
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிராக இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தண்டனையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கீகரித்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவெல தெரிவித்தார்.
இந்தத் தீர்ப்பின் மூலம் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு 30 மாதக் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்றுவரும் அமைச்சரவைத் தீர்மானங்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதியின் சிபாரிசு அடங்கிய ஆவணம் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.
இராணுவ நீதிமன்றத்தின் நியமனம் மற்றும் தண்டனைகளை உறுதிப்படுத்தும் அதிகாரம் ஆகியவற்றைக் கொண்டவரும் முப்படைத் தளபதியுமான ஜனாதிபதியால் இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பு செப்டெம்பர் 29 ஆம் திகதி - அதாவது நேற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும் இராணுவ ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment