Sunday, May 8, 2011

ஐ.நா. செயலாளரின் நிபுணர் குழு கலைப்பு;இரகசியங்களை வெளியிடத் தடை!

Sunday, May 8, 2011
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்கவென ஐ.நா. செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு கலைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தருஷ்மன் தலைமையிலான மூவர் அடங்கிய நிபுணர் குழுவை ஐ.நா. செயலாளர் நாயகம் கடந்த வருடம் நியமித்திருந்தார். இக்குழு பல வழிகளில் சாட்சியங்களைப் பெற்று இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற விடயங்களை 192 பக்க அறிக்கையாக தயாரித்து அண்மையில் ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் கையளித்ததோடு, அவர் அதனை அம்பலப்படுத்தியிருந்தார்.

அவ்வாறான நிலையில் நிபுணர் குழுவின் செயற்பாடுகள் முற்றுப்பெற்றுள்ளதால் நேற்று ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் அதனைக் கலைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நிபுணர் குழுவிடம் சாட்சியளித்தவர்களின் இரகசியத் தன்மை எதிர்வரும் இருபது வருடங்களுக்கு பேணப்பட வேண்டுமென நிபுணர் குழு உறுப்பினர்களுக்கு பணிப்புரை விதிக்கப்பட்டுள்ளது.

ஐநா அறிக்கை - இந்திய உயர்மட்டக் குழு வெள்ளியில் இலங்கை வருகை!

Sunday, May 8, 2011
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் மற்றும் இறுதிக் கட்ட யுத்தம் குறித்து ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் ஆராய இந்தியாவின் உயர்மட்டக் குழுவொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரவுள்ள குழுவில் இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் உள்ளிட்ட சிலர் அடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்குழு ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதுடன் பான் கீ மூன் நிபுணர் குழுவை அடிப்படையாக வைத்து இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வலியுறுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் எதிர்வரும் 16ம் திகதி இந்தியா செல்லவுள்ளதுடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

Wednesday, May 4, 2011

நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படும் வகையிலான பாடல்கள் உருவாக்கப்படக் கூடாது – ஜனாதிபதி!

Wednesday, May 4, 2011
நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படும் வகையிலான பாடல்கள் உருவாக்கப்படக் கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இவ்வாறான பாடல்களை பிரிவினைவாதிகள் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பயன்படுத்திக்கொள்ளக் கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

'மே ரட்டே மினிஸ்சு தனிகர கெலின்னே பிஸ்சு' (இந்த நாட்டு மக்கள் விசர் வேலைகளையே செய்கின்றனர்) போன்ற பாடல்களை கேட்க முடிவதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ' லோகேம உதும்ம ரட்ட ஸ்ரீலங்காவை' (உலகின் மிகப் புனிதமான நாடு இலங்கை) போன்ற பாடல்கள் உருவானதாக அவர் தெரிவித்துள்ளார்.

நன்மதிப்பை கெடுக்கக் கூடிய வகையிலான பாடல்களை பிரிவினைவாத சக்திகள் தமது தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ளக் கூடுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலகின் மிகப்பெரிய பயங்கரவாதியை அழித்தவர்கள் இலங்கையரே-டலஸ் அழகப்பெரும!

Wednesday, May 4, 2011
உலகில் மிகப் பிரபலம் பெற்ற முதல்நிலை வகிக்கும் பயங்கரவாதியை அழித்தவர்கள் அமெரிக்காவன்றி இலங்கையர்களே என இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற செயலமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், 20 வருடங்களுக்கு முன்னர் கல்வியின் ஆரம்பமாக அ,ஆ என்றிருந்தது. இப்போது அது மாறி டிஜிடெல் தொழில் நுட்பமாகி விட்டது. எனவே 20 வருட சரித்திர மாற்றத்திற்கு ஈடுகொடுக்க நாம் தயாராகவேண்டும். சகலரும் கணனிக் கல்வியில் திறமை காட்டுவதன் மூலமே எதிர்காலம் சிறக்கும்.

பிரபாகரனுடன் ஒசாமா பின் லேடனை ஒப்பிட முடியாது. ஒசாமா இரண்டு தாக்குதல்களை மட்டுமே மேற்கொண்டு சுமார் 3ஆயிரத்து 500 பேரைக் கொண்டொழித்த சரித்திரம்தான் உண்டு.

ஆனால் பிரபாகரனுக்கு தற்கொலைப்படை ஒன்றே இருந்தது. 300 ற்கும் மேற்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. முப்படைகளும் முப்படைத்தளங்களும் இருந்தன. சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களது கொலைக்குக் காரணமாக பிரபாகரன் இருந்ததோடு 30 வருட ஆதிக்கம் கொண்ட அமைப்பாகவும் காணப்பட்டது.

எனவே உலகிலே மிகப் பெறிய அல்லது முதலாம் இலக்க பயங்கரவாதியைக் கொண்டவர்கள் இலங்கையரே என தெரிவித்தார்.

Sunday, April 24, 2011

நாடு கடந்த தமிழ அரசின் பிரதிநிதிகளை சந்திக்கவே TNA சிங்கப்பூர் பயணம்!

Sunday, April 24, 2011
தமிழர்களின் பிரச்சினை பற்றி என்ன பேசப்போகிறோம் என்ற தீர்மானம் எடுப்பதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் சிங்கப்பூர் தான் செல்ல வேண்டுமா? நிச்சயமாக இவர்கள் அங்கு நாடு கடந்த தமிழ அரசின் பிரதிநிதிகளை சந்திக்கவே சென்றுள்ளார்கள் என தான் நம்புவதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் இங்கு பெரும் சிரமத்தில் இருக்கும்போது உல்லாசமான ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு சிங்கப்பூரில் போய் உல்லாச விடுதியிலிருந்து தான் தமிழர்களின் பிரச்சினை பற்றி என்ன பேசப் போகிறோம் என்பதைப் பற்றி தீர்மானம் எடுக்க சிங்கப்பூர் தானா செல்லவேண்டும். ஏன் யாழ்ப்பாணத்தி லிருந்து தீர்மானம் எடுக்க முடியாதா? மட்டக்களப்பில் இருந்து தீர்மானம் எடுக்க முடியாதா? திருகோணமலையில் சிறந்த ஹோட்டல்கள் எல்லாம் உள்ளன அங்கிருந்து தீர்மானம் எடுக்க முடியாதா? என்றும் பிரதியமைச்சர் முரளிதரன் கேள்வி எழுப்பினார்.

நிச்சயமாக இவர்கள் வேறு யாரையாவது சந்திக்கத்தான் சென்றிருக்க வேண்டும். வெளிநாட்டிலுள்ள தமிழர்களை நாடுகடந்த தமிbழம் என்ற ஒரு பிரிவின் அணி திரட்டிக் கொண்டுள்ளனர். இதேவேளை ஜெயானந்த மூர்த்தி உட்பட 28 பேர் நாடு கடந்த தமிbழத்திலிருந்து வெளியேறியுள்ளனர். நாடு கடந்த தமிbழம் என்பது வெறும் வெற்று வேட்டு என்பதை உணர்ந்திருக் கிறார்கள். இதனாலேயே இவர்கள் 28 பேரும் ஒதுங்கியுள்ளனர். இப்படியான ஒரு அணியுடன் தமிழ்த் தேசிய கூட்ட மைப்பு சேருமாக இருந்தால் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்துக்கு வழிவகுக்கும் செயலாகவே அமையும். இதே செயலில்தான் தமிழர் விடுதலைக் கூட்டணியும் கடந்த காலங்களில் செய்தது, என்றும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

புலித்தேவனையும் நடேசனையும் புலிகளே கொலை செய்தனர் முன்னாள் எம்.பி கனகரட்னம்!

Sunday, April 24, 2011
2008 ஒக்டோபர் முதலாம் திகதிக்கும் 2009 மே 18ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் வன்னிப் பகுதியில் வைத்து 600 அப்பாவி தமிழ் மக்கள் கட்டாக்காலி நாய்கள் போன்று சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இருந்த போதும் புலிகளுக்கு எதிரான போரின் போது இலங்கைப் படையினரால் ஒரு சிவிலியன் கூட கொலைசெய்யப்படவில்லை என முன்னாள் வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.எஸ். கனக ரத்தினம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை குறித்து ‘ஏசியன் டிரிபியூன்’ இணையத்தளத்திற்கு அளித்துள்ள பேட்டியிலே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பொது மக்களை புலிகள் மனிதக் கேடயமாக பயன்படுத்தி தடுத்து வைத்திருந்த போது இவரும் (கனகரத்தினமும்) பொதுமக்களுடன் புதுமாத்தளத்தில் தங்கியிருந்தார். அங்கு நடந்த சம்பவங்களை ஐ.நா. செயலாளரின் நிபுணர்கள் குழு திரிபுபடுத்தி கூறியிருப்பதை மறுத்துள்ள அவர், நிபுணர் குழுவின் அறிக்கை தவறானதென்றும் திரிபுபடுத்தி தயாரிக்கப்பட்ட அறிக்கை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.நா.செயலாளரின் பழிவாங்கும் மனப்பான்மையையே இந்த அறிக்கை சித்த ரிப்பதாகவும் மேற்கு நாடுகளில் உள்ள மனித உரிமை அமை ப்புகள் மற்றும் மேற்கு நாட்டு தலைவர்களின் கருத்தை பிரதிபலிப்பதையே வெளிப்படுகிறது எனவும் அவர் தனது பேட்டியில் தெரி வித்துள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வன்னியில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து விளக்கியுள்ள அவர் பொதுமக்க ளுடன் தங்கியிருந்து தான் நேரில் கண்ட வற்றை முதற் தடவையாக பகிரங்கப் படுத்தியுள்ளார்.

வன்னி மக்களின் பிரதிநிதி என்ற வகையில் அந்த மக்களுடன் தங்கியிருந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கியதாக குறிப்பிட்டுள்ள அவர் உக்கிர யுத்தத்தின் போது அப்பாவி தமிழ் மக்கள் துப்பாக்கி ஏந்திய புலிகளி னால் கட்டாக்காலி நாய்கள் போன்று ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவித்தார். உச்சக்கட்ட யுத்தத்தின்போது அரசாங்க உத்தரவையும் மீறி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் தங்கியிருந்ததாக முன்னாள் எம்.பி. கனகரத்தினத்திற்கு எதிராக அரசாங்கம் குற்றஞ்சாட்டியிருந்தது.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம் பெற்ற சம்பவங்கள், பாரதூரமான கொலை கள் பற்றிய நேரடி தகவல்களை ஐ. நா.வோ மேற்கு நாடுகளோ அறிந்திருக்க வில்லை என்று தெரிவித்துள்ள அவர், ஐ. நா. செயலாளரின் நிபுணர் குழுவின் அறிக்கையை முற்றாக நிராகரித்துள்ளார். மூன்றாவது அல்லது நான்காவது நபருக் கூடாக வெளியான அறிக்கைகள் மற்றும் புலி ஆதரவாளர்கள் மற்றும் அவர்கள் தொடர்பில் அக்கறையுள்ள அமைப்புகள் மூலம் கிடைத்த முறையற்ற தகவல்கள் என்பவற்றின் அடிப்படையிலே நிபுணர் குழு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தனது பேட்டியில் சுட்டிக்காட்டி யுள்ளார். நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையை உறுதிபடக் கூற முடியுமா என அவர் ஐ. நா. நிபுணர்கள் குழுவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வன் னிப் பகுதியில் இருந்த மக்கள் பங்கர்களில் இருந்து வெளியே வர முடியாதிருந்தனர். வெளியில் வந்த மக்கள் புலி துப்பாக்கி தாரிகளின் கட்டுப் பாட்டில் வைக்கப் பட்டனர். இந்த நிலையில் அந்த மக்கள் பற்றிய நேரடி தகவல் எதுவும் வெளி வந்திருக்க முடியாது எனவும் முன்னாள் எம்.பி. கனகரத்தினம் கூறியுள்ளார். வெள்ளைக்கொடி ஏந்திவந்த புலித் தலைவர்கள் படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்தும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார். முக்கிய புலி தளபதிகள் எவரும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்வதை பிரபாகரன் விரும்பவில்லை. அவர்கள் எப்பொழுதும் பிரபாகரனின் ஆயுதக் குழுவினால் சுற்றி வளைக் கப்பட்டே இருந்தனர். யாராவது புலித் தலைவர் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்ல முயன்றால் அவரை சுடுமாறு பிரபாகரன் உத்தரவிட்டிருந்த தாகவும் அவர் கூறினார்.

புலி உறுப்பினர்களுக்கு பிரபாகரன் சயனைட் கலாசாரத்தை அறிமுகப்ப டுத்தியிருந்தார். படையினரைத் தோற் கடிக்க முடியாத நிலையில் சயனைட் வில்லைகளை கடித்து தற்கொலை செய்யு மாறு பணிக்கப்பட்டிருந்தனர். இதனை எவரும் மீறுவதை பிரபாகரனால் சகிக்க முடியாதிருந்தது. நடேசனும் மற்றும் தலைவர்களும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்லும் நம்பிக்கைத் துரோகத்தை பிரபாகரன் ஒருபோதும் ஏற்றிருக்கமாட்டார். அவ்வாறான சந்தர்ப்பத்தில் பிரபாகரன் அவர்களை சுட்டுக்கொன்றிருக்கக் கூடும் என்றும் அவர் கருத்துக் கூறியுள்ளார்.

1983 ஆம் ஆண்டு தின்னவேலியில் (திருநெல்வேலி) வைத்து இராணுவ படையணி மீது நடத்திய தாக்குதலையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். அந்தத் தாக்குதலில் பிரபாகரன், கிட்டு, ஐயர், புலேந்திரன், சந்தோசம், செல்லக்கிளி, அப்பையா ஆகியோர் தொடர்புபட்டிருந்தனர். செல்லக்கிளி தனது இளைய சகோதரன் என்று கூறியுள்ள கனகரத்னம், இந்த தாக்குதலின் போது அவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டதாக கூறினார். இந்த சம்பவத்தையடுத்து தமது குடும்பத்தினர் புலிகளுடன் எந்த வகையிலும் தொடர்பு வைத்திருக்கவில்லை என்றும் கனகரத்தினம் கூறியுள்ளார்.தமிழ் செல்வனே தன்னை 2004 பொதுத் தேர்தலின் போது வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட் பாளராக நிறுத்தியதாக தெரிவித்துள்ள அவர் தனது பெயர் வேட்பாளர் பட்டி யலில் இருப்பதை கண்டு வியப்படைந் ததாகவும் கூறியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானது முதல் தான் வன்னி மக்களுடன் தங்கியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Saturday, April 16, 2011

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் அரசாங்கம் ஆராய்வு!

Saturday, April 16, 2011

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமித்திருந்த மூவர் கொண்ட நிபுணர் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதுடன் அவ்வறிக்கை தவறானது என்பதுடன் பாரபட்சமானதாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை கடந்த செவ்வாய்க்கிழமை செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளது. இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை அடிப்படையில் பல தவறுகளைக் கொண்டுள்ளதென்றும், பல குறைபாடுகள் இருப்பதாகவும், எந்த வகையிலும் உறுதிப்படுத்தாமல் பல தகவல்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், பாரபட்சமான தகவல்களை பயன்படுத்தியே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை ஐ.நா. சபையின் நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்ட குழுவொன்று ஆராய்ந்து வருவதாகவும் தமது தரப்பு விளக்கத்தை நாளை ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக தெளிவுபடுத்துவதற்கு கலந்துரையாடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Thursday, April 7, 2011

ஐக்கிய இராச்சியத்துக்கு புதிய விமானசேவை.

Thursday, April 7, 2011

ஐக்கிய இராச்சியத்துக்கு புதிய விமானசேவையை ஆரம்பிக்க அரசு முடிவு செய்துள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவின் பிரேரணைக்கு ஏற்ப ஐக்கிய இராச்சியத்துக்கும் இலங்கைக்கும் இடையில் புதிய விமான சேவையை மேற்கொள்வதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை இன்று தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Sunday, April 3, 2011

ராகுல் பிரசாரம் ஒருநாள் மட்டும் ; தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

Sunday, April 3, 2011

தமிழக சட்டசபை தேர்தலில் காங்., தரப்பில் சோனியா, வருவாரா என்ற கேள்விக்கு 5 ம் தேதி பிரசாரம் என்று முடிவு வந்தது. இந்நிலையில் காங்., பொதுசெயலர் ராகுல் வருவாரா என்ற கேள்விக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டது காங்கிரஸ் மேலிடம் ஆனால் தமிழகத்தில் ஒருநாள் மட்டும் பிரசாரம் எந்தளவிற்கு பயன்தரும் என்று காங்கிரஸ் இளஞைர் காங்கிரசார் சற்று உள்ளம் சோர்ந்து போய் உள்ளனர். வரும் 6ம் தேதி ஈர‌ோட்டில் பிரசாரம் செய்கிறார். தமிழக சட்டசபை தேர்தல் வரும் 13ம் தேதி நடக்கவுள்ளது. இதற்கான பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இம்முறை, சென்னையை விட்டு வெளி மாவட்டங்களிலேயே முக்கிய தலைவர்கள் அதிக பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். தி.மு.க.,வின் கோட்டை என கூறப்பட்ட சென்னையில், கடந்த முறை ஏழு தொகுதிகளை அ.தி.மு.க., கைப்பற்றியது. லோக்சபா தேர்தலிலும் மூன்றில் ஒரு இடத்தை அ.தி.மு.க., பெற்றது. இந்நிலையில், தி.மு.க., வேட்பாளர்கள் வெளிமாவட்டங்களில் போட்டியிடுகின்றனர். சென்னையில் ஐந்து தொகுதிகளில் காங்., வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். பிரசாரம் முடிய இன்னும் 10 நாட்கள் உள்ளதால், சென்னையில் பிரமாண்ட பிரசார கூட்டம் நடத்த தி.மு.க., முடிவு செய்துள்ளது. இதில், கூட்டணி தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்று பேச உள்ளனர். குறிப்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியாவை பங்கேற்க வைக்க மத்திய அமைச்சர் சிதம்பரம் மூலம் தீவிர ஏற்பாடுகள் நடக்கின்றன. புதுச்சேரி மற்றும் திருவனந்தபுரத்தில் நடக்கவுள்ள தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க சோனியா ஒப்புதல் அளித்துள்ளார். அதேநாளில், சென்னை பிரசார கூட்டத்தில் பேச அவருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதற்காக, தி.மு.க., நிர்வாகிகள் வேண்டுகோளின்படி, புதுவையைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நாராயணசாமி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆதரவாளர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். வரும் 5ம் தேதி தீவுத்திடலில் கூட்டம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, மத்திய உள்துறையைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகளான ஏ.எஸ்.எல்., படையினர், கடந்த சில தினங்களுக்கு முன், சென்னை வந்தனர். தி.நகர் பனகல் பார்க் அருகே தி.மு.க., கூட்டம் நடத்த முடிவு செய்துள்ள இடம், தீவுத்திடல் ஆகியவற்றை பார்வையிட்டு நேற்று டில்லி சென்றனர்.கடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணியின் பிரசார கூட்டம் தீவுத்திடலில் நடந்தது. இந்த கூட்டம் சென்டிமென்டாக வெற்றி பெற்றதால், இம்முறையும் அதே இடத்தில் கூட்டணி தலைவர்களுடன் கரம் கோர்த்து பிரசாரம் செய்யவும், காங்கிரசுக்கும், எங்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை, ஒற்றுமையுடன் இருக்கிறோம்' என மக்களுக்கு உணர்த்தும் வகையிலும் இக்கூட்டத்தை நடத்த, தி.மு.க., முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, ராகுலை வரவழைக்க வாசன் அணியில் உள்ள இளைஞர் காங்கிரசுக்கு பொறுப்பு தரப்பட்டுள்ளது. வரும் 6, 7 ஆகிய தேதிகளில் ஈரோடு, திருச்சி போன்ற பகுதிகளில் ராகுல் பிரசாரம் செய்வார் என தெரிகிறது. ஆனால், "அவர் சென்னைக்கு வந்து தி.மு.க., தலைவருடன் ஒரே மேடையில் பேசுவாரா? என்பது தெரியாது' என காங்., வட்டார தகவல்கள் கூறுகின்றன. புதுச்சேரியிலும் பிரசாரம் : காங்., தலைவர் சோனியா, வரும் 5ம் தேதி சென்னை கூட்டத்தை முடித்துவிட்டு, அங்கிருந்து புதுச்சேரி செல்கிறார். அங்கு நடக்கும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று, தி.மு.க., - காங்., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். அதுபோல், காரைக்காலில் காங்., கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, பிரதமர் மன்மோகன் சிங் பேசுகிறார். இதற்கான தேதி முடிவு இன்னும் செய்யப்படவில்லை.

இலங்கை வாழ் தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர் திருப்பதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

Sunday, April 3, 2011

இலங்கையில் தமிழர்களுக்கு தற்போது எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று திருப்பதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித் துள்ளார். மும்பையில் இந்தியா - இலங்கை அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தைக் காண ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியா வந்துள்ளார். அவர் தனது குடும்பத்துடன் சென்னையில் இருந்து கார் மூலம் திருப்பதி சென்றார். அவருக்கு வழி நெடுகிலும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திருப்பதி மலைப் பாதையில் அதிரடிப்படை பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருப்பதி கோவிலில் மத்திய பொலிஸ் படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வேத பண்டிதர்கள் அவரை நுழைவு வாயிலில் இருந்து கருவறைக்கு அழைத்து சென்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நன்றாக சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக சாதாரண பக்தர்கள் தரிசனத்தை தேவஸ்தான அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர். மஹிந்த ராஜபக்ஷ சுமார் 45 நிமிடம் வரை கருவறையில் சாமிதரிசனம் செய்தார். அப்போது எழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தரிசனத்திற்கு பிறகு ஜனாதிபதிக்கு வேத பண்டிதர்கள் பட்டு வஸ்திரம் அணிவித்து லட்டுகள் மற்றும் அனைத்து விதமான பிரசாதங்களையும் கொடுத்து ஆசி வழங்கினர். ஏழுமலையான் கோவிலில் தனது எடைக்கு எடையாக ரூ. 55 ஆயிரத்து நாணயங்களை துலாபாரம் செலுத்தினார். பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிருபர்களிடம் கூறியதாவது, இலங்கையில் உள்ள தமிழர்கள் தற் போது பாதுகாப்பாக உள்ளனர். அவர்க ளுக்கு எந்தவித பாதிப்போ, பிரச்சினையோ இல்லை. இலங்கை மக்கள் அனைத்து துறையிலும் முன்னேறவும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறவும் ஏழுமலை யானை வேண்டினேன் என்று தெரிவித்தார். பின்னர் அவர் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

Wednesday, March 30, 2011

உள்@ராட்சி சபைகளை வலுப்படுத்த சட்டதிருத்தம்

Wednesday, March 30, 2011.
விருப்பு வாக்கு சண்டை சச்சரவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உள்ளூராட்சி சபைகள் சட்டத்தில் விரைவில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுத் தெரிவித்தார். எதிரணியினரின் பொய்ப் பிரசாரங்க ளையும், சேறுபூசும் நடவடிக்கைகளையும் நம்பாது நாட்டு மக்கள் தொடராக எமக்கு ஆணை வழங்கி வருகின்றார்கள். மக்களின் ஆணையை மதித்து அதனைத் தொடர்ந்து பேணிப் பாதுகாப்பதுடன் மக்களின் தேவைகளை நிறைவேற்றி வைக்க வேண்டியதும் உங்களது பொறுப்பு என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறினார். உள்ளூராட்சி சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் வெற்றி பெற்ற உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களும் பிரதித் தலைவர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில் நேற்றுக் காலை 10.07 மணிக்கு சுபநேரத்தில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 205 உள்ளூராட்சி சபைகளை ஆளும் ஐ. ம. சு. மு. யும், அதன் கூட்டுக் கட்சிகளான ஸ்ரீல. மு. கா. 4 உள்ளூராட்சி சபைகளையும், தேசிய காங்கிரஸ் 2 சபைகளையும், மலையக மக்கள் முன்னணி ஒரு உள்ளூராட்சி சபையுமாக மொத்தம் 212 உள்ளூராட்சி சபைகளை ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இவற்றின் தலைவர்களும் பிரதித் தலைவர்களும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இவ்வைபவத்தில் தொடர்ந்தும் உரையாற்றுகையில், உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களாகவும், பிரதித் தலைவர்களாகவும் இப்போது சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளுகின்ற உங்களுக்கு நான் முதலில் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். மக்களுக்காக சேவை செய்யப் புறப்படுகின்ற நீங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும், எவற்றை நினைவில் வைத்து செயற்பட வேண்டும் என்பன தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் நாயகமும் இங்கு தெளிவுபடுத்தினார்கள். நாட்டு மக்கள் சுமார் இரு தசாப்தங்களாக எமக்குத் தொடராக ஆணை வழங்கி வருகின்றார்கள். அதுவும் எதிர்க்கட்சிகளின் பொய்களுக்கும் புரட்டுகளுக்கும் மத்தியில் மக்கள் எமக்கு ஆணை வழங்குகின்றார்கள். எதிரணியினர் எம் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்களை சிறிதளவேனும் நம்ப நாட்டு மக்கள் தயாரில்லை. அவை அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுகள். இதனை நன்குணர்ந்து தான் மக்கள் எமக்கு தொடர்ந்து ஆணை வழங்குகின்றார்கள். ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்க்கட்சியினர் மட்டும் தான் எனக்கு சேறு பூசினர். ஆனால் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்ட நீங்கள் எதிர்க்கட்சிகளது சேறு பூசுதல்களுக்கு முகம் கொடுத்தீர்கள். அதே போல் விருப்புவாக்குக்காக உட்கட்சிக்குள்ளும் சேறுபூசல்களை எதிர்கொண்டீர்கள். அவ்வாறான சேறு பூசல்களுக்கும் அப்பால் மக்கள் எம்மீதும் ஐ. ம. சு. மு. மீதும், உங்கள் மீதும் நம்பிக்கை வைத்துத்தான் ஆணை வழங்கியுள்ளார்கள். ஐ. ம. சு. மு. யை அமோக வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். ஆகவே மக்களின் ஆணையை மதித்து நடக்க வேண்டியது எமது பொறுப்பாகும். அவர்களது எதிர்பார்ப்புக்களையும் தேவைகளையும் நிறைவேற்றி வைக்க வேண்டியது உங்களது கடமையாகும். எதிரணியினர் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது அரசைக் கவிழ்க்கவே மக்களிடம் ஆணை கோரினர். இந்தக் காலப் பகுதியில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரித்திருந்தன. இவ்வாறான சூழ்நிலையினால் தான் நாம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொண்டோம். இத் தேர்தலில் எதிரணியினரின் அதிக உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும் எனச் சிலர் எதிர்பார்த்தனர். ஆனால் நாட்டு மக்கள் வயிற்றைப் பார்க்கவில்லை. எதிரணியினர் கூற்றுக்களை நம்பவில்லை. மாறாக அவர்கள் எதிர்பார்த்திராத அமோக வெற்றியை எமக்குத் தந்திருக்கின்றார்கள். மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்திருப்பதன் வெளிப்பாடு தான் இது. இந்தத் தேர்தலில் எமக்குக் கிடைக்கும் வெற்றி தாம் அரசுக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கும் பிரசாரங்களுக்கு வலு சேர்க்கும் என்றும் யுத்த நீதிமன்றத்திற்குச் செல்ல முடியும் என்றும் எதிரணியினர் எதிர்பார்த்தனர். அவர்களது எதிர்பார்ப்புகளை நாட்டு மக்கள் படுதோல்வி அடையச் செய்துள்ளனர். நாட்டு மக்கள் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும், ஐ. ம. சு. மு. யையும், உங்களையும் நம்பித்தான் இத் தேர்தலில் ஆணை வழங்கியுள்ளார்கள். நீங்கள் இந்த ஆணையை மதித்து நடக்க வேண்டும். மக்கள் மத்தியில் வாழ்பவர்கள் நீங்கள். கிராமத்தையும் நகரத்தையும் துரிதமாக அபிவிருத்தி செய்ய வேண்டியது உங்களது பொறுப்பே. ஜனாதிபதி, அரசாங்கம், மாகாண சபை, மற்றும் மக்கள் என சகல தரப்பினரும் உங்களுடன் இருக்கின்றனர். ஆகவே கிராமத்தையும், நகரத்தையும் துரிதமாக அபிவிருத்தி செய்வது கஷ்டமான காரியமாக இருக்காது. நாம் பதவிக்கு வந்த பின்னர் ஒவ்வொரு கிராமத்தையும் அபிவிருத்தி செய்யவென முப்பது மில்லியன் ரூபாவை ஒதுக்கினோம். ஆனால் ஒருசில உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களைத் தவிர ஏனைய வர்கள் இந்நிதியைப் பயன்படுத்திக் கொள்ள வில்லை. இந்த நிலை நீடிக்கக் கூடாது. மக்கள் குப்பை கூளங்களுக்கு மத்தியில் வாழ விரும்புபவர்கள் அல்லர். அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டியது உங்களது பொறுப்பாகும். அதேநேரம் நீங்கள் எப்போதும் முன்னுதாரணம் மிக்கவர்களாக செயற்பட வேண்டும். அப்போதுதான் நீங்கள் கூறுவதையும் மக்கள் ஏற்று செயற்படுவார்கள். விருப்பு வாக்குக்காக சண்டை, சச்சரவில் ஈடுபடுவதை இந்த சந்தர்ப்பத்தோடு கைவிடுங்கள். இதன் பின்னரும் அது நீடிக்கக் கூடாது. சகலரையும் ஒனறிணைத்துக் கொண்டு உங்களது கிராமத்தையும், நகரத்தையும் மேம்படுத்தும் பணியை ஆரம்பியுங்கள். நாம் விரைவில் உள்ளூராட்சி சபைத் திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்குக் கொண்டு வந்து நிறைவேற்றுவோம். அதன் பின்னர் விருப்பு வாக்கு சண்டையில் நீங்கள் ஈடுபட நேராது. இச்சட்டம் நிறைவேற்றப் பட்ட பின்னர் உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகம் சட்டத்திடம் இருக்கும். தலைவர்களுக்கும், உப தலைவர்களுக்கும், பொறப்புக்கள் சட்டப்படியே வழங்கப்படும். தற்போதைய ஏற்பாடுகளின்படி உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களுக்கு நிறைவேற்று அதிகாரம் வழங்கப் பட்டிருக்கிறது. காசோலைகளுக்குக் கையெழுத்திடும் அதிகாரமும் அவர்களிடமே உள்ளது. இது சில சமயம் உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களை சிறை செல்லக்கூட வழி செய்துவிடக் கூடிய அச்சம் நிலவுகிறது. இந்த விடயத்திலும் திருத்தம் கொண்டு வர உத்தேசித்துள்ளோம். காசோலைகளுக்கு அதிகாரிகள் கையெழுத்திடும் முறை கொண்டுவரப்படும். அது நிர்வாகத்தை வலுப்படுத்தவும் வழி செய்யும். இதேநேரம் உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களுக்கும், கட்சியின் தொகுதி மட்ட, மாவட்ட மட்ட அமைப்பாளர்களுக்கிடையில் நெருக்கமான உறவு இருப்பது அவசியம். இதனைப் பேணவேண்டியதும் உள்ளூராட்சி சபைத் தலைவர்கள், உபதலைவர்களின் பொறுப்பாகும். அத்தோடு கட்சியோடும் நெருங்கிச் செயற்படுவதும் அவசியம். இதனூடாக எமது கட்சியைப் பிரதேச மட்டத்தில் மேலும் வலுப்படுத்த முடியும். இந்த விடயத்திலும் ஒவ்வொருவரும் கூடிய கவனம் செலுத்துவது அவசியம் என்றார். இவ்வைபவத்தில் பிரதமர் டி. எம். ஜயரத்ன, அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, சுசில் பிரேமஜயந்த், தினேஷ் குணவர்தன, ஏ. எல். எம். அதாவுல்லா, ரிஷாட் பதியுத்தீன், பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண, கெஹலிய ரம்புக்வெல்ல அனுர பிரியதர்ஷன யாப்பா, டொக்டர் ராஜித சேனாரட்ன, ஏ. எச். எம். பெளஸி, நிமல் சிறிபால டி. சில்வா, பிரதியமைச்சர்கள் முத்து சிவலிங்கம், பiர் சேகுதாவூத், மேல் மாகாண ஆளுநர் எல். அலவி மெளலானா, பாராளுமன்ற உறுப்பினர்கள் வி. இராதாகிருஷ்ணன், ஏ. எச். எம். அஸ்வர், ஹுனைஸ்பாரூக் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

நான் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளேன். அந்தக் காட்சிகள் நம்ப முடியாதனவையாக இருந்தன - இயன் பொத்தம்!

Wednesday, March 30, 2011.

யாழ் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக வசந்தி அரசரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான நியமனக் கடிதம் இன்று யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தருக்கான தேர்தல் நடைபெற்றிருந்த பொழுதும் அடுத்த துணைவேந்தரை தெரிவு செய்யாததினால் தொடர்ந்தும் துணைவேந்தராக பேராசிரியர் என்.சண்முகலங்கன் பணியாற்றினார். துணைவேந்தர் தெரிவில் தொடர்ச்சியாக இழுபறிநிலை நடந்தது. இதனிடையில் தன்னை துணைவேந்தராக ஜனாதிபதி நியமித்தாக போராசியர் இரட்ணஜீவன்ஹீல் தெரிவித்திருந்தார். அந்தச் செய்தில் உண்மையில்லை என்றும் தொடர்ந்தும் என். சண்முகலிங்கனே துணைவேந்தர் என்றும் உத்தியோக பூர்வ தகவல்கள் தெரிவித்தன. இதனிடையில் இன்றைய தினம் (29.03.2011) மருத்துவப் பேராசிரியர் செல்வி வசந்தி அரசரத்தினம் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை பல்கலைக்கழக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அவர் நாளை முதல் கடமை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேராசிரியர் வசந்தி அரசரத்தினத்தை துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என தொடர்ச்சியாக அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்து வந்தார். அவரது கோரிக்கைக்கு ஏற்பவே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேராசிரியர் இரட்ணஜீவன்ஹீலை துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் ஜனாதிபதிக்கு நெருக்கமான அங்கஜன் இராமநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் ரங்கா போன்றவர்களும் கோரிக்கை விடுத்து வந்தார்கள் என ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று வருடங்களாக யாழ் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் என். சண்முகலிங்கன் யாழ் பல்கலைக்கழகத்தின் ஏழாவது துணைவேந்தராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் யாழ் பல்கலைக்கழக எட்டாவது துணைவேந்தராக வசந்தி அரசரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Sunday, March 20, 2011

உள்ளுராட்சி மூலம் மலையகத்தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட்டுள்ளது - பி.திகாம்பரம்!

Sunday, March 20, 2011
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்திலும் மலையக மக்கள் முன்னணியுடனான கூட்டுத்தொடருமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தேர்தல் முடிவுகள் வெளியாகியதைத் தொடர்ந்து நுவரெலியாவில் இடம் பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசிய பொதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தக்கூட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் தலைவி சாந்தினி தேவி சந்திரசேகரன் மலையக மக்கள் முன்னணியின் அரசியற்பிரிவு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வி. இராதாகிருஸ்ணன் உட்பட வெற்றிப்பெற்ற உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட பி.திகாம்பரம் மலையகத்தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தினைத் தக்க வைத்துக்கொள்வதற்காக இந்தத்தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிட்டதாகவும் இதன் மூலமாக பாரிய வெற்றி கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மலையகத்தில் சிறுபான்மை கட்சிகளின் ஒத்துழைப்பின்றி பெரும்பான்மைக்கட்சிகள் வெற்றிப்பெற முடியாது என்பதை இந்தத்தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளது. மலையக மக்கள் முன்னணியும் தொழிலாளர் தேசிய சங்கமும் இணைந்து நுவரெலியா பிரதேச சபையைக் கைப்பற்றியுள்ளமை வரலாற்றுச சாதனையாகும்.

நுவரெலியா பிரதேச சபைத்தேர்தலில் மக்கள் வாக்களிப்பதைத் தடுக்க முற்பட்ட போதும் மக்கள் துணிந்து வாக்களித்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். இந்தத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தைச் சேர்ந்த 9 உறுப்பினர்கள் வெற்றிப்பெற்றுள்ளனர். இவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறுயள்ளார்.

அகற்றப்படும் உயர் பாதுகாப்பு வலயங்கள்!

Sunday, March 20, 2011
யுத்த காலத்தின் பொழுது பல்வேறு துன்பதுயரங்களையும் அழிவுகளையும் தாங்கிக்கொண்ட யாழ். மக்கள் இன்று சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கியுள்ளனர். யுத்த காலத்தின் பொழுது நாட்டின் பாதுகாப்பிற்காக அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட பிரதேசத்திலிருந்து படிப்படியாக இராணுவத்தினர் விலக்கிக் கொள்ளப்பட்டு பொது மக்களுடைய நிலங்கள் அவர்களிடமே கையளிக்கப்படுகின்றன.

1995ஆம் ஆண்டு முதல் இராணுவப் பயன்பாட்டில் வைக்கப்பட்டிருந்த சுபாஸ் ஹோட்டல் 16 வருடங்களின் பின்பு அதன் உரிமையாளரிடம் கடந்த 17ஆம் திகதியன்று கையளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு அதியுயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டதால், தமது காணி பூமிகளை இழந்து நீண்டகாலமாக அவதிப்படும் மக்களுக்கு எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையை ஊட்டியுள்ளது.

“நாட்டின் பாதுகாப்பிற்காக 1995ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்திற்குப் பின்னர் நேற்று வரை சுபாஸ் ஹோட்டல் இராணுவத்தினரின் வசமிருந்தது. ஆனால் இன்று எமது ஹோட்டல் எம்மிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இது எனக்குச் சந்தோசமளிப்பதாகவுள்ளது” என யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதியிடம் சுபாஸ் ஹோட்டலைப் பெற்றுக்கொள்ளும் பொழுது சுபாஸ் ஹோட்டல் உரிமையாளர் எஸ். ஹரிகரன் தெரிவித்துள்ளார்.

சுபாஸ் ஹோட்டல் ஒப்படைக்கப்பட்டதுபோல் விக்டோறியா வீதியும் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல் குடாநாட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு யுத்த காலத்தின் பொழுது தடைசெய்யப்பட்டிருந்த பல வீதிகளும் திறந்துவிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் வீடுகளும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு பொது மக்களின் இயல்பான நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீண்ட கால யுத்தம், பொருளாதாரத் தடை, பல்வேறு வகையான தடைச் சட்டங்கள், அப்பொழுது குடாநாட்டின் அதிகாரத்தினைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த புலிகளின் அடக்கு முறைகள், எதிர்பாராத யுத்த அவலங்கள் போன்ற பல்வேறு துன்ப துயரங்களால் அவல வாழ்க்கை வாழ்ந்த இவர்கள் தமது பூர்வீக நிலங்களைவிட்டு இடம்பெயர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

பாதுகாப்பு வலயங்கள் அறிவிக்கப்பட்டு மக்களை இடம்பெயர் செய்த பொழுதும், அவர்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்து கொடுக்கப்படவில்லை என்பது கடந்த யுத்த காலத்தின் பொழுது சுட்டிக்காட்டப்பட்ட விடயமாகவிருந்தது. இதனைத் தற்பொழுதுள்ள அரசாங்கம் உடனடியாகவே நிறைவு செய்து வருவது பொதுமக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீதுள்ள நம்பிக்கையை வலுவடையச் செய்துள்ளது.

வலிகாமத்திலும், வடமராட்சி கிழக்குப் பகுதியிலும் பல்வேறு கிராமங்களில் மக்கள் மீள்குடியமர அனும திக்கப்பட்டுள்ளனர். ஏனைய பகுதிகளிலும் மக்கள் மீள்குடியமர உடனடியாக அனுமதியளிப்பதற்கு கண்ணிவெடிகள் தடையாகவுள்ளன. இதனை விரைவாக அகற்றிவரும் இராணுவத்தினர் அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் மக்கள் மீள்குடியமரக் கூடிய அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்து வருகின்றனர். இதன் முன்னேற்பாட்டு நடிவடிக்கையாக மின்சாரமற்ற பல பகுதிகளுக்கு மின்சாரம் வழங்குவதற்கான இணைப்புகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இதேபோல் இராணுவப் பயன்பாட்டிலுள்ள எந்த ஒரு பாதுகாப்பு வலயப்பகுதிகளிலும் பொதுமக்கள் ஆலய வழிபாடுகளில் ஈடுபட அநுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்விடயம் இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்திற்குட்பட்ட மதச் சுதந்திரம் சகல மக்களுக்கும் கிடைக்கக்கூடியதான ஏற்பாடுகளை இராணுவத்தினர் செய்து வருகின்றமையைக் காட்டுகிறது. தமது பகுதிகளுக்கு குடியிருக்கச் செல்ல முடியாத இம்மக்கள் ஆலய வழிபாடுகளுக்காக இப்பகுதிகளுக்குச் சென்று தமது குல தெய்வங்களினை வழிபட்டு வருகின்றபொழுது யுத்த அவலங்களால் ஏற்பட்ட பாதிப்புக்களை மறந்து இயல்பு வாழ்வுக்குத் திரும்புகின்றனர். இம்மக்களின் ஆன்மீக வாழ்வுக்கு வழிவகை செய்து கொடுக்கப்பட்டது போன்று சொந்த இடங்களில் மீள் குடியமரவும் அநுமதிக்கப்படவேண்டும் என்பது வடபுலத்திலுள்ள அனைத்து மக்களினதும் வேண்டுகோளாகவுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் அவர்களின் அழிவோடு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டாலும் நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இலங்கை இராணுவத்தினரிடமிருப்பதை மறந்து தமிழ் இனவாதக் கட்சிகள் குடாநாட்டின் உண்மை நிலையினை திரிவுபடுத்தித் தகவல்களை வெளியிட்டு வருகின்றன. பாதுகாப்பு வலயங்கள் தளர்த்தப்பட்டு பொது மக்களிடம் அவ்விடங்கள் ஒப்படைக்கப்படுவதால், இந்தக் கட்சிகளைச் சேர்ந்தோரும் நலன்களை அநுபவித்து வருகின்ற பொழுதும் இராணுவத்திற்கெதிரான பரப்புரைகளினைச் செய்வதில் தீவிர ஆர்வமுடையவர்களாக செயற்பட்டு தமது கட்சி நலன்களைப் பாதுகாப்பதில் குறியாகவுள்ளனர்.

குடாநாட்டைப் பொறுத்தவரையும் மொத்த நிலப்பரப்பில் 30%மான நிலப்பகுதி அதியுயர் பாதுகாப்புவலயமாக அறிவிக்கப்பட்டுள்ள பொழுதும், இந்த நிலப்பரப்பிலிருந்து படிப்படியாக இராணுவத்தினர் வெளியேறி பொது இடங்களில் முகாமமைத்து வருகின்றனர். இது குறித்து தவராகப் பிரசாரம் செய்ய வேண்டாம் என இராணுவத் தளபதியே அறிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு என்பதும், கடந்த 30 வருடங்களாக யுத்தத்துடன் வாழ்ந்த சமூகத்தில் உள்ள விஷமிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்பதும் முக்கியமான ஒரு விடயமாகவே பார்க்கப்படவேண்டும்.

பயங்கரவாதத்தினை முற்றாக ஒழிப்பதற்காக நன்கு திட்டமிடப்பட்ட நிலையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களை உடனடியாக அகற்றி எம்மை மீள் குடியமர்த்துமாறு கேட்பது எமக்கே ஆபத்தாக முடியும் என்பதே பொதுமக்கள் நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும். வெடி பொருட்கள் அகற்றப்பட்டால்தான் மனித நடமாட்டம் சாத்தியம் என்பதையும், யுத்தம் நடைபெற்ற பகுதிகளில் வெடி பொருட்களை அகற்றுவது இலகுவான காரியமில்லை என்பதையும் பொதுமக்கள் நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும்.

பாதுகாப்பு வலயங்களாக இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்ட பகுதிகளும் பொது மக்களின் நடமாட்டத்திற்குத் தடை செய்யப்பட்ட பகுதிகளும் குடாநாட்டுக்கே மட்டும் உரியவை அல்ல. யுத்த காலத்தின் பொழுது இவை நாடுபூராகவும் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றிலிருந்து இராணுவத்தினர் விலகுவது பொது மக்களுக்கு நன்மைதரும் விடயமாகவே அமைகிறது.

குடாநாட்டினைப் பொறுத்தவரையும் பலர் இந்த பாதுகாப்பு வலயங்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டாண்டு 8!ளிதி!8 வாழ்ந்து வந்த பூர்வீக நிலங்கள் அதியுயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டதால் கடந்த 20 வருடங்களாக இடம்பெயர்ந்து வாழ்ந்துவரும் இம்மக்களின் அடிப்படை வாழ்வியல் உரிமைகளுக்கு மதிப்புக்கொடுத்து சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படவேண்டும் என்பது இம்மக்களின் நீண்டகாலக் கனவாகவுள்ளது. இதனையே இங்குள்ள சமூக நலன் விரும்பிகளும் புத்திஜீவிகளும் விரும்புகின்றனர்.

மக்களின் மன உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுப்பதுபோன்று இராணுவத்தினரும் இம் மக்களின் பூர்வீக நிலங்களை அவர்களிடமே ஒப்படைத்துவருகின்றனர். கைக்குழந்தையாக இடம்பெயர்ந்த ஒருவர் தனது கைக்குழந்தையுடன் சொந்த நிலத்திற்குச் சென்று முதல் முதலாக தமது ஊரைப் பார்க்கும் நிகழ்வு ஆழ் மனதை உறைய வைக்கும் ஒன்றாக உள்ள பொழுதும், இப்பொழுதாவது இந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு, மக்களைச் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவது மகிழ்வுதரும் ஒரு நிகழ்வாகவே அனைவராலும் பார்க்கப்படுகிறது.

Saturday, March 12, 2011

தமிழகத்தில் புலிகள் அமைப்பின் இரகசிய பயிற்சி முகாம் இயங்குவதாக வெளியிடப்பட்ட கருத்தை இந்தியா நிராகரிப்பு!

Saturday, March 12, 2011
தமிழகத்தில் புலிகள் அமைப்பின் இகரசிய பயிற்சி முகாம்கள் இயங்குவதாக இலங்கை அரசாங்கம் வெளியிட்ட கருத்துக்களை இந்திய மத்திய அரசு நிராகரித்துள்ளது.

புலிகள் அமைப்பின் முகாம்கள் உள்ளதாக இலங்கை பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்களை திட்டவட்டமாக நிராகரிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விஷ்ணு பிரகாஷ் கூறியுள்ளார்.

ஊடகவியாளர் சந்திப்பொன்றில் எழுப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தை இந்திய அரசின் கவனத்திற்கு கொண்டுவரவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள இந்த கருத்துக்கள் துரதிஷ்டவசமானலை எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இத்தனைய ஊகங்கள் மற்றும் உறுதி செய்யப்படாத தகவல்களை வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோருவதாகவும் விஷ்ணு பிரகாஷ் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை தமிழகத்தில் புலிகளின் முகாம்கள் செயற்படுவதற்கு எந்தவித ஆதராங்களுக்கும் இல்லையென தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் லத்திக்கா சரண் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Wednesday, March 9, 2011

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்று மன்னாரில் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ.

Wednesday, March 09, 2011
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்று மன்னாரில் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கலந்துகொண்டார்.

மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திர சிறி, அமைச்சர்கலான றிஸாட் பதியுதீன், மில்றோய் பேணாண்டோ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கலான உவைஸ் பாரூக், உள்ளிட்டோரும்; கலந்து கொண்டனர்.

சகல அரச திணைக்கலங்களில் இருந்தும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மன்னார் மாவட்டத்தில் உள்ளுராட்சி சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.

சர்வதேச பெண்கள் தினம்:சவால்களை எதிர்கொண்டு முன் செல்ல சில கருத்துக்கள் - சிறிதரன். (பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்).

Wednesday, March 09, 2011
சர்வதேச பெண்கள் தினம் உலகளாவிய அளவில் நினைவு கூரப்படும் நிலையில் இலங்கையில் பெண்கள் நிலையையும் ,பால் சமத்துவமின்மையையும் எண்ணிப்பாhர்க்க வேண்டும். இலங்கை யுத்தத்தில் மரணமடைந்தவர்கள் போக வடக்கு கிழக்கில் பெரும்பான்மையான குடும்பங்கள் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களாகவே இருக்கின்றன.

இவர்கள் பல்வேறு சவால்களை எதிர் நோக்குகிறார்கள் .பாலியல் தக்குதல்கள் வீட்டிலும் வெளியிலும் இவற்றையும் தாண்டி வீட்டின் பொருளாதாரம், பிள்ளைகளின் கல்வி இன்னோரன்ன விடயங்களுக்கான தேவைகளுக்காககவும் அலைய வேண்டியருக்கிறது

சிறையிலுள்ள பிள்ளைகளின் விடுலைக்காக சிறப்பு முகாகளுக்கும் சிறைகளுக்கும் இவர்களே பெரும்பாலும் செல்ல வேண்டியிருக்கிறது. வீட்டைப்புனரமைப்பது ,நிவாரணம் மற்றும் கடன்களுக்காக இவர்களே அலைகிறார்கள். குடும்பத்திற்கு வருமானத்தைப் பெறுவதற்காக அன்றாட உழைப்பிலும் இவர்களே ஈடுபட வேண்டியிருக்கிறது.

கடந்த 30 வருட வன்முறை மயப்பட்ட சூழல் ,அதற்குப் பிந்திய சூழலில் கூடுதலாகப் பாதிக்கபட்டவர்கள் பெண்களே. வீடுகள் தனிமைத்துவங்கள் இழக்கப்பட்டதால் அசௌகரியங்களை எதிர்நோக்குபவர்கள் பெண்களே.

தனிமை, சமூகப்பாதுகாப்பின்மை என்பன எமது சமூகத்தில் மிக மோசமான பிரச்சனைகளாகும். மத்திய கிழக்கிலும், மேற்காசியாவிலும் வேலைக்குச் சென்ற பெண்கள் அனுபவிக்கும் துன்பங்கள் நாளாந்தச் செய்திகள் ஆகிவிட்டன.

சவுதி அரேபியாவில் மரணதண்டனையை எதிர் நோக்கி நிற்கும் மூதூர் சபீனா நாபிக் சிறுமியாக கைதுசெய்யப்பட்டு செய்யாத குற்றத்திற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு பல வருடங்களாக சிறை வாசம் அனுபவித்து வருகிறார். சவுதி அரேபியாவின் மானிடதர்மங்களற்ற அந்தக நீதிதிதுறையோ, அரசோ உலக மனிதாபிமானக் குரலுக்கோ அல்லது பகுத்தறிவு, உண்மைக்கோ செவிசாய்ப்பதாக இல்லை. மாத்தறையைச் சேர்ந்த இன்னொரு பெண்ணுகோ சிலுவை சுமந்த யேசுவிற்கு நடந்த கொடுமைகளை விட அதிகமாக கொடுமைகள் நடந்துள்ளன.

அவருக்கு வேலை வழங்கியவன் அவரின் உடல் முழுவதும் இரும்பாணிகளைச் செலுத்தியுள்ளான். பாலியல் வன்முறை சித்திரவதைகளுக்குள்ளான பெண்களும், பலசநதர்ப்பங்களில் கொல்லபட்ட பெண்களின் சவப்பெட்டிகளும் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்திறங்குவது சர்வ சாதாரணமாகி வருகிறது. அரசியல் சண்டியர்கள் பெண்கள் மீது நடத்தும் தூற்றுதல் அவதூறுகள் வன்முறைகள் என்பவற்றுக்கும் குறைவில்லை.

ஊடகத்துறையைச் சேர்ந்த பெண் ஒருவர் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதல் பலருக்கு ஞாபகமிருக்கும். அரசியலிலும் சினிமாவிலும் பிரபலமான பெண் ஒருவர் அண்மையில் உயிராத்தை விளைவிக்கும் விதமாக அவரின் தலையில் அவரது கணவரால் தாக்கப்பட்டுள்ளார்.

யுத்த சூழ்நிலையில் திருமணம் செய்ய நிர்பந்திக்கபட்டவர்கள் பலாத்காரமாக பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் பெண்களும் சிறுமிகளுமாகவே காணப்படுகின்றனர். சில சிறுமிகள் தமது அவலத்தைப்பற்றி பங்கர்கள் காப்பரண்களிலிருந்து எழுதிய கடிதங்கள் மன அதிர்ச்சியை ஏற்படுத்துபவை.

1930 களில் சர்வசன வாக்குரிமை வழங்கப்பெற்ற நாடாக இலங்கை இருப்பினும் தீர்மானம் எடுப்பதற்கான நிலைகளில் அரசியலில் பெண்களின் பங்காற்றல் குறைவாகவே இருக்கிறது. வவுனியா யாழப்;பாணம் கிளிநொச்சி மாவட்டசெயலாளர்களாக பெண்களே இருக்கிறார்கள்

எனினும், இலங்கையில் ஒட்டு மொத்த சமூக நிலைகளிலும் ஆணாதிக்க நிலைகளில் பெண்களுக்கெதிரான வன்முறைகளில் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டு விடவில்லை. பின்நோக்கிய நிலையே காணப்படுகிறது. வன்முறைகள் அதிகரித்துள்ளன.

யுத்தம் தேசிய விடுதலை இயக்கம் என்பவற்றால் பெண்களின் நிலையில் மாறுதல் ஏதும் ஏற்பட்டு விடவில்லை. தேசிய விடுதலை இயக்கம் பாசிசமாக உருத்திரிபடைந்தபோது ஜனநாயக இயத்தினுள் செயற்பட்ட பெண்கள் கொல்லபட்டதோடு தெருவுக்கு விரட்டப்பட்டார்கள். அவர்கள் கால வெளியில் உருவானகறுப்பு வெற்றிடத்தில் இழுக்கபட்டு உருவழிந்து போனார்கள.; தனது யுத்த யந்திரத்தேவைக்காக பாசிசம் பெண்களை தற்கொலை குண்டுதாரிகளாகவும் ,துப்பாகிதாரிகளாகவும் அணிதிரட்டியது.. பல சந்தர்பங்களில் பலவந்தம் செய்தது- ஈவிரக்கமற்ற கட்டாய ஆட் சேர்ப்பு முறையாக. இதன் விபரித விளைவு பேரினவாதம் பாலியல் பலாத்காரம், ஆட்கடத்தல் உட்பட பெண்ளுக்கெதிரான வன்முறை கட்டவிழ்த்து விட்டது.

தவிர எமது சமூகத்தில நிலவும் தீண்டாமைக் கொடுமைகளுடன் குறிப்பாக கிராமியத்தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் பேரினவாத ஒடுக்குமுறைகளுடன் மேலதிக சுமைகளைச் சுமந்தார்கள். யுத்தத்திலும் இந்த விழிம்பு நிலை பெண்களே பெருமளவுக்கு ஈடுபடுத்தப்பட்டார்கள். பெருமளவற்கு பிள்ளைகளின் இழப்பையும், வன்முறையையும் சந்தித்தார்கள். இது முழு வடக்குகிழக்கிற்கும் பொதுவானது.

தவிர எல்லையோரக்கிராமங்களில் வாழ்ந்த பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் அடிக்கடி வன்முறை தாக்குதல்களை எதிர் கொண்டார்கள். பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளானார்கள்;. இவர்கள் அனுபவித்த துன்பங்கள் பற்றிய யதார்த்த சினிமாக்கள் வெளிவந்துள்ளன.

காணாமல் போதல் யுத்தத்தில் பிள்ளைகளைப் பலிகொடுத்தல் என்பன தமிழ் சிங்கள சமூங்களிடையே பாரிய அளவில் நடந்துள்ளது. உடுத்த துணியுடன் விரட்டப்பட்ட வடபகுதி முஸ்லீம் பெண்கள் புத்தளத்திலும் அனுரதபுரம் போன்ற பகுதிகளிலும் அனுபவித்த துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

இந்த 3 வருடங்களும் நிகழ்ந்த இடம்பெயர்வு வங்க கடலை கடந்து அகதிகளாகச் செல்கையில் இறந்தவர்கள் அதிகமாக பெணகளும் குழந்தைகளுமே. சுனாமி அனர்த்தம், கிழக்கு- தெற்கு- வடக்கு கரையோரங்களிலும் இந்தோனேசியா இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகளிலும் பெருமளவிற்கு பெண்களையே காவு கொண்டது. எமது கரையோரச்சமூகங்களில் பாரிய அளவில் வெற்றிடம் ஒன்றைத்தோற்றுவித்துள்ளது.

மூதூர் மட்டக்களப்பு வன்னி இடம்பெயர்வுகளில் அகதி முகாம்களில் பெண்கள் அனுபவித்த துன்பங்கள் அளிவிடமுடியாதவை.

அவர்கள் யுத்தத்;தின் போதும் இடம்பெயர்வுகளின்போதும், சிறை சித்திரவதை முகாம்களிலும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத துன்பங்களை அனுபவித்தார்கள்.

யுத்தம் ஓய்ந்த பின்னர் புதிய வடிவங்களில் பெண்கள் மீதான வன்முறைகள் உருவாகியிருக்கின்றன. வன்முறையின் சாயல்கள் எமது சமூகத்திலிருந்து ஓய்ந்துவிடவில்லை. தற்போது நிகழும் ஆட்கடத்தல் காணாமல் போதலிலும் பெண்களே பெருமளவில் இலக்காகிறாhர்கள.;

திருமணம் என்பது மனிதர்களின் வாழ்க்கையில் நிகழும் முக்கிய நிகழ்ச்சி .ஆனால் ஆணாதிக்க நிலையை வலியுறுத்தும் சடங்காசாரங்கள் இன்று பெரும் எடுப்பிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.

பூப்புனித நீராட்டு விழா என்று சிறப்பு அழைப்பிதழ்கள் அச்சடிக்கபடுகின்றன. மனித உடலில் நிகழும் இயற்கை மாறுதல்களுக்கு விழா எடுப்பவர்கள் உலகத்தமிழர். கேட்க சற்று வெட்கமாகத்தான் இருக்கிறது.

எமது சமூகத்தின் தாரதம்மியத்தை உணர்த்துவதாக இவை அமைந்துள்ளன. ஒரு கடைந்தெடுத்த பிற்போக்கு உணர்வுநிலைமட்டம் காணப்படுகிறது.

எட்டுத்திக்கும் சென்றிருந்தாலும் பாமரராய் ,விலங்குகளாய் வாழ்கிறோம். கல்வி. தொழில் ஆகிய விடயங்களில் ஆண்களை விஞ்சிய நிலையில் பெண்கள் இருந்தாலும் சடங்காசாரங்கள் சம்பிருதாயங்கள் அவர்கள் மீது அடிமை உடைமைப்பிரகடனம் செய்கின்றன. வாழ்க்கையின் ஏணிப்படிகளில் அவர்கள் மேலே வருவதற்கு அவர்கள் பல சவால்களைச் சந்திக்கவேண்டியருக்கிறது.

தகவல்தொழில் நுட்பம் மல்டி மீடியாக்கள் போன்ற வசதிகள் பெண்களை ஆபாசமாகச் சித்தரிப்பதிலும் பிளக் மெயில்;;; செய்வதிலும் பயன் படுகின்றன. குறிப்பாக தமிழ் சூழலில் மெகா தொடர்களும், சினிமாவும் பெருமளவுக்கு பெண்களுக்கெதிரான வன்முறைகளை நியாயப்படுத்துகின்றன. அடங்கிப்போதல் .பொறுமை என்ற மந்திர உச்சாடனங்களைச் செய்கின்றன. எத்தகைய வன்முறைகளையெல்லாம் பெண்களுக் கெதிராக பிரயோகிக்கலாம் என்ற புதிய புதிய கண்டு பிடிப்புக்களை எல்லாம் செய்கின்றன.. பெண்களைப்பற்றிய ஒரு பாசிச மன நிலையுடன் இவை செயற்படுகின்றன. ஆனால் தமிழ் பெண்களில் ஒரு பகுதியினர்; உலகளாவிய அளவில் இந்த மெகாத்தொடர் போதையில் கிறங்கி கிடக்கிறார்கள்.

ஒருசில விதிவிலக்குள் இருக்கின்றன. அங்காடித்தெரு திரைப்படம் நகர்ப்புற ஜவுளிக்கடைகளில் வேலை செய்யும் பெண்கள் அனுபவிக்கும் துன்பங்கள் பற்றிய அதிர்ச்சியான செய்தியை எமக்களிக்கிறது. பெரும்பாலானவை அடி. உதை, படுகொலை, சகித்துப்போ என்பது போல்தான் இருக்கின்றன. பாதகம் செய்பவரை கண்டால் நீ பயங்கொள்ளலாகாது பாப்பா மோதி மிதித்துவிடு பாப்பா அவர் முகத்தில் உமிழந்து விடு பாப்பா என்பது போல் விடயங்கள் இல்லை.

யதார்தத்தை பிரதிபலிப்பதாகக் கூறி இந்த தொடர் தயாரிப்பாளர்கள் முடிவற்ற வன்முறையை சித்தரிக்கிறார்கள். இதுவே சமூக நியதி என மனதில் பதிய வைக்கப்படுகிறது. பெண்களைப்போகப் பொருளாக சித்தரிக்கும் போக்கு உலகமயமாக்கலுடன் முன்னெப்போதும் கண்டிராத அளவிற்கு மோசமடைந்துள்ளது

தமிழில் மட்டரகமான ஆண் மேலாதிக்கம் கொண்ட இரட்டை அர்த்தப்பாடல்கள் ,குரூர நகைச்சுவைகள் அதிகரித்துள்ளன. உயிரியல் தொழில் நுட்பத்தை வைத்து பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா என கருவிலேயே தீர்மானித்து அழித்து விடும் போக்குள் அதிகரித்துள்ளன.

ராஜம் கிருஸ்ணனின் மண்ணகத்துப் பூந்தளிர்கள் நாவலில் வரும் கள்ளிப்பால் பருக்குவது, மூக்கினுள் நெல்மணியைச் செலுத்துல் எல்லாம் மாறி பெண் குழந்தைகளை கருவறுக்கும் செயற்பாடுகள அதிகரித்துள்ளன. தமிழ் சமூகத்தில் பெண்களின் பண்பாட்டு புரட்சி ஒன்று தேவைப்படுகிறது. அதுவும் ஒரு சமூக இயக்கமாக முன்னெடுத்துச் செல்லப்படவேண்டும்.

இந்த விடயத்தல் தமிழர்கள் மத்தியில் நிலவும் ஆதிக்க கருத்துக்கள் மிகவும் கயமைத்தனம் நிறைந்ததும் நயவஞ்சகத்தனமானது என்பதிலும் எதுவித ஐயமும் இல்லை. ஆதனால் தான் வரலாற்று வெளிப்பாடாக தந்தை பெரியார் தோன்றினார். தந்தை பெரியாரின் முனைப்பான போராட்டம் சாதியமைப்பு பெண்ணடிமைத்தனம் இவற்றுக்கெதிராகவே.

திராவிடப்பேரியக்கம் இருந்த சூழலில் தமிழகத்தில் ஜனரஞ்சக சினிமாவில் எங்காவது பெரியாரின் சுயமரியாதை திருமணத்தைப் பார்த்திருக்கி;றீர்களா? பட்டிதொட்டியெல்லாம் பெரியார் இயக்கம் நடத்தியே அதனைச்செய்யமுடியவில்லையே.

பெண்கள் பலதுறைகளில் சவால்களுக்கு மத்தியில் முன்னேறி இருந்தாலும் .பெண்கள் இரண்டாம் பட்சமானவர்கள் அவர்களை இரட்சிக்க கதாநாயகர்கள் தேவை என்றெல்லவா வலியுறுத்தப்படுகிறது. பெண்களின் சுதந்திரதிற்கான இயக்கம் ஒரு தொடர் போராட்டமாகும்.

பொருளாதார சமத்தும் கல்வி என்பன இங்கு முக்கியமான விடயங்கள். இன்று பெருமளவிற்கு ஊதியமில்லாத உழைப்பாளர்கள் கீழைத்தேசத்துப் பெண்களே. குடும்ப உழைப்பிற்காக பெண்களுக்கு எதுவும் தரப்படுவதில்லை.வன்முறையற்ற சமூக ச+ழல், சட்டங்களில் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கெதிராக மாற்றம் கொண்டு வருதல், மரபுரீதியான சம்பிருதாயங்கள் தழைகளிலிருந்து விடுதலை சமூகப்பாதுகாப்பு கல்வி உத்தரவாதம் என்பன இங்கு முக்கியமான விடயங்கள்.

இந்தியாவில் பெண்களுக்குமேல் ஆண்கள் புரியும் அத்துமீறல்களுக்கெதிராக அண்மையி;ல் கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மகளிர் காவல்நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இலங்கையிலும் இத்தகைய அணுகுமுறைகள் தேவைப்படுகின்றன.

தமிழ் அரசியல் அரங்கைப்பொறுத்தவரை அதில் எத்தனை பெண்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை வைத்தே தமிழ் அரசியலின் தார்மீகத்தனத்தை நாம் புரிந்து கொள்ளமுடியும்

மிகவும் வளாச்சியடைந்ததாகச் சொல்லப்படும் நாடுகளில் கூட மிகவும் விகாரமான முறையில் பெண்களி மீது வன்முறை பிரயோகிக்கப்படுவதை நாம் பார்க்க முடியும். அமெரிக்காவில் பாடசாலை சிறுமியை 20 வருடங்களுக்கு முன்னர் கடத்தி பாலியல் பலாத்காரம் புரிந்ததையும் ,இவ்வளவு காலமும் அச்சிறுமியை வீட்டினுள்ளே சிறைவைத்திருந்ததையும,; பொலிசார் அண்மையில் தான் அப்பெண்ணை மீட்ட செய்தியையும் இது போன்ற பல வக்கிர குரூர வன்முறைகளையும் கேள்விப்பட்டிருக்றோம்.

மத ஒழுக்கத்தின பெயரில் மரபுகளின் பெயரில் ஒழுக்கத்ததை மீறியதாக பெண்கள் மீது பலர் பலாத்காரம் புரிந்தசெய்திகளையும் நிர்வாண ஊர்வலங்கள் நடத்தபட்ட செய்தியையும் நாம் அடிக்கடி கேளிவிப்படுகிறோம் இவ்வாறு பாதிக்கப்படும் பெண்களுக் உடனடியாக சட்டம் ஆதரவாக இல்லை சமூகமும் ஆதரவாக இல்லை. பாகிஸ்தானில் இத்தகைய சம்பவங்களை அடிக்கடி ளே;விப்படுகிறோம்.

அன்றாடம் லட்சக்கணக்கான பெண்கள் உலகளாவிய அளவில் துன்புறுத்ல்களுக்குளாகிறார்கள. அங்சாங்சுஜி மியன்மார் மக்களின் மனங்கலந்த ஜனநாயக இயக்கத்தின் தலைவி. மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்கள் உலகமே எதிர்த்துநின்றபோதும் அவருக்கெதிரான அச்சுறுத்தல்களை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எனினும் ஒருகாலத்தில் இடதுசாரி இயக்கத்தின் கெரில்லாப் போராட்டக்காரர் இராணுவ சிறைகளில் சித்திரவதைகளை அனுபவித்தவர் டில்மா பிறேசிலின் ஜனாதிபதியாகியிருக்கிறார்.

ஒடுக்கபட்ட சமூகப் பின் புலத்தில் வந்த மீரா குமார் இந்தியாவின் சபாநாயகர் ஆகியிருக்கிறார். ஆனால் உலகில் பால் நிலை சமத்துவம் வேண்டி நெடுந்தூரப் பயணமொன்றை மேற்கொள்ளவேண்டியருக்கிறது.

பெண்களுக்கு 30 வீத நாடாளுமனற் ஒதுகீடு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இலங்கையில் 2வீதமான பெண்கள கூட பாராளுமன்றத்தில் இல்லை என்பது வேறு கதை. சமூக பொளாதார வாழ்விலும் அரசியலிலும் சம பங்குதாரர்கள் ஆவதற்கான அடிப்படை மாற்றங்கள் நிகழ்ந்தாகவேண்டும். ஆபிரிக்க ,ஆரேபிய நாடுகளில் நிகழும் கிளர்ச்சிகளில் குறிப்பாக எகிப்தில் நடத்தப்பட்ட ஜனநாயகப் பேரியக்கத்தில் பெண்களின் பங்கு முக்கியமானது.

அந்த எழுச்சிகள் மத அடிப்படைவாதத்தை கொண்டிருக்கவில்லை.பெங்களுரில் இரவு உணவு விடுதிக்குச் சென்ற பெண்கள் தாக்கப்பட்டதை கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த காட்டுமிராண்டித்தனத்தை இந்தியாவின் அனைத்து ஊடகங்களுமே கண்டித்தன.

பிரேமனந்தா வகையறா போலிச்சாமியார்களின் பெண்களை இழிவு படுத்தும் சித்து விளையாட்டுகளுக்கெதிராகவும் பாரிய இயக்கங்கள் நடத்தப்படுகின்றன.

இலங்கையின் ஆடைத்தொழில் துறையில் ஈடுபட்டிருக்கும் குறைந்தகூலி பெறும் பெண்தொழிலாளர் பட்டாளத்தின் நிலையும் ,மலையகத் தோட்டத் தொழிலாள பெண்களின் நிலையும் இங்கு குறிப்பிட்டேயாகவேண்டும். இவர்களின் வாழ்க்கை தரம் இலங்கையின் சராசரி வாழ்க்கை தரத்தை விட கீழானது. வீடு, தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் கல்வியின்மை, போசாக்கன்மை என்பன இங்கு பாரிய பிரச்னைகள்

தொழிற்சாலைகளில் வங்கிகளில் ஏன் ஆஸ்பத்திரிகளில் ஏன் போக்குவரத்தில் பெண்கள்மீதான பாலியல் சார்ந்த துஸ்பிரயோகங்கள் அதிகமாகவே நடைபெறுகின்றன. இதனை பல சந்தர்பங்களில் நேரிடையாகவே அவதானிக்கமுடியும்

இதை விட யாழ்ப்பாணத்தல் அரச அலுவலகங்கிளில் வேலைசெய்யும் பெண்கள் சேலை அணியவேண்டும் என்று அரசாஙக அதிபர் சொன்னதாக ஒரு செய்தி இதற்கு முன்னர் நல்லூர் கோயிலுக்குவரும் பெண்கள் சேலை அணிந்து வரவேண்டும் என்று மாநகரசபை முதல்வரால் அறிவுறுத்தப்பட்டு அது ரத்துச்செய்யப்பட்டது. இவ்வாறான கருத்துக்கள் ஒருவருடைய உடைத்தேர்வு தொடர்பான ஜனநாயகப் பிரச்சனையாகும.; தென்னாசியாவில் 30 வீத்ததிற்கு மேற்பட்டபெண்கள் சுரி;தார் அணிகிறார்கள் அவர்களை நிந்தனை செய்வதுமாகும் .

ஆண்களின் அத்துமீறலுக்கு காரணம் பெண்களின் நடைஉடைபாவனைகளே என்ற பத்தாம் பசலி ஆணாதிக்க எண்ணப்பாடு இன்றளவில் எமது சமூகத்தில் நின்று நிலவுகிறது. பெண்கள் தொடர்பாக எமது சிந்தனன முறையிலும் ,சமூகச்செயற்பாடுகளிலும் மாற்றங்கள் தேவை.

அதற்கு சுதந்திரமான பிரக்ஞையுள்ள பெண்கள் இயக்கங்கள் தோன்ற வேண்டும். .இப்போது சில பெண்கள் நலன்சார்ந்த அரசார்பற்ற அமைப்புகள் இயங்குகின்றன. அவை மாத்திரம் போதாது. வரலாற்றின் தேவை இது

Sunday, March 6, 2011

TNAயில் நான் இருந்திருந்தால் புலிகளின் தலைவர் பிரபாகரனை காப்பற்றி இருப்பேன் -புலிகளின் எடுபிடி- ஆனந்தசங்கரி..

Sunday, March 6, 2011
தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இருந்திருந்தால் தான் புலிகளின் தலைவர் பிரபாகரனை காப்பற்றி இருப்பேன் என்று தமிழர் விடுதலைக்கூட்டனியின் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

மன்னார் மாவட்டம் முசலி பிரதேச சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் பொதுக்கூட்டம் நேற்று சனிக்கிழமை(05-03-11)அரிப்பு பொது மைதானத்தில் இடம் பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

நான் என்றும் புலிகளுக்கு எதிரானவன் இல்லை. அதில் இணைந்திருந்தவர்கள் எமது பிள்ளைகள்.எமது பிள்ளைகளை அழிக்க வேண்டாம் என்று மட்டும் தான் கூறிவருகின்றேன்.தற்போது கே.பி என்பவர் அரசாங்கத்திற்கு எடுபிடியாகவுள்ளார்.

மக்களுக்கு தொண்டு செய்து வந்த பல தொண்டு அமைப்புக்களை அரசாங்கம் தடை செய்துள்ளது. ஆனால் கே.பி தொண்டு நிறுவனமொன்றை நடத்தி அரசாங்கத்திற்கு எடுபிடியாக செயற்பட்டு வருகின்றார். இது எந்த வகையில் ஞாயம் என கேட்டார்.

ஆகவே முசலி வாழ் மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றும் அரசாங்கத்தினாலும் அமைச்சர்களினாலும் கொடுக்கும் பிச்சை பொருட்களை வேண்ட வேண்டாம் என்றும் அதனை தூக்கி எறிந்து விடுங்கள் என தெரிவித்தார்.

மேற்படி கூட்டத்திற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞரனித்தலைவர் சிவகரன்,சட்டத்தரணி சிறாயிவா ஆகியோரும் முசலி பிரதேச சபையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தொடர்ச்சியாக இருந்திருந்தால் பிரபாகரனை காப்பாற்றியிருப்பேன் - ஆனந்தசங்கரி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியில் தாம் தொடர்ச்சியாக அங்கம் வகித்திருந்தால் புலிகளின் தலைவர் பிரபாகரனை காப்பாற்றியிருப்பேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வேலுப்பிள்ளைப் பிரகாரனை தாம் விரோதியாக பார்க்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தவறான வழியில் சென்ற பிரபாகரனை சரியான பாதைக்கு திசை திருப்பும் முயற்சியில் தாம் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தை ஒருபோதும் வெற்றிகொள்ள முடியாது என தாம் பிரபாகரனுக்கு கடிதம் ஊடாக அறிவித்திருந்ததாக ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

தமிழீழக் கனவினால் இளம் உயிர்கள் காவு கொள்ளப்படுவதாக தாம் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடுதிரும்பிய இலங்கையர் கவலை 232 இலங்கையர் நாடு திரும்பினர்.

Sunday, March 6, 2011
லிபியாவில் சிக்கியிருந்த இலங்கையர்களுள் மேலும் 138 பேர் விசேட விமானமொன்றின் மூலம் நேற்று இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யூ. எல். ரக விமானத்தில் நேற்று பகல் 138 பேரும் நாடு திரும்பினர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பிற்கமைய இந்த விசேட விமானத்தை வெளிவிவகார அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது. திரிபோலியிலுள்ள இலங்கைத் தூதர் சுதந்த கனேகம ஆராச்சி இவர்களை திரிபோலி விமான நிலையத்திற்கு அழைத்துவந்து வழியனுப்பிவைத்தார்.

இதேவேளை லிபியாவில் எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலையொன்றில் தொழில்புரிந்த மேலும் 20 பேரும் நாடு திரும்பினர். நேற்றுக் காலை 8.35 மணிக்கு எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானமொன்றில் இலங்கை வந்தனர்.

ஏற்கனவே 104 பேர் இலங்கை வந்திருந்தனர். இவர்களுடன் இதுவரை 232 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். மேலும் விசேட விமானம் மூலம் நாளை லிபியாவிலிருந்து இலங்கையர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டு வருகிறது.

Thursday, March 3, 2011

பயங்கரவாதத்தினாலேயே நாடு அழிவடைந்தது- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

Thursday, March 3, 2011
எமது நாடு யுத்தத்தினால் அன்றி பயங்கரவாதத்தினாலேயே அழிவடைந்தது. யுத்தத்தினால் அழிந்த நாடு என்று எமது நாட்டை அடையாளப்படுத்துவது நாட்டிற்கு செய்யும் அவமதிப்பாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

பயங்கரவாதத்தினால் அழிக்கப்பட்ட நாட்டை கட்டியெழுப்பவே இன்று முப்படையினரும் ஈடுபட்டு வருகின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மனிதாபிமான நடவடிக்கை மூலம் பெற்ற வெற்றியை விற்றுப் பிழைக்க நாம் ஒரு போதும் தயாராக இல்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.

இலங்கை விமானப் படையின் 60ஆவது ஆண்டு பூர்த் தியை முன் னிட்டு கோலா கலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரதான வைபவம் இரத்மலானை விமானப் படைத் தளத்தில் நேற்றுக் காலை இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்:-

அதிசக்தி வாய்ந்த தொழில்நுட்ப வசதிகள், திறமையான விமானிகளைக் கொண்ட எமது விமானப்படை மிக சக்தி வாய்ந்ததாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. 1983ஆம் ஆண்டு உலகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த பயங்கரவாதத்திற்கு எதிராக போராட ஆரம்பித்தது. தாய்நாட்டுக்காக பாரிய பங்களிப்புக்களை செய்துள்ளது.

மனிதாபிமான நடவடிக்கையின் போது பயங்கரவாதிகள் மக்கள் மத்தியில் முகாமிட்டு இருந்தனர். இந்நிலையில் மக்களுக்கு எந்தவித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் தாக்குதல் நடத்தும் பொறுப்பு விமானப் படையினரிடம் இருந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் தான் மனித உரிமைகள் மீறல் தொடர்பாக உலகம் முழுவதும் பிரசாரம் செய்யப் பட்டது. அந்த நிலையில் தான் விமானப்படையினர் தமது நடவடிக்கைகளை பொது மக்களுக்கு பாதிப்புக்கள் இன்றி வெற்றிகரமாக முடித்தனர் என்றார்.“நான் நினைக்கின்றேன் உலகிலேயே எந்த ஒரு விமானப்படையினருக்கும் ஏற்பட்டிராத ஒரு இக்கட்டான நிலை எமது விமானப் படையினருக்கு ஏற்பட்டிருந்தது.

விமானப்படையின் இலக்கு தவறுதலாக பொதுமக்கள் வாழும் பிரதேசத்தில் விழுந்து அவர்கள் கொல்லப்பட்டிருந்தால் இப்போதைய நிலைமையை விட எமது நாட்டின் வரலாறு வேறாக எழுதப்பட்டிருக்கும். இவ்வாறான கஷ்டமான சூழநிலையை வெற்றிகொள்ள முடியாமல் இருந்திருந்தால் நாட்டை மீட்பதற்கான யுத்தத்தில் பாரிய தடை ஏற்பட்டிருக்கும்.

உலகிலேயே பாரதூரமான நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலகத்தில் சிறந்த விமானப்படை என்று சொல்லும் படையினரால் ஏற்படும் அழிவுகள் எதனையும் எமது விமானப் படையினர் தமது மனிதாபிமான நடவடிக்கையின் போது செய்யவில்லை என்பதை நான் பெருமையுடன் சொல்லிக்கொள்கின்றேன். யாழ். கோட்டையை மீட்டுக்கொண்டது முதல் உணவு எடுத்துச் செல்லல், படையினரை ஏற்றிச் செல்லல், படையினரை மீட்டெடுத்தல், உயிர் பாதுகாப்பு வழங்குதல் போன்ற விமானப் படையின் பல்வேறு நடவடிக்கைகள் பாராட்டத் தக்கன.

கடலில், தரையில் செல்ல முடியாத சந்தர்ப்பங்களில் எல்லாம் சென்று முப்படையினருக்கு தொடர்புகளை ஏற்படுத்தி நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்கு, பயங்கரவாதிகளை கட்டுப்படுத்தி செய்ய முடியாத பல வீரதீர செயல்களை விமானப்படை செய்தது. இதன் பெருமை அதனை சாரும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் எந்த சந்தர்ப்பத்திலும் கெளரவமாக நினைவு கூரத்தக்க ஒரு படையாக விமானப் படை கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. அதேவேளை, இலங்கைக்கு ஏற்ற வகையில் ஆளில்லா விமானங்களை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சுதந்திரமான இலங்கையில் மனிதாபிமானத்தை எப்போதும் வலுப்படுத்தும் விதத்திலேயே செயல்பட வேண்டும் என்று நான் இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.

60 ஆண்டு காலத்தில் உங்களுக்கு ஒரு சிறந்த தலைமைத்துவங்கள் கிடைத்துள்ளன. நாம் பெற்ற வெற்றிகளை நினைவு கூர வேண்டாம் என்றும், இவ்வாறான வெற்றிகளை கொண்டாடுவதற்கான நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என்றும் சிலர் கூறிக்கொண்டு இருக்கின்றார்கள்.

நாம் யுத்தத்தை விலை பேசிக்கொண்டிரு க்கின்றோம் என்றும் அவர்கள் கூறிக்கொண்டிருக்கின்றார்கள். சிலர் இவை தொடர்பாக நினைவு கூர வேண்டாம் என்றும் கூறுகிறார்கள் அன்று நாட்டை மீட்பதற்காக போராடிய போது அதற்கு எதிராக செயற்பட்டவர்கள் தான் இவ்வாறு கூறுகிறார்கள்.

உலகிலேயே மிகவும் மோசமான, பலம் வாய்ந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும்போது அதனை குழப்ப முயற்சித்தார்கள். உலகம் முழுவதும் தவறான பிரசாரங்களை கொண்டு சென்றார்கள் என்பதை நாம் நன்கு அறிவோம். இவ்வாறான நடவடிக்கைகள் இன்றும் இப்போதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எனவே நாம் ஒருபோதும் இந்த மனிதாபிமான நடவடிக்கையை விலை பேச ஆயத்தமாக இல்லை. இந்த வெற்றியை எப்போதும் எந்நேரத்திலும் மறந்துவிட முடியாது.

சரித்திரத்திலிருந்து துடைத்தெறிய முடியாது. மக்களின் மனதிலிருந்து அதனை நீக்கிவிட முடியாது. நன்றி உணர்வு கொண்ட மக்கள் இதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்பதை நான் மிகவும் பெருமையுடன் கூறிக்கொள்கின்றேன்

Followers

Blog Archive