
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு, சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ‘’மறைந்த காங்கிரஸ் தலைவர் மூப்பனாரின் சிலை கும்பகோணத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதனை ஜுலை மாதம் 3ம் தேதி மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி திறந்து வைக்கிறார்.
இந்த விழாவில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்’’ என்று தெரிவித்தார்.
அவர் மேலும், ‘’கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் நான் 10 கோரிக்கைகளை முன் வைத்தேன். அவை மாநாட்டுத் தீர்மானங்களாக நிறைவேற்றப் பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
கட்சி பாகுபாடின்றி அனைத்து தமிழர்களும் மாநாட்டில் கலந்து கொண்டதும் மகிழ்ச்சிக்குரியது.
இலங்கைத் தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டுமென்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசும் இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாங்களும் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளோம்.
அண்மையில் இந்தியா வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவும், தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்துள்ளார்’’என்று தெரிவித்தார்
இந்த விழாவில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்’’ என்று தெரிவித்தார்.
அவர் மேலும், ‘’கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் நான் 10 கோரிக்கைகளை முன் வைத்தேன். அவை மாநாட்டுத் தீர்மானங்களாக நிறைவேற்றப் பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
கட்சி பாகுபாடின்றி அனைத்து தமிழர்களும் மாநாட்டில் கலந்து கொண்டதும் மகிழ்ச்சிக்குரியது.
இலங்கைத் தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டுமென்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசும் இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாங்களும் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளோம்.
அண்மையில் இந்தியா வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவும், தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்துள்ளார்’’என்று தெரிவித்தார்
No comments:
Post a Comment