
மன்னார் கடற்பகுதியில் எண்ணெய் அகழ்வை மேற்கொள்வதில் இந்தியா, சீனா, ரஸ்யா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளை சிறிலங்கா அரசாங்கம் எட்டு பகுதிகளாகப் பிரித்துள்ளது. இவற்றில் இரண்டு பகுதிகள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வழங்கப்பட்டுள்ளன. முன்னதாக இந்திய அரச நிறுவனமான 'கெய்ன் இந்தியா' என்ற நிறுவனத்துக்கே இந்த பகுதி ஒன்று வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் சீனாவுக்கும் ஒரு பகுதி வழங்கப்பட்டுள்ளதாக தற்போது தெரிவிக்கப்படுகின்றன
ஏனைய ஐந்து பகுதிகளையும் விரைவில் அனைத்துலக மட்டத்தில் ஏலத்தில் விற்பதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் கெய்ன் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பகுதியில் எதிர்வரும் ஜுலை மாதம் எண்ணெய் கிணறு துளையிடும் பணிகள் மேற்கொள்ளப்பபடவுள்ளன. இதற்கென ஆழ்துளையிடும் கப்பல் ஒன்று மன்னார் கடற்பகுதிக்கு கொண்டு வரப்பட்டு அது சார்ந்த ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கெய்ன் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது
No comments:
Post a Comment