
சீனாவின் என்.ஐ.சீ.எனப்படும் சீன தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று கொழும்பை வந்தடைந்தனர். மட்டக்களப்பு மாவட்டம் கரடிய னாறு பொலிஸ் வளாகத்தில் நிகழ்ந்த டைனமற் கொள்கலன் வெடிப்பு சம்ப வம் தொடர்பில் சந்தேகம் வெளியிட் டுள்ள நிலையில் அது குறித்து நாடளா வியரீதியில் புலனாய்வு விசாரணைகளை மேற்கொள்வதற்கே இவ்வமைப்பு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இலங்கையிலுள்ள ஏனைய சீன நிறுவனங்களின் பாதுகாப்புத் தொடர்பாகவும் இப் புலனாய்வுக் குழு வினர் ஆராயவுள்ளனர் என சீன ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
அதேவேளை கரடியனாறு வெடிப்புச் சம்பவம் குறித்து ஏற்கெனவே இந்தியா சந்தேகம் தெரிவித்துள்ளமையை சீன ஊடகமான சிங்குவா மேற்கோள்காட்டியுள்ளது.
No comments:
Post a Comment