
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆளுமைத்திறனின் மூலம் நாட்டை எதிர்நோக்கியிருந்த இரண்டு பாரிய அச்சுறுத்தல் கள் வெற்றிகரமான முறையில் முறியடிக்கப்பட்டன. நம்நாட்டில் பயங்கரவாதிகள் பொருள் அழிவையும் மனித உயிர் அழிவையும் ஏற்ப டுத்தி அன்று நாட்டின் தேசிய பொருளாதாரத்தை சீர்குலைத்து வந்தனர்.
2005ம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷ என்ற மண்வாசனையுடைய தென்னி லங்கையில் தோன்றிய உதயசூரியனை இந்நாட்டு மக்கள் ஜனாதிபதி என்ற நாட்டின் மிக உயர் பதவியில் அமர்த்திய போது, அவருக்கு நாட்டு மக்களை துன்புறுத்திவரும் பயங்கரவாதத்தை பூண்டோடு அழி த்துவிடுவதுடன் நாட்டின் தேசிய பொருளாதாரத்தையும் அபிவிருத்தி செய்ய வேண்டுமென்ற ஆணையை மக்கள் விடுத்தனர்.
இவ்விரு பாரிய பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட சாதனை வீரரான ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ முதலில் தாம் ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பத ற்கு சரியாக ஓராண்டுக்கு முன்னர் சுனாமி ஏற்படுத்திய பேரலையினால் சீர்குலைந்து போன மக்களின் வாழ்க்கையை சீரமைக்கும் பணியையும், அவர்களின் இருப்பிடங்களையும் அப்பிரதேசத்தில் உள்ள ஆஸ்பத்திரி கள், பாடசாலைகளையும் மிகக்குறுகிய காலத்திற்குள் மீள் நிர்மாணம் செய்யும் பணியையும் வெற்றிகரமான முறையில் நிறைவேற்றினார்.
அடுத்தபடியாக ஜனாதிபதி அவர்கள் நேரடியாக எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதி களுக்கு எதிராக அவர் யுத்தத்தை தன்னிச்சையாக ஆரம்பிக்கவும் இல்லை. பேச்சுவார்த்தைகளின் மூலம் சமாதானத்தீர்வை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி அவர்கள் பல சந்தர்ப்பங்களில் எல்.ரி.ரி.ஈ. பிரதிநிதிகளுடன் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் உள்ளடங்கிய தூதுக்குழுவி னரை வெளிநாட்டில் சந்தித்து சமரச பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப் பதற்கும் முயற்சிகளை எடுத்தார்.
எல்.ரி.ரி.ஈயினர் போலி காரணங்களை முன்வைத்து பேச்சுவார்த்தைகளை உதறித்தள்ளிவிட்டு, கலந்துரையாடல் மேசையில் இருந்து வெளியேற வும் செய்தனர். இவ்விதம் ஜனாதிபதி நீட்டிய நேசக்கரத்தை உதறித்த ள்ளி விட்டு எங்களுக்கு பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையில்லை. ஆயு தப் போராட்டத்தின் மூலம் எங்கள் இலட்சியத்தை நிறைவேற்றிக் கொள் வோம் என்ற அகங்காரப் போக்கில் எல்.ரி.ரி.ஈ. தலைமைத்துவம் நடந்து கொண்டது.
இதனால், வேறுவழியின்றி மனவேதனையுடன் எல்.ரி.ரி.ஈயை யுத்த முனை யில் சந்திக்க வேண்டுமென்று சிந்தித்துக் கொண்டிருந்த காலகட்டத்தி லேயே, எல்.ரி.ரி.ஈ. அரசாங்கப் படைகளை ஏளனம் செய்யக்கூடிய வகை யில் மாவிலாறு வான்கதவை மூடி, பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்க எத்தனித்தது. இந்தக் கொடுமையை தாங்க முடியாது அரசாங்கம், எல்.ரி.ரி.ஈயுடன் மீண்டும் யுத்தத்தை ஆரம்பித்து 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதியன்று எல்.ரி.ரி.ஈ.யை அடக்கியது.
பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டிய சாதனையை ஏற்படுத்திய ஜனாதிபதி, அதையடுத்து தன்னுடைய சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் நாட்டின் அபிவிருத்திப் பணிகளை 2010ம் ஆண்டில் இரண்டாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி வாகை சூடிய பின்னர் ஆரம்பித்தார். ஜனாதிபதியின் அபிவிருத்தித் திட்டங்கள் ஏற்படுத்திய சாதனைகளை நாம் இன்று நாட்டின் நாலா பக்கங்களிலும் தோன்றியிருக்கும் மேம் பாலங்கள், பாலங்கள், நெடுஞ்சாலைகள், புதிய கட்டிடங்களைப் பார்த்து புரிந்து கொள்ள முடியும்.
இன்று அபிவிருத்திப் பணிகளை சிறப்பாக நிறைவேற்றிக் கொண்டிருந்தா லும் அரசாங்கம் பாதாள உலக கோஷ்டிகளையும், ஆயுத கலாசாரத்தை ஒழித்தல், போதைவஸ்து வர்த்தகத்தையும் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருதல் போன்ற பணிகள் நிறைவேற்ற முடியாத நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தது.
நிலைமை மோசமடைவதை புரிந்து கொண்ட ஜனாதிபதி அவர்கள் சகல கலா வல்லவராக விளங்கும் சாதனை வீரரான பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவிடம் பயங்கரவாதிகளை அடக்குவதற்கு தமக்கு உதவி செய்தது போன்று பாதாள உலகக் கோஷ்டிகளையும் ஆயுதக் கலாசாரத்தையும், போதை வஸ்துக்களையும் நாட்டில் ஒழித்துக் கட்டு மாறு கேட்டுக் கொண்டார்.
இராமபிரான் இட்ட ஆணையை தம்பி இலக்குமணன் ஏற்றுக் கொண்டது போன்று, பாதுகாப்புச் செயலாளர் இப்போது பாதாள உலகக் கோஷ்டியி னரை அடக்குதல், போதைவஸ்து வர்த்தகத்திற்கு முற்றுப்புள்ளி வைத் தல், ஆயுதக் கலாசாரத்தை அழித்தொழித்தல் போன்ற பணிகளை படிப் படியாக இப்போது வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.
பாதுகாப்பு செயலாளர் சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு அளித்த பேட் டியொன்றில், ஏற்கனவே பொலிஸார் நாடெங்கிலும் உள்ள பாதாள உலக கோஷ்டியினரை மடக்கிக் பிடித்து அவர்களிடம் உள்ள ஆயுதங் களை பறிமுதல் செய்யும் பணியை வெற்றிகரமாக ஆரம்பித்திருக்கிறார் கள் என்று சொன்னார். இப்பணிகளுக்கு உதவி செய்வதற்காக பொலி ஸாருக்கு இராணுவத்தினரும், கடற்படையினரும், விமானப்படையின ரும், தங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகிறார்கள்.
பாதுகாப்பு செயலாளர் எடுத்த இந்த செயற்பாடுகளால் கடந்த சில நாட் களில் பெருமளவு பெறுமதியுடைய ஹெரோயின் போதை வஸ்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு பொறுப்பானவர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கென விசேட பயிற்சி பெற்றவர்களை தாம் சேவையில் ஈடுபடுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.
பாதுகாப்பு செயலாளரின் சீரான தலைமைத்துவத்தின் கீழ் விரைவில் நாட்டில் பாதாள உலக கோஷ்டிகள் ஒழிக்கப்பட்டும் சட்டவிரோதமான சகல ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டும் போதைவஸ்து வியா பாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தும் இந்நாட்டை மக்கள் அச்சுறுத்தல்கள் இன்றி நிம்மதியாக வாழும் ஒரு அமைதியான நாடாக மாறுவதை எந்த சக்தியாலும் தடுத்துவிட முடியாது.
No comments:
Post a Comment