
மட்டக்களப்பு புத்தூர் பகுதியில் உள்ள அர வங்கியொன்றில் அண்மையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
இதற்கமைய சந்தேகநபர்கள் தொடர்பில் உறுதியான தகவலை வழஙட்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானத்தை வழங்க பொலிஸ் மா அதிபர் என்.கே. இளஙக்கக்கோன் தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பிலான தகவல்களை அறிந்தவர்கள் 011 2 32 01 45 அல்லது 011 2 42 21 76 அல்லது 011 2 38 03 80 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தகவல்களை பெற்றுக்கொடுப்போரின் இரகசியத் தன்மையை பாதுகாப்பதாகவும் பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.
கடந்த மாதம் 30 ஆம் திகதி குறிப்பிட்ட அரச வங்கிக்குள் நுழைந்த ஆயுதமேந்திய சந்தேகநபர்கள் பல இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுச் சென்றிருந்தனர்.
No comments:
Post a Comment