
சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியில் இணையத் தீர்மானித் துள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி புதிய சிஹல உறுமைய கட்சியின் தலைவர் சரத் மனமேந்திர தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்புக் கட்சித் தலைவர் கூட்டத்தின்போது இந்த யோச னையை முன்வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் சகல கட்சித்தலைவர்களினதும் கருத்துக்கள் கேட்டறியப்பட்டதன் பின்னர் இறுதித்தீர்மானம் எடுக்கப் படுமென அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை இந்தச் செய்தி தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகா இது வரையில் எவ்வித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை.
No comments:
Post a Comment