
இளைஞர்கள் மத்தியில் விவசாயம் தொடர்பில் ஆர்வத்தை ஊட்டும் தொளிப் பெருளிலான விவசாய வாரமும், கண்காட்சியும், இன்று ஆரம்பிக் கப்பட்டுள்ளது.
இது அம்பாந்தோட்ட பட்ட அத்த விவசார விஞ்ஞாக தொழினுட்ப பூங்காவில் ஜனாதிபதியினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
விடுதலை பெற்ற ஒரு நாட்டை தன்னிறைவு பெற்றதாக மாற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பு என இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.
உள்ளுர் விவசாயிகளை பலப்படுத்துவதற்கு, விதைகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதன் அவசியம் குறித்தும் அவர் அதன் போது வலியுறுத்தினார். விதைகளை போதியளவு பணம் இல்லை எனக்கூறி அதனை விடமுடியாது . பணம் இல்லை என்பதை காரணமாக கொண்டு அபிவிருத்தியை பிற்போடுவது கூடாது. நாட்டில் யுத்தம் இருந்த சந்தர்ப்பத்திலும் பணம் இல்லை என்றே கூறப்பட்டது அதன் பொருட்டு உடன்படிக்கையும் செய்துக்கொள்ளப்பட்டது. எனினும் தமது அரசாங்கம் பணம் இல்லை என்பதை கருத்திற்கொள்ளாது யுத்தத்தை முடித்து வைத்ததாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்த விவசாய வாரமும் கண்காட்சியும் எதிர்வரும் 5 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.
இதனிடையே, இந்த அம்பாந்தோட்ட பட்ட அத்த விவசாய விஞ்ஞான தொழினுட்ப பூங்கா இன்று முதல் ஷமல் ராஜபக்ஸ விவசாய விஞ்ஞான தொழினுட்ப பூங்கா என பெயர் மாற்றம் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment