
கடற்படையினரின் வடமேல் பிராந்திய தலைமைக் காரியாலயம் இன்று மன்னார் மாவட்டத்தின் முள்ளிகுளம் பிரதேசத்தில் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இத்தலைமைக் காரியாலயம் இது வரை காலமும் புத்தளத்தில் இருந்து வந்த நிலையில் இப்புதிய இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திஸாரா சமரசிங்கவின் அழைப்பின்பேரில் பாதுகாப்புச் செயலாளர் இங்கு வந்து புதிய தலைமைக் காரியாலயத்தைப் பார்வையிட்டு திறந்து வைத்தார்.
இந்த இட மாற்றம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முப்படைகளைச் சேர்ந்த உயரதிகாரிகள், சர்வமத குருமார் உட்பட அரச உயர் மட்டத்தினர் பலரும் வைபவத்தில் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment