
மொழி உரிமையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தியோகபூர்வ மொழி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசாங்க நிறுவனங்கள் திணைக்களங்கள் மற்றும் பொது இடங்களில் தேசிய மொழிக் கொள்கை அமுல்படுத்தப்படாவிட்டால் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசியல் சாசனத்தின் நான்காம் சரத்தின் அடிப்படையில் எந்தவொரு தனிப்பட்ட நபரோ அல்லது நிறுவனமோ மொழி உரிமை மீறப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்க நிறுவனங்கள் திணைக்களங்களில் ஆவணங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள தரவுகளை எவ்வித சிக்கலும் இன்றி வாசிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென உத்தியோகபூர்வ மொழி ஆணைக்குழுவின் செயலாளர் சீ.ஜே. ரெனிபுர தெரிவித்துள்ளார்.
மொழி உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில் புதிய விதிமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மொழி உரிமையை உறுதிப்படுத்தாத அரசாங்க நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இவ்வாறு மொழி உரிமையை உறுதிப்படுத்த தவறுவோருக்கு எதிராக ஆயிரம் ரூபா அபராதமும், மூன்று மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
No comments:
Post a Comment