
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் கங்கிரஸின் உப தலைவருமான வீ. ராதாகிருஷ்ணனுக்கும் தமக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றிகரமாக முடிந்ததாக மலையக மக்கள் முன்னணியின்; தலைவர் சாந்தினி தேவி சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இந்த பேச்சு வார்த்தை இன்று இடம்பெற்றது.
இதன் போது, உயர் பதவி ஒன்றுடன் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.ராதாகிருஷ்ணனை தமது கட்சியில் இணைத்துக் கொள்ள தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மலைகய மக்கள் முன்னணியின் தலைவி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்படவுள்ள பதவி குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளாh.
இதேவேளை இது தொடர்பாக எமது செய்தி சேவை நாடாளுமன்ற உறுப்பினர் வீ. ராதாகிருஷ்ணனை வினவிய போது, பேச்சுவர்த்தை வெற்றியளித்ததாக தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணியால் வழங்கப்பட போதும் உயர் பதவியை ஏற்றுக் கொள்ள தாம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment