
அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க ஜனாதிபதி யாழ்.கிளிநொச்சி விஜயம்:மக்கள் பேரணி கூட்டங்களிலும் பங்கேற்பு!
வடக்கில் அபிவிருத்திப் பணிகளைப் பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணம் மற் றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு நாளை 18ஆம் திகதி விஜயம் மேற்கொள்கிறார்.
யாழ்ப்பாணத்தில் மானிப்பாய், கோப்பாய், நெல்லியடி பிரதேசங்களில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள மக்கள் பேரணிக் கூட்டங்களில் கலந்து கொண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
நாளை புனர்வாழ்வு அமைச்சின் விசேட நிகழ்வொன்றில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி, 20ஆம் திகதி பரந்தன் ஆஸ்பத்திரியை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கிறார்.
அன்றைய தினம் கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையம் மற்றும் கிளிநொச்சி சந்தை கட்டடத்தொகுதி ஆகியவற்றுக்கான அடிக்கல்லையும் நடவுள்ளார். இதனைத் தொடர்ந்து கிளிநொச்சியில் நடைபெற விருக்கும் மக்கள் பேரணிக் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.
No comments:
Post a Comment