Wednesday, June 8, 2011

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் மூலம் தமிழர்களுக்கு சமவுரிமையை வழங்க இந்தியா எதிர்ப்பார்க்கிறது-சோ ராமசாமி!.

Wednesday, June 8, 2011
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் கீழ் இதனை மேற்கொள்ள முடியும் என்று இந்தியா எதிர்ப்பார்ப்பதாக தமிழக அரசியல் விமர்சகரும் துக்ளக் ஆசிரியருமான சோ ராமசாமி தெரிவித்துள்ளார்.ஏசியன் ரிபியூன் இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக இலங்கை அரசாங்கம், தமிழர்களுக்கு சமவுரிமையை வழங்கும் என்பதில் தமக்கு நம்பிக்கை இருப்பதாகவும் சோ ராமசாமி தெரிவித்துள்ளார்.

அதனை தாம் காத்திருந்து பார்க்கப்போவதாகவும் சோ குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளதாக வெளியான தகவலை மறுத்த அவர் சென்னையை விட்டு எங்கும் செல்வதற்கு தயாரில்லை என்று குறிப்பிட்டார்.

சோ ராமசாமியின் துக்ளக் வாராந்த இதழின் 170,000 பிரதிகள் விற்பனையாகின்றன

இந்த இதழ் தமிழகத்தின் படித்தவர்கள் மத்தியில் பிரபல்யமான இதழாக கருதப்படுகிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருங்கிய அரசியல் ஆலோசரான சோ ராமசாமி, கடந்த சட்டசபைத்தேர்தலில் நடிகர் விஜயகாந்தை ஜெயலலிதாவின் கூட்டணிக்குள் இணைப்பதில் வெற்றிக்கண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Followers

Blog Archive