
மத்திய மலைநாட்டில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதனால் மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அடைமழை பெய்கின்றது.
இதன் காரணமான கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வடைந்து, அதன் வான்கதவுகள் இரண்டு நேற்று திறக்கப்பட்டு இன்று மூடப்பட்டுள்ளது. கெனியன் மற்றும் லக்ஷபான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்து திறந்துவிடப்பட்டுள்ளன.
அத்துடன், ஹட்டன் டிக்கோயா நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளின் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. பொகவந்தலாவை, நோர்வூட், சாஞ்சிமலை ஆகிய பகுதி ஆறுகளில் வெள்ளம் அதிகரித்துள்ளதால் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.
மேலும் மலையகத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் அடிக்கடி மின் துண்டிப்பும் இடம்பெற்று வருகின்றது.
No comments:
Post a Comment