
அரசாங்கத்திற்கும் வடக்கு கிழக்கு மக்களுக்கும் இடையிலான தொடர்புகளில் இடைவெளி காணப்படுவதாக வடக்கு கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மக்களுக்கான சகல தேவைகளையும் அரசாங்கத்தினால் பூர்த்தி செய்ய முடியாது எனவும் அதற்கு அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் சிவில் மக்களுக்கும் இடையில் காணப்படும் பிணைப்பை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த காலங்களில் அரசாங்க உத்தியோகத்தர்கள் தமது காரியாலயங்களில் பிரபாகரனின் படத்தை வைத்திருந்ததாகவும் தற்போது அந்த நிலைமை மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும் அரசாங்க உத்தியோகத்தர்களின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் காலங்களில் வடக்கு மாகாணசபைக்கான தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து தாம் இன்னமும் தீர்மானிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரப்பகிர்வு குறித்து கூடுதல் கவனம் செலுத்துவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார அபிவிருத்தியின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என ஜனாதிபதி எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டிள்ளார்.
எனினும், நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி அதிகாரத்தை பகிர்வதன் மூலமே முழுமையான அபிவிருத்தி இலக்குகளை எட்ட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரம் பகிரப்படாமல் மக்களின் ஜனநாயக விருப்பங்களை நிறைவேற்ற முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, ஜனாதிபதியின் தற்போதைய நிலைப்பாட்டில் மாற்றம் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
18 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் வரையறுக்கப்படாத காலத்திற்கு ஜனாதிபதிக்கு அதீத அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக லக்பிம பத்திரிகைக்கு அளித்த செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment