
கற்றுக்கொண்ட பாடங்கள் மற் றும் நல்லிணக்க ஜனாதிபதி ஆணை க்குழு யாழ்ப்பாணத்தில் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை 4 நாட்கள் சாட்சியங்களைப் பெற் றுக்கொள்ளவுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்வினால் அமைக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றம் நல்லி ணக்க ஆணைக்குழு நாட்டில் பல் வேறு தரப்பினரிடம் இனப்பிரச்சினை, போரின் பாதிப்புக்கள் குறித்து சாட்சியங்களைப் பெற்றுவருகிறது.
யாழ்.மாவட்ட மக்களிடம் எதிர் வரும் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதிவரை 4 நாட்கள் சாட்சியங்களைப் பதிவு செய்யவுள்ளது. எதிர்வரும் 11ஆம் திகதி காலை 9 மணிக்கு செயலகபிரிவு குருநகர் கலாசார மண்டபத்திலும், முற்பகல் 11.30 மணிக்கு நல்லூர் பிரதேச செய லக பிரிவு மக்களிடம் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய மண்ட பத்திலும், பி.ப. 2.00 மணிக்கு கோப் பாய் பிரதேச செயலக மக்களிடம் நீர் வேலி கிராம அபிவிருத்திச் சங்க மண் டபத்திலும் சாட்சியங்கள் பதிவு செய் யப்படவுள்ளது.மறுநாள் 12ஆம் திகதி காலை 9.00 மணிக்கு தெல்லிப்பழை, உடுவில் பிரதேச செயலகபிரிவு மக்களி டம் அளவெட்டி மகாஜனசபை மண்ட பத்திலும் மாலை 4.00 மணிக்கு சண்டிலிப்பாய், சங்கானை மற்றும் காரைநகர் பிரதேச செயலக பிரிவு மக்களிடம் சித்தன்கேணி மகளிர் அபிவிருத்தி சங்க மண்டபத்திலும் சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளது.
எதிர்வரும் 13ஆம் திகதிகாலை 9.00 மணிக்கு பருத்தித்துறை மரு தங்கேணி பிரதேச செயலக பிரிவு மக்களிடம் குடத்தனை தேவா லயத்திலும், பிற்பகல் 2.30 மணிக்கு கரவெட்டி பிரதேச செயலக பிரிவு மக்களிடம் நெல்லியடி முருகன் கோயிலிலும் மாலை 3.30 மணிக்கு சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவு மக்களிடம் சாவகச்சேரி கலாசார மண்டபத்திலும் சாட்சியங்கள் பதிவு செய்யப்படும்.
இறுதி நாளான எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு ஊர்காவற்றுறை, நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபர் பிரிவு மக்களிடம் ஊர்காவற்றுறை புனித அந்தோ னியார் தேவாலயத்திலும்,மாலை 4.30 மணிக்கு வேலணை பிரதேச செயலக பிரிவு மக்களிடம் மண்கும் பான் பிள்ளையார் ஆலய கல்யாண மண்டபத்திலும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஜனாதிபதி ஆணைக்குழு சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளது.
No comments:
Post a Comment