
தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது இராணுவம் இடையூறு விளைவித்ததாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானதென்றும் இராணுவம் பாதுகாப்பு கடமைகளையே மேற்கொண்டு வருவதாகவும் யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்தார். இராணுவத்தினருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே சிலர் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். மூன்று தசாப்தங்களாக போலியான பிரசாரங்களைச் செய்து அரசியல் நடத்திவந்த ஒரு சிலர் தற்போது இராணுவத்துக்கு எதிராக பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றனர். இவ்வாறான அரசியல் தலைவர்களால் ஆக்கபூர்வமான திட்டங்களை மேற்கொள்ள முடியாத நிலைமையை உணர்ந்துள்ள மக்கள் பெருமளவில் இன்று அரசுக்கு ஆதரவளித்து வருகின்றனர். இதனைப் பொறுக்க முடியாத இவர்கள் இராணுவத்தின் மீது போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்த ஆரம்பித்துள்ளனர். மக்களைத் திசை திருப்பும் நோக்கில் முன்வைக்கப்படும் இந்தக் குற்றச்சாட்டுக்களில் எதுவித உண்மையும் இல்லை என்றும் அவற்றை முற்றாக மறுப்பதாகவும் கட்டளைத் தளபதி மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment