Sunday, July 10, 2011

சில புலம்பெயர் புலிகளின் சவால்களை எதிர்நோக்கத் தயார்–ஜனாதிபதி!

Sunday, July 10, 2011
சில புலம்பெயர் புலிகளின் ச சவால்களை எதிர்நோக்கத் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் புலிகளின் ஒரு சிலர், அரசாங்கத்திற்கு எதிராக சவால் விடுத்து வருவதாகவும் அதனை எதிர்நோக்க தயார் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். நாடு அபிவிருத்தி நோக்கி தொடர்ச்சியாக நகர்ந்து செல்லும் என அவர் தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். உண்மை நிலைமையை அறிந்து கொள்ளாது சில தரப்பினர் எவ்வித அடிப்படையுமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.

சில புலம்பெயர் சமூகங்கள் நாடு தொடர்பான பிழையான விம்பமொன்றை வெளிக்காட்ட முனைப்பு காட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு கிடைத்துள்ள சுதந்திரம் மற்றும் நிம்மதியை மூடிமறைக்க முயற்சிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நகரத்திற்கு மட்டும் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் கிராமங்களிலும் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive