
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டாலும் பயங்கரவாதம் தலைதூக்குவதை தடுக்க பயங்கரவாத தடைச்சட்டத்தில் புதிய சட்டங்களை அமுல்ப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களின் பாதுகாப்பு முக்கியமானது இதனால் சில சட்டங்களை தொடர்ந்தும் அமுலில் வைத்திருக்க வேண்டும். தேவை ஏற்பட்டால் அரசாங்கம் புதிதாக சட்டங்களை உருவாக்கும்.
கிறீஸ் பூதங்கள் என்பது, விடுதலைப்புலிகளுக்கு உதவுவதற்காகவும் இலங்கைக்கு வரும் முதலீட்டாளர்களை தடுத்து நிறுவத்துவதற்காகவும் மேற்கொள்ளப்படும் பொய் பிரசாரமாகும். மக்களின் அச்சத்தை போக்க காவற்துறையினரும், முப்படையினரும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் சட்ட ரீதியான உரிமையுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஏனைய காணிகளை உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment