற்றி ஈழவிடுதலைப் போராட்டத்தை இல்லாமல் செய்வதற்குரிய அத்திவாரத்தை உறுதியாகப் போட்டது புலிகள் அமைப்பு. எதனை ஏகாதிபத்தியங்களின் அடிவருடி ஐதேக கட்சி விரும்பியதோ அதற்கு செயல் வடிவம் கொடுத்து பெயர் வாங்கிக் கொண்டது தமிழீழ விடுதலைப் புலிகள். இதன் மூலம் புலிகள் தமது ஏகபோகத்தையும் நிறுவி விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதச் செயற்பாடு என்ற வடிவத்திற்குள் கொண்டு வந்து ஒரு மாபியா கும்பலாக வடிவெடுத்தது. இதன் தொடர்ச்சியாக பாசிச அமைப்பாக பரிணாமம் அடைந்து முள்ளிவாய்காலுடன் அடிமைப்பட்டு, சரணாகதியடைந்து, தனக்கு தானே மரணசாசனத்தை எழுதிக் கொண்டது.

ஈழவிடுதலைப் போராட்டத்தில் 1986 ம் ஆண்டு ரெலோ இயக்கத்தின் மீது புலிகள் போர் தொடுத்து தமது ஸ்தாபன மயப்படுத்தபட்ட சகோதரப் படுகொலை யுத்தத்ததை ஆரம்பித்தனர். இதனைத் தொடர்ந்து ரெலோவின் தலைவர் சிறீ சபாரத்தினம் மே 06 ம் நாள் கொல்லப்பட்டார்;. இவ் நிகழ்வே ஆயுதம் தாங்கிய ஈழவிடுதலைப் போராட்டத்தின் மீது மக்கள் நம்பிக்கையை இழக்க வைப்பதற்கு பிரதான காரணமாக அமைந்து. அதுவரைக்கும் தம் பிள்ளைகளை ஏதாவது ஒரு விடுதலை அமைப்பில் இணைந்து செயற்படுதலை பெருமையுடன் ஏற்று வந்த தமிழ் பேசும் சமூகம் மெதுவாக தம் பிள்ளைகளை இதில் இருந்து கழட்டிவிடும் செயற்பாட்டில் ஈடுபடத் தொடங்கினர். அன்று முடிவுக்கு வந்தது ஆயுதம் தாங்கிய ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஏறுமுகம். இதன்பின்பு நடைபெற்றவை எல்லாம் ஈழவிடுதலைப் போராட்டத்தின் இறங்கு முகச் செயற்பாடுகளே.

2009 ஆண்டு மே திற்கான தனது அழிவிற்கு 1986 மே மாதம் பிள்ளையார் சுழியை பகிரங்கமாக புலி தனக்கு தானே போட்டுக் கொண்டது. 1986 மே மாதம் ஆரம்பித்து தொடர்ந்த 23 வருடங்களிலான புலிகளின் யுத்தம் பல ஆயிரம் பொதுமக்களையும் (தமிழ், முஸ்லீம், சிங்களவர்) மாற்றுக் கருத்தாளர்களையும், தமது இயக்கத்திற்குள் இருந்த மாத்தையா, கருணா போன்றவர்களின் அணிகளையும் வகை தொகையில்லாமல் கொன்று குவித்தது புலிகள் அமைப்பு. இதற்கு பிரபாகரன், அவர்களின் குழுவினரின் வழி நடத்தல், சிந்தனையே காரணமாக இருந்து. மேலும் வெளிநாட்டு அரசியல் தலைவர்கள், உள்ளநாட்டு அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள் என்று யாரையும் கொல்லுவதில் விடவில்லை. இறுதியில் தன்னை மட்டும் காத்துக் கொள்ள 2009 மே மாதம் முள்ளிவாய்காலில் பாரிய மனித அவலத்தை ஏற்படுத்த பொதுமக்களைப் பொறிக்குள் தள்ளி இறுதியில் முழம்தாள் இட்டு தானும் சரணாகதியடைந்து தானே அழிந்து கொண்டது. இந்த இறுதி மனிதப் பேரவலம் தன்னை எவ் வழியிலாவது காப்பாற்றும் என்று வழமைபோல் பொது மக்களைப் பொறிக்குள் சிக்க வைத்த பாசிசம் இம்முறை தோற்றுப் போனது. ஏகாதிபத்தியங்கள் புலித் தலைமையைக் காப்பாற்ற எவ்வளவோ முயன்றன. இம்முறை இலங்கை அரசின் ஏகாதிபதியத்திற்கு எதிரான உறுதியான கூட்டு வெற்றி பெற்றது. புலிகளும், அவர்களின் இருப்பை விரும்பிய ஏகாதிபத்திய சக்திகளும் தோற்றுப் போயின.

1980 களிலேயே புலிகள் வெல்லும் என்பதைவிட புலிகள் கொல்லும் என்பதை புலிகளின் தலைவர்கள் பலரும், புலி உறுப்பினர் பலரும் அறிந்தே இருந்தனர். இதனை ஏனைய விடுதலை அமைப்பு போராளிகளுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணி போன்றவர்களும் உணர்ந்தே இருந்தனர். 1990 களில் ஏன் ஏனைய விடுதலை அமைப்புக்களில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்த சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சம்மந்தர் உட்பட பல பிற்போக்கு, காட்டிக் கொடுக்கும் தலைவர்களும் உணர்ந்திருந்தும் சேவகம் செய்யக் காத்திருந்தனர். இது புலிகளுக்கு கொடி பிடித்த புலிப்பினாமிகளுக்கும் தெரியும். உருத்திரகுமாரன் முதல் கேபி வரை யாவருக்கும் தெரியும். இதுவே புலிகளை நோக்கி இவர்களை நகர்த்தி கொடி, ஆலவட்டங்களை பிடிக்க வைத்தது. இந்த யுத்தத்தில் கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவர்களும் புலியளவில் காரணமானவர்களே.

பிரபாகரன் வெல்வானோ தெரியாது, ஆனால் பிரபாகரன் கொல்வான் என்பதை பற்குணத்தில் ஆரம்பித்து கருணாவரையும், அமிர்தலிங்கம் இருந்து சம்மந்தர் வரைக்கும், பாலகுமார் தொடக்கம் சுரேஸ் பிரேமச்சந்திரன் வரைக்கும், பத்மநாபா முதல் வரதராஜப்பெருமாள் வரைக்கும், ஹமீத் முதல் ஹக்கீம் வரைக்கும், மதவாச்சி அப்புகாமி தொடக்கம் அம்பாறை சிறியானி வரைக்கும், தொண்டமான் முதல் மனோகணேசன் வரைக்கும் கருணாநிதி முதல் வைகோ வரைக்கும் வாஜ்பேயி முதல் சோனியா காந்திவரையும் பருத்தித்துறை பொன்னம்மா முதல் அம்பாறை சட்டநாதர் போடியார் வரைக்கும் யாவரும் அறிந்தே இருந்திருக்கின்றார்கள். இந்தனை புலிகள் எப்போதும் தமக்கு பெருமையாகவும், சாதகமாகவும் பயன்படுத்தி வந்தனர். புலிகளால் ஏற்படுத்தப்பட்ட இந்த மரணப் பிராந்திக்கு பலர் பயந்து அடி பணிந்தனர். இதனை தமது பிழைப்புகளுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பாராளுமன்ற நாற்காலிகளை நிரப்பிப் கொண்டனர். மிகச் சிலர் தொடர்ந்தும் விடாப்பிடியாக புலிகளின் மக்கள் விரோத செயற்பாட்டிற்கு எதிராக போராடி வந்தனர். உயிர்த் தியாகம் செய்தனர். இன்றும், இன்னமும் போராடிக் கொண்டு இருக்கின்றனர்.

பிரபாகரன் வெல்வானோ தெரியாது, ஆனால் பிரபாகரன் கொல்வான் என்பதை அறிந்திருந்த பலரும் வாய்பொத்தி, வாயுடன் கூடவே எல்லாவற்றையும் பொத்தி மௌனித்து இருந்தார்கள். இதுவே இறுதியில் முள்ளிவாய்காலில் மரணித்த பொதுமக்களுக்கு ஏற்பட்ட நிலமைகளுக்கு காரணமாக அமைந்திருக்கின்றது. ஆனால் இதுதான் நடைபெறப் போகின்றது என்பதை பலரும் 25 வருடங்களுக்கு முன்பே தெரியும். இதனை பல இடங்களிலும் பல சந்தர்ப்பத்தில் எழுத்திலும், பேச்சிலும், செயற்பாட்டிலும் சொல்லியே வந்திருந்திருக்கிறார்கள். மனிதனுக்கும், மிருகத்திற்கும் உள்ள வித்தியாசம் மனிதன் பகுத்தறிவு உள்ளவன். மிருகங்கள் பகுத்தறிவற்றவை. ஆனால் ஈழவிடுதலைப் போராட்டத்தின் பிழையான போக்கை பொது மக்களும் பகுத்தறிந்து பார்த்திருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை. தற்போது ஒரு வகையான பகுத்தறிவினால் மிருகங்கள் கூட சுனாமி போன்றவற்றை பகுந்துணர்ந்து தம்மை தற்காத்துக் கொள்கின்றன. இவ்விடயத்தில் மக்களைவிட மிருகங்கள் சிறப்பான நிலையில் இருக்கின்றன. ஆனால் ஈழ விடுதலைப் போராட்டத்தின் போக்கை பகுத்தறிவு செய்து பார்ப்பதில் பெரும்பான்மையான தமிழ் பேசும் பொது மக்கள் தோற்றே இருக்கின்றன என்பது கசப்பான உண்மை.
(தொடரும்.....)

ஐ.தே.கவில் இணைய பொன்சேகா தீர்மானம்,

Sunday, August 8, 2010
சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியில் இணையத் தீர்மானித் துள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி புதிய சிஹல உறுமைய கட்சியின் தலைவர் சரத் மனமேந்திர தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்புக் கட்சித் தலைவர் கூட்டத்தின்போது இந்த யோச னையை முன்வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் சகல கட்சித்தலைவர்களினதும் கருத்துக்கள் கேட்டறியப்பட்டதன் பின்னர் இறுதித்தீர்மானம் எடுக்கப் படுமென அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை இந்தச் செய்தி தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகா இது வரையில் எவ்வித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை.

அமெரிக்க உயர் அதிகாரிகள் அடுத்த வாரம் இலங்கை விஜயம் - 22ஆம் திகதிவரை இங்கு தங்கியிருப்பார்கள்.

Sunday, August 8, 2010
அமெரிக்காவின் இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை ஆகியவற்றைச் சேர்ந்த 40 அதிகாரிகள் எதிர்வரும் 14ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக தெரியவருகிறது. இந்த அமெரிக்கப்படையினர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பர் என தூதரக தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்ள வென உயர் அதிகாரிகள் 40 பேர் இலங்கைக்கு வருகைதரவுள்ளனர்.

இவர்களில் இராணுவம், கடற் படை மற்றும் விமானப்படை ஆகிய பாதுகாப்பு தரப்பினர் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். இதேவேளை இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு உதவ அமெரிக்கா முன்வந்துள்ளது. இந்தப் பணிகளுக்காக அமெரிக்கா 581 மில்லியன் ரூபாயை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே ஒரு கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட தொகையை கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்காக அமெரிக்கா வழங்கியுள்ளது. இதனைத்தவிர மீள் குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த உதவிகளை வழங்கவுள்ளதாக இலங் கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

வீழ்ச்சியும் எழுச்சியும் பெற்று எல்லாவற்றையும் மாற்றிப் போட்ட மே மாதம் (சாகரன்) (பகுதி 1)

Sunday, August 8, 2010
புலி வெல்லும் என்பதைவிட அது கொல்லும் என்பதை பலரும் உணர்ந்திருந்தனர். இதனாலேவே நிலத்திலும் புலத்திலும் பலர் அவர்களை ஆதரிப்பது போல் பாசாங்கு காட்டி வந்தனர், சிலர் துணிந்து புலிகளின் மக்கள் விரோத பாசிச செயற்பாட்டிற்கு எதிராக விடாப்பிடியாக 30 வருடங்களுக்கு மேலாக போராடி வந்தனர், பல தியாகங்களையும் செய்தனர். புலிகளை எதிர்ப்பவர்களுக்கும் ஆதரவழிப்பவர்களுக்கு ஒன்று பொதுவானது அதுதான் புலிகளால் ஏற்படுத்தப்பட்ட மரணப்பயம். புலிகளின் குறி எதிலும் தவறலாம். ஆனால் தான் கொல்ல வேண்டும் என நினைப்பவர் இமயத்தில் இருந்தால் என்ன, இங்கிலாந்தில் இருந்தால் என்ன, இலுப்பைக் குளத்தில் இருந்தாலென்ன, குழாய் கிணற்றிற்குள் ஒளித்திருந்தாலும், பிரமிட்டிற்குள் மறைந்து இருந்தாலும் ஏன் வேறு ஒரு கிரகத்தில் மறைந்து குடியிருந்தாலும் குறி தப்பாது வெறியுடன் கொல்வர்;. இதற்கு அவர்கள் கற்பிணி வேடம் என்ன, கருமாதி வீட்டில் பிணமாகவென்ன, விருந்தோம்பல் வேடமென்ன, சிறுவர், சிறுமி என வேடமிட்டு யாரையும் பலயெடுக்கவும் பலிகொடுக்கவும் தயாராக இருந்தனர். இவை எல்லாவற்றையும் மாற்றிப் போட்ட நிகழ்வு மே 18 இல் நிகழ்ந்தது என்றால் மிகையாகாது.

பிரபாகரனைவிட இராணுவ அறிவில் பலம் பொருந்திய கருணா கூட அரச படைகளின் பாதுகாப்பில் முழுவதுமாக இருந்தாலும் மே 18 இற்கு பிறகுதான் புலிகளின் எல்லைக்குள் பிரவேசித்தார். அரசியல் சாணக்கியரும், போரட்டத்தில் பல வருட அனுபவமுள்ள வரதராஜப்பெருமாள் தனது மக்களை நேரடியாகச் சந்திக்கலாம் என்று தீர்மானித்த நாள் மே 18 அன்றுதான். புலிகளின் பல பொறிகளில் தப்பி உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் மக்களை பொது இடங்களில் சந்திக்கலாம் என தீர்மானித்த நாள் மே 18. சம்மந்தர் முதல் மாவை வரை புலிகளின் பாதை பிழையானது என நழுவின மீன் போல் கதைக்கலாம் என்று முடிவெடுத்த நாள் மே 18. இலங்கை அமைச்சர்களும் அவர் தம் மனைவியரும் வடக்கு கிழக்கு தமிழ் பிரதேசங்களுக்கு தொண்டு செய்வதற்காக, நாடா வெட்டப் புறப்படலாம் என தீர்மானித்த நாள் மே 18. 'துவக்குடன் எந்த அறுவானும் போராட்டம் என்று இனி வந்தால் முறத்தல் அடித்து விரட்டுவோம்' என்று வீரத்தாயாக தமிழ்த் தாய் வன்னியில் மாறிய நாள் மே 18. யாழ் நாக விகாரையும், நயினா தீவு நாகதீப விகாரையையும் இனித் தரிசிக்கலாம் என்று அடிமட்ட பௌத்தன் முடிவெடுத்த நாள். யாழ் பொம்மை வெளியில் உள்ள தமது பள்ளி வாசலை சென்று பார்வையிடலாம் என்று முஸ்லீம் சகோதரர்கள் முடிவெடுத்த நாள். ஏன் கொழும்பில் மட்டும் முதலீடு செய்த தமது சொத்துக்களை சென்று பார்வையிடலாம் என்று புலிகளின் ஆதரவாளர்கள் முடிவு எடுத்த நாளும் இதே மே 18 தான்.

ஏன் கூவ மறந்த குயில்களும், ஆடலை நிறுத்திய மணில்களும் பாடவும் ஆடவும் ஆரம்பித்த நாள். பூக்க, காய்க மறுக்கப்பட்ட செடிகளும், மரங்களும் பூக்கவும் காய்கவும் அனுமதிக்கப்பட்ட நாள். வடக்கிலிருந்து தெற்கிற்கு, கிழக்கிலிருந்து வடக்கிற்கும், மேற்கிற்கும் சுதந்திரமாக செல்லலாம் என தமிழ் மக்கள் தீர்மானித்த நாள்.

தமிழர் தலைவர் கலைஞர் புலிகளை முழுமையாக விமர்சித்து அறிக்கைகள் விடலாம் என முடிவு செய்த நாள்.

புலம் பெயர் நாடுகளில் புலிச் சண்டியர்களின் மிரட்டல்களுக்கு பயப்படாமல் வியாபார ஸ்தலங்களை பூட்ட மறுக்கலாம் என தீர்மானித்த நாள். புலிகளின் வலிந்த ஊர்க் கோலங்களுக்கு செல்வதில்லை என மக்கள் தீர்மானித்த நாள். புலம் பெயர் நாடுகளில் புலிகளின் முதலீட்டாளர்கள் புலிகளின் பணத்தை எவ்வளவும், எவ்வாறும் சுருட்டலாம் இனி வன்னிக்கு அழைத்து விரட்ட யாரும் இல்லை என 'தைரியமாக' முடிவெடுத்து திடீர் மில்லியனராக மாறிய நாள். புலம் பெயர் நாடுகளில் வங்கி கணக்கு மூலம் மாதப்படி வழங்கி வந்த பலர் 'ளவழி pயலஅநவெ' அடித்த நாள்.

எங்களுக்கு அப்பவே தெரியும் இவ்வாறு நடக்கும் என புலிகளின் புகழ்பாடிய அரசியல் ஆய்வாளர்கள் குத்துக்கறணம் அடித்த நாள். ஒலிபரப்பில் புலி புராணம் பாடத் தேவையில்வையென முடிவெடுத்து டக்ளஸை பேட்டியெடுக்கலாம் என முடிவு செய்த நாள்.

புலிகளுக்கு சரத் பொன்சேகா உட்பட கேபி, உருத்திரகுமார், நெடியவன் என பலர் தலைவர்கள் தேசியத் தலைவர்களாக பிரகடனப்படுத்திய நாள். சுரேஸ், சேரன் வகையறாக்களின்; புலித் தலைமை ஆசைகள் நிராசையான தினம். ஆனால் தொடர்ந்தும் வேறு எவ் வழியில் பிழைப்பை தொடர்ந்து நடத்தலாம் என சிந்திக் தூண்டிய நாள்.

இவையெல்லாம் எவ்வாறு நடந்தன என்ற சற்று பார்ப்போம்.....

1970 களில் தனி நபர்களாகவும், தொடர்ந்த தமிழ் மாணவர் பேரவை என்ற அமைப்பு வடிவங்கள் ஊடாகவும் ஈழவிடுதலைக்கான ஆயுதப் போராட்டம் முனைப்பு பெற்றது. தமிழ் இளைஞர் பேரவை தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஆள்திரட்டும், வாக்குகள் திரட்டும் ஒரு அமைப்பாக தமக்குள் முழுமையாக கட்டுப்பட்டு செயற்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பை மீறி அதிலிருந்து பிரிந்து சென்ற பலர் பல்வேறு ஈழவிடுதலை அமைப்புக்களை உருவாக்கி செயற்படத் தொடங்கினர். இவ் அமைப்புக்கள் 1970 களின் பிற்பகுதிகளில் ஆயுதப் போராட்ட அமைப்புகளாக வளர்ச்சி பெற்றன. இதனைத் தொடர்ந்து 1980 களின் ஆரம்ப பகுதியில் பலம் மிக்க ஆயுத அமைப்புக்களாக ஊதிப் பெருத்தன, பெருக்க வைக்கப்பட்டன. இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டம், வர்க்க விடுதலைக்கான முதற் கட்டமாக சுயநிர்ணய உரிமைக்கான சகதேசிய விடுதலைப் போராட்டம் என்ற இரு பிரிவான வித்தியாசமான பரிணாமத்தில் விடுதலை அமைப்புக்கள் உருவாகி இருந்தன. தேசிய விடுதலைப் போராட்ட அமைப்புகளுடையே ஐக்கிய முன்னணிக்கான தேவையை விடுதலை அமைப்புக்களும், பொதுமக்களும் வேண்டி நின்றனர்.

1984 களில் இதன் அடிப்படையில் ஈபிஆர்எல்எவ், ரெலோ, ஈரோஸ் ஆகிய மூன்று விடுதலை அமைப்புக்கள் இணைந்து ஈழத் தேசிய விடுதலை முன்னணி (நுNடுகு) தோற்றம் பெற்றது. இதனை உருவாக்குவதில் தோழர் பத்மநாபாவின் பங்களிப்பு மகத்தானதாக அமைந்து. இந்த பரிணாம வளர்ச்சியை அவதானித்த அன்றய ஐதேக இலங்கை அரசும், ஏகாதிபத்தியமும் ஈழவிடுதலை அமைப்புகளின் ஐக்கியம் ஈழவிடுதலைப் போராட்டத்தின் வெற்றியை நிச்சயப்படுத்தும் காரணியாக அமையப் போகின்றது என்பதை நன்கே புரிந்திருந்தனர். இடதுசாரி நிலப்பாட்டுடன் ஏகாதிபத்திய எதிர்ப்பு செயற்பாட்டுடன் ஈழத் தேசிய விடுதலை முன்னணி என்ற ஐக்கிய முன்னணி தனது செயற்பாடுகளை முனைப்புடன் செயற்படுத்தத் தொடங்கியது. இதனால் ஏகாதிபத்தியத்தின் ஆலோசனையுடன் இவ் ஐக்கிய முன்னணியை இல்லாமல் செய்தல் என்ற பிரதான வேலைத்திட்டத்தின் அடிப்படையில் செயற்பட்டனர் ஐதேக அரசாங்கத்தினர். இதனை அன்றைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி பாராளுமன்றத்திலும், ஜேஆர் ஜெயவர்த்தன பல கூட்டங்களிலும் பேசியிருந்தனர். 'இயங்கங்களுடையே முரண்பாட்டை ஏற்படுத்துவேன்'. 'பகைமையை வளர்ப்பேன்'. 'அவர்களை மோதவிடுவேன்' 'இதன் மூலம் அவர்களை தனிமைப்படுத்துவேன்.' பலவீனப்படுத்துவேன்.' 'பின்பு இல்லாமல் செய்வேன்' என்று பேசித் திரிந்தனர்.
(தொடரும்....)

மீள் குடியேற்றப்பட்ட மக்கள் விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவதில் சிக்கல் நிலைமைஅமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ.

Sunday, August 8, 2010
மீள் குடியேற்றப்பட்ட மக்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கில் மீள் குடியேற்றப்பட்ட மக்கள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான நீர் வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என மீள் குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மீள் குடியேற்றப்பட்ட மக்களில் 90 வீதமானவர்கள் இந்தப் பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆண்டின் பெரும் பகுதியில் வரட்சியான காலநிலை காணப்படுவதனால் நீர்ப்பாசன வசதிகள் மிகவும் இன்றியமையாதது.

எனினும் மீள் குடியேற்ற மக்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த போதியளவு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது. விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு தேவையான கிணறு வசதிகளை விரைவில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Thursday, August 5, 2010

பிரபா கணேசன். திகாம்பரம் அரசாங்கத்துடன் இணைந்தனர்.

Thursday, August 05, 2010
ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான பிரபா கணேசன் மற்றும் திகாம்பரம் ஆகியோர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து ஆளுங் கட்சியூடன் இணைந்துள்ளனர்.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சி கண்டிப் பிரதேச பாராளுமன்ற உறுப்பினரான அப்துல் காதா; ஏற்கனவே அரசாங்கத்துக்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளார்

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் பெற்றுக்கொள்ள இன்னும் மூன்று அங்கத்தவா;களே தேவைப்படுகின்றனா; எனவூம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த வரலாற்றில் முதற் தடவையாக 63 நீதிமன்றங்களை புதிதாக உருவாக்கியூளளதாக நீதியமைச்சர் அதாவூத செனவிரத்ன நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்¨
Thursday, August 5, 2010
வழக்கு விசாரணைகளை வரலாற்றில் முதற் தடவையாக 63 நீதிமன்றங்களை புதிதாக உருவாக்கியூளளதாக நீதியமைச்சர் அதாவூத செனவிரத்ன நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளு மன்றத்தில் நேற்று நீதித்துறை திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே நீதியமைச்சர் அதாவூத செனவிரட்ன இவ்வாறு தெரிவி த்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்;

நீதிமன்றங்களில் பெருந்தொகையாகக் குவிந்து கிடக்கின்ற வழக்குகளை இரண்டு வருடத்திற்குள் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலதிக நீதிமன்றங்களை இரண்டு வருடங்களுக்கென மாவட்ட ரீதியில் அமைத்து தேங்கிக் கிடக்கின்ற வழக்குகளின் விசாரணைகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுவரை காலம் உச்ச நீதிமன்றங்களில் மாத்திரமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மனித உரிமை தொடர்பான வழக்குகளை எதிர்வரும் காலங்களில் மாகாண மேன் முறையீட்டு நீதிமன்றங்களிலும் விசாரிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும்.

வழக்கு விசாரணைகளின் தாமதம் மற்றும் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் விசாரணைகளைத் துரிதப்படுத்தும் வகையில் 60 மேல் நீதிமன்ற நீதியரசர்களை நியமிப்பதற்கு அரசாங்கத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

எனினும் இத்தொகையை 75 ஆக அதிகரிப்பதற்கான திருத்தமே இச்சட்டமூலத்தினால் கோரப்படுகிறது. குவிந்து கிடக்கின்ற வழக்குகளைத் தீர்ப்பதற்காக வரலாற்றில் முதற் தடவையாக 63 நீதிமன்றங்களை புதிதாக உருவாககப்பட்டுள்ளது.

தொழில் நியாயாதிக்கச் சபைகளை சகல நகரங்களுக்கும் விஸ்தரிப்பதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

நீதவான்; நீதிமன்றங்கள் தற்போது அரை நாட்களே நடைபெறுகின்றன. இதன் நேரத்தை அதிகரிக்கவூம் நடவடிக்கை எடுக்கப்படும்.

எவ்வாறாயினும் சட்டமா அதிபர் சட்டத்தரணிகள் நீதிபதிகள் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் தேங்கிக் கிடக்கும் வழங்குகளை இரண்டு வருடங்களுக்குள் முடிவூக்குக் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவூம் அமைச்சர் தெரிவித்தார்

Sunday, August 1, 2010

பாடசாலை மாணவர் மத்தியில் அதிகரிக்கும் போதைப் பழக்கம்!

Sunday, August 1, 2010
இலங்கையில் தற்போது போதைப் பொருள் பாவனையின் வீதம் அதிகரித்தவண்ணமே உள்ளது. போதைப் பொருளை தடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்படினும் பல்வேறு சட்டங்கள் இருப்பினும் அதனை முற்றாக ஒழித்துக்கட்ட முடியாதுள்ளது.

அதேவேளை பாடசாலை மாணவர்களும் இப் போதை பாவனைக்கு அடிமையாகியுள்ளனர். இதன் வீதம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

கொழும்பு நகரில் மாத்திரமல்லாது அதிகளவில் பொலன்னறுவை மாவட்டத்திலும் பாடசாலை மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகயுள்ளமை தெரிய வந்துள்ளது.

பொலன்னறுவயில் கடந்த 17ஆம் திகதி 3 மாணவர்கள் பாடசாலை சீருடையுடன் போதைப் பொருளை வைத்திருந்தார்கள் என்பதன் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு பாடசாலை செல்லும் இளம் வயது சிறார்கள் சிகரட் மற்றும் போதை ஏற்படுத்தும் பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.

இளம் வயதினரில் 13 தொடக்கம் 20 வயதிற்கிடைப்பட்ட மாணவர்கள் பலர் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர் என போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தெரிவிக்கின்றது.

இவ்வாறு இளம் வயதினர் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாவதற்கு அவர்களின் நண்பர்களே முக்கிய காரணம் எனத் தெரியவந்துள்ளது.

இவ்வாறானவர்களில் 88.2 வீதமானவர்கள் நண்பர்கள் மூலமும் 10 வீதமானவர்கள் உறவினர்கள் மூலமும் 1.8 வீதமானவர்கள் உல்லாசப் பயணிகள் மூலமும் போதைக்கு அடிமையாகின்றனர்.

நாட்டின் எதிர்காலம் வளரும் சமுதாயத்தின் கரங்களில் உண்டு என்பார்கள். ஆனால் இவ்வாறான நிலைமை தொடருமானால் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பதில் சந்தேகமில்லை.

ஆதலால் இளம் மாணவர்கள் போதைக்கு அடிமையாவது தடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். இதற்கான பொறுப்பு எம் அனைவரையுமே சாரும் என்பதால் அனைவருடைய ஒத்துழைப்புடனும் சமுதாயத்தைக் காப்போம்.

சர்வதேச ரீதியில் இயங்கும் புலிகளை கைது செய்ய அரசு தயாராகவுள்ளது!

Sunday, August 1, 2010
புலிகள் இயக்கத்து டன் இணைந்து சர்வதேச ரீதியாக இயங்கும் எவரையும் கைது செய்வதற்கு தயாராக இருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
புலிகள் உள் நாட்டில் அழிக்கப்பட்டிருப்பினும் சர்வதேச ரீதியாகத் தொடர்ந்து இயங்கி வருவதாக அரசாங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.இது தொடர்பில் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக் ஸ்மன் குலுகல்ல தெரிவிக்கையில்,

புலிகளின் சர்வதேச செயற் பாடுகளைக் கட்டுப்படுத்த அவசியம் ஏற்படின் இன்ரல்போல் எனப்படும் சர்வதேச பொலி ஸாரையும் பயன்படுத்தவிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சர்வதேச ரீதியில் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கம் என்ற வகையில் அதனுடன் இணைந்து இயங்கும் எவரையும் கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Followers

Blog Archive