
இலங்கை மக்களை அவமானப்படுத்தியமை, இராணுவத்தினரை கொலைகார்களாக சர்வதேச சமூகத்திற்கு மத்தியில் சித்தரித்தமை, பயங்கரவாத அமைப்பான புலிகளின் சர்வதேச வலையமைப்பின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக உதவியமை ஆகிய மூன்று பிரதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், வெளிநாடுகளில் உள்ள மூன்று சிங்கள அமைப்புகள் சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக பிரித்தானியாவின் வெஸ்மினிஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளன.
இந்த வழக்கின் பிரதிவாதிகளாக சேனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளர் கெல்லம் மெக்ரே மற்றும் வீடியோ காட்சிகளை வழங்கிய இலங்கையின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு என்பன குறிப்பிடப்பட உள்ளன.
வழக்கில் சாட்சியமளிப்பதற்காக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அழைக்கப்பட உள்ளதாக சிங்கள அமைப்புகளை சேர்ந்த அதிகரிகள் தெரிவிததுள்ளனர்.
அத்துடன் சேனல் 4 தொலைக்காட்சியிடம் 100 மில்லியன் பவுண்கள் இழப்பீடாக கோரப்பட்டுள்ளது. இலங்கை விமானப்படையின் வீடியோ படம் ஒன்றை ஐக்கிய நாடுகள் சபையின் செய்மதியில் எடுக்கப்பட்ட படம் எனக் கூறி, சேனல் 4 தொலைக்காட்சி உலக மக்களை தவறாக வழி நடத்தியுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கில் சாட்சியமளிப்பதற்காக மூன்று வீடியோ தொடர்பா நிபுணர்கள் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.
No comments:
Post a Comment