
நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படும் வகையிலான பாடல்கள் உருவாக்கப்படக் கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இவ்வாறான பாடல்களை பிரிவினைவாதிகள் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பயன்படுத்திக்கொள்ளக் கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
'மே ரட்டே மினிஸ்சு தனிகர கெலின்னே பிஸ்சு' (இந்த நாட்டு மக்கள் விசர் வேலைகளையே செய்கின்றனர்) போன்ற பாடல்களை கேட்க முடிவதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ' லோகேம உதும்ம ரட்ட ஸ்ரீலங்காவை' (உலகின் மிகப் புனிதமான நாடு இலங்கை) போன்ற பாடல்கள் உருவானதாக அவர் தெரிவித்துள்ளார்.
நன்மதிப்பை கெடுக்கக் கூடிய வகையிலான பாடல்களை பிரிவினைவாத சக்திகள் தமது தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ளக் கூடுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment