
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும், அதற்கு முன்னர் இந்தியாவின் உயர் இராஜதந்திரிகள் எவரும் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக இந்திய அரசு இதுவரையில் அறிவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இடம்பெயர் மற்றும் மீள் குடியேற்றப்பட்ட மக்களின் நிலைமைகளை நேரில் பார்வையிடும் நோக்கிலும், மீனவர் பிரச்சினை குறித்து ஆராய்வதற்கும் விசேட பிரதிநிதி ஒருவர் இலங்கைக்கு விரைவில் விஜயம் செய்ய உள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிரூபா ராவ் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த விசேட பிரதிநிதி ஒர் அரசியல்வாதியாக இருக்கக் கூடும் எனவும், குறித்த பதவி நிரந்தரமான ஓர் பதவியாக அமையும் எனவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக வடக்கில் அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இலங்கைக்கான விசேட பிரதிநிதியாக உள்துறை அமைச்சர் சிதம்பரம் அல்லது டீ.ஆர் பாலு விஜயம் செய்யலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
No comments:
Post a Comment