
உள்ளுராட்சி சபை திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் தமது வேட்பாளர் தெரிவுகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவி;த்துள்ளது.
இந்த தகவலை அமைச்சர் ராஜித்த சேனாரட்ன எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்;.
இதனிடையே, மாகாண சபைகளின் அனுமதிகள் கிடைத்தவுடன் திருத்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக அவர் குறிப்பி;ட்டார்.
அதனைத் தொடர்ந்து, பரிந்துரைகளுக்கு அமைய அந்தந்த தொகுதிகளுகளின் மக்களுக்கு சேவையாற்றக் கூடிய பிரதிநிதிகளை தெரிவு செய்யவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி உள்ளுராட்சி சபை தேர்தல்களுக்கான வேட்பாளர் தெரிவுகளை நேற்று ஆரம்பித்துள்ளது.
தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி திருத்த சட்டமூலத்திற்கு ஏற்ற வகையில் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்யவுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment