
கொழும்பின் காலிமுகத்திடலில் சீனா ஆடம்பர துறைமுக நகர் ஒன்றை அமைக்கவுள்ளது. இதற்காக 500 ஏக்கர் கடல் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதன் மூலம் இலங்கை அரசாங்கத்துக்கு 700 மில்லியன் டொலர்கள் வருமானமாக கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த மூதலீட்டை மேற்கொள்ளும் நிறுவனத்தின் பெயர் இதுவரை வெளியாகவில்லை. ஏற்கனவே சீனாவின் சி.ஏ.டி.ஐ.சி என்ற விமான உற்பத்தியாளர் நிறுவனம், காலி முகத்திடலில் 10 ஏக்கர் காணிப் பரப்பில் ஆரம்பர ஹோட்டல் ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுத்து வருகிறது.
அத்துடன் பல சீன நிறுவனங்கள், அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் ஏனைய இடங்களில் பல்வேறு முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளன.
இதேவேளை காலிமுகத்திடலில் ஆடம்பர ஹோட்டலுக்கான காணி, 99 வருட குத்தகை அடிப்படையிலேயே சீன நிறுவனத்துக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. _
No comments:
Post a Comment