Friday, April 16, 2010

அணுசக்தி உபயோகத்தைச் சிங்கப்பூர் தொடர்ந்து பரிசீலிக்கும்: பிரதமர் லீ

FRIDAY, APRIL 16, 2010

அணுவாயுதப் பாதுகாப்பைப் பலப் படுத்தும் உலகளாவிய முனைப்பால், சிங்கப்பூரின் அணுசக்தி உபயோகப் பரிசீலனையில் மாற்றமேதும் இருக்காது என்று பிரதமர் லீ சியன் லூங் வாஷிங்டனில் கூறியிருக்கிறார். அங்கு நடைபெற்ற இரண்டு அணுவாயுதப் பாதுகாப்பு மாநாட்டுக்குப் பின் திரு லீ, சிங்கப்பூர் செய்தியாளர்களிடம் பேசினார்.
இந்நடவடிக்கைகளால், அணுசக்தியை எரிபொருளாகப் பயன்படுத்தும் சிங்கப் பூரின் திட்டம் பாதிக்கப்படுமா என்று பிரதமர் லீயிடம் கேட்கப்பட்டது.
“இல்லை, எந்தப் பாதிப்பும் கிடையாது. பல நாடுகள் அணுசக்தியைப் பயன் படுத்துகின்றன, மேலும் பல நாடுகள் அணுசக்தியைப் பயன்படுத்தும் சாத்தியத்தை ஆராய விரும்புகின்றன. ஆனால், அணுசக்தி உலைகள் எவ்வாறு செயல்படுகின்றன, மூலப்பொருட்கள் எவ்வாறு பெறப்படுகின்றன, எத்தகைய பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை நிர்ணயிக்க முறையான பாதுகாப்பு விதிகள் இருக்கவேண்டும்.
உதாரணமாக, அணு உலைகள், மூலப் பொருட்கள் போன்றவற்றைச் சேகரித்து வைப்பதிலும் கையாளுவதிலும் மிகுந்த கவனம் தேவை.
“எனவே, இவையனைத்தையும் நாம் கவனமாகப் பரிசீலிக்கவேண்டும். ஆனால் இக்காரணங்களால் திட்டத்தில் மாற்றம் ஏதும் இருக்காது,” என்றார் பிரதமர் லீ.
FRIDAY, APRIL 16, 2010
ஏழாவது நாடாளுமன்றத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் தெரிவான சகல உறுப்பினர்களையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சந்திக்கவிருக்கின்றார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவிருக்கின்ற இந்த சந்திப்பிற்கான அழைப்பிதழ் சகல உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த அமைச்சரவை தொடர்பில் தெளிவுப்படுத்துவதற்கே ஜனாதிபதி அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்th தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவான உறுப்பினர்களும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஒன்றுகூடி கலந்துரையாடவிருக்கின்றனர்.

இலங்கையில் சமாதானம்-ஆஸி. பிரதமர்

Friday, 16 April 2010
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் தற்போது சமாதானம் நிலவுவதாக ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ருட் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், புகலிடம் கோரி விண்ணப்பிப்பிக்கும் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் நிலைமைகள் கவனத்திற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.

பாதுகாப்பு நிலைமைகள் முன்னேற்றமடைந்திருக்கும் நிலையில், அரசியல் புகலிடம் கோரி விண்ணப்பித்தவர்களின் பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் கெவின் ருட் குறிப்பிட்டார்.

இலங்கையில் பெரும்பாலான இடங்களில் தற்போது பாதுகாப்பு சூழ்நிலையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும், அண்மையில் ஜனநாயகத் தேர்தல் நடைபெற்றிருப்பதாகவும் கெவின் ருட் சுட்டிக்காட்டினார்.

வாக்களிப்பு நிலையத்திலேயே வாக்குகள் எண்ணும் பணி!

FRIDAY, APRIL 16, 2010
வாக்களிப்பு நிலையத்திலேயே வாக்கு எண்ணும் பணி எதிh;வரும் 20 ஆம் திகதி நடைபெறவூள்ள மீள் வாக்குப் பதிவூ நிலையத்தில் இடம்பெறவூள்ளது.
எதிர்வரும் 20ம் திகதி மீள் வாக்களிப்பு திருகோணமலை கும்புறுப்பிட்டியலில் உள்ள வாக்குச்சாவடியில் மட்டும் நடைபெற உள்ளதோடு அந்த வாக்குகளை எண்ணும் பணிகளும் அதே இடத்திலேயே நடத்தப்பட உள்ளதாக திருகோணமலை உதவித் தேர்தல் ஆணையாளர் எச்.எம்.என். தெனிபிரிய
கும்புறுபிடியவிலுள்ள ஒருவாக்குச் சாவடியின் வாக்குகள் மோசடிகள் இடம்பெற்றதையடுத்து ரத்துச் செய்யப்பட்டு மீள வாக்களிப்பு நடைபெற உள்ளது.
இங்கு 977 பேரே வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கான வாக்களிப்பு ஒரே வாக்களிப்பு நிலையத்தில் நடைபெற்று அதே நிலையத்தில் வாக்குகளை எண்ணவூம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வாக்களிப்பு நிலையத்திற்கும் வாக்குகள் எண்ணும் பணிகளுக்கும் 50ற்கும் குறைவான உத்தியோகத்தர்களே ஈடுபடுத்தப்படவூள்ளனர்

Wednesday, April 14, 2010

தமிழ்-சிங்கள பாரம்பரியங்கள் இரண்டறக் கலந்த புத்தாண்டு

Wednesday, April 14, 2010
குயில்கள் கூவும் சத்தங்களுடன், பூத்துக் குலுங்கும் மரங்களின் மீது பறவைகளின் கீச்சிடும் சத்தங்களுடன் சித்திரை வசந்த காலம் உதயமாகிறது. இந்த வசந்த காலத்துடன் இன ஒற்றுமையை வலியுறுத்தும் தமிழ், சிங்கள புத்தாண்டு ஆரம்பமாகிறது.

முப்பது வருட காலம் யுத்த சூழ்நிலையினால் மக்களுக்கு ஏற்பட்டிருந்த துன்ப, துயர அனுபவங்கள், கஷ்டங்கள் நீங்கிய நிலையில் சமாதானமும், அமைதியும் கொண்ட சூழ்நிலையில் 2010ஆம் ஆண்டு புதுவருடம் பிறந்துள்ளது.

பிறந்திருக்கும் சித்திரைப் புத்தாண்டு எமது நாட்டில் வாழும் சகல இன மக்களுக்கும் சாந்தியும், சமாதானமும் நிறைந்த ஆண்டாகிறது. அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் நிலைமை இப்போது ஏற்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது.

இந்து, பெளத்த மத பாரம்பரிய கலாசார கொண்டாட்டமாக இலங்கையில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் காணப்படுகின்றன. இவ்விரு சமூகமும் புரிந்துணர்வு, ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து இதனைக் கொண்டாடுகின்றன. இரு சமூகங்களுக்கிடையிலும் வித்தியாசமான பாரம்பரிய கலாசார நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

இந்துக்கள் மருத்து நீர் வைத்து முழுகி, பொங்கிப் படைத்து, புத்தாடை அணிந்து கோயிலுக்கு சென்று வழிபட்டு, முதியோரை வணங்கி ஆசிர்வாதம் பெறுவர். கைவிசேடம் வழங்கி, வர்த்தக கொடுக்கல், வாங்கல் செய்து குடும்பத்தினர் ஒன்றிணைந்து உண்டு மகிழ்ந்து கொண்டாடுவர்.

இதுபோல சிங்கள மக்களும் புத்தாண்டு உணவுண்பதில் பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கின்றனர். நல்ல நேரம் பார்த்து அடுப்பேற்றி சமைத்து, உணவுண்பர். தலைக்கு சுப நேரத்தில் வயதில் மூத்த ஒருவர் மூலம் அல்லது மதகுரு ஒருவர் மூலம் எண்ணெய் தேய்ப்பர்.

உற்றார், உறவினருக்கு பலகாரங்கள் பரிமாறி, பட்டாசு கொளுத்தி, கணக்குத் தொடங்கி வைத்து செய்யும் தொழிலினை ஆரம்பித்து கொண்டாடுகின்றனர். இதற்கு ஏற்ற வகையில் வர்த்தக வங்கிகள் கொடுக்கல், வாங்கல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்கின்றன.

இரு சமூகங்களும் புதுவருடத்தில் உறவினர் வீடுகளுக்கு சென்று குசலம் விசாரித்து, பலகாரம் உண்டு, தேநீர் அருந்தி மகிழ்வுறும் நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன.

புதுவருடத்துடன் கிராமங்களில் விளையாட்டுகள் ஆரம்பிக்கின்றன. இளைஞர்கள், யுவதிகள் ஒன்றிணைந்து இந்த வசந்தகால புதுவருட கலாசார நிகழ்வில் பங்கேற்பர். முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. இவை சமாதானத்திற்கும், ஒற்றுமைக்கும் வழிகோலுகின்றன.

மாட்டு வண்டி சவாரி, பட்டம் விடுதல், மரதன் ஓட்டம், சைக்கிள் ஒட்டம் ஊஞ்சலாட்டம், சடுகுடு, போர்த் தேங்காய் அடித்தல், கொம்புடைத்தல், கும்மியடித்தல், ரபான் அடித்தல், சவுக்கு மரம் ஏறுதல், கயிறு இழுத்தல், பல்லாங்குழி விளையாடுதல், தலையணைச் சண்டை, முட்டி உடைத்தல், யானைக்கு கண் வைத்தல், விநோத உடை, ஓட்டப் போட்டிகள் ஆகியன நடத்தப்படுகின்றன.

வருடா வருடம் புதுவருடம் பிறக்கும், நம் வாழ்வில் எத்தனையோ கொண்டாட்டங்கள் வரும். ஆனால் ஒவ்வொரு புத்தாண்டிலும் சலித்துப் போகாமல் பழைய கொண்டாட்டங்களிலேயே மீண்டும் மீண்டும் ஈடுபட்டு மகிழ்ச்சியையே பெறுகின்றனர்.

கடந்த 30 வருடமாக எமது இலங்கை மக்கள் ஈடுசெய்ய முடியாத இழப்புகளை சந்தித்துள்ளனர். விலைமதிக்க முடியாத உயிர்களையும், சொத்துக்களையும் இழந்துள்ளனர். இனியும் இழக்க முடியாது. இழக்க ஒன்றுமேயில்லை. கொடிய யுத்தம் முடிவுபெற்றுள்ளது. புதிய சுகவாழ்வுக்கான காலம் உதயமாகியுள்ளது. சகல இன மக்களிடத்தும் வாழ்வில் புது விடியல் ஏற்பட்டுள்ளது.

மீண்டும் ஒற்றுமையுடன் ஒன்றிணையும் காலம் தோன்றியுள்ளது. புது வருடப் பிறப்பில் புத்தாடைகளை மட்டுமல்ல, புது உறவுகளையும் பெறுவோம்.

30 வருட யுத்தத்தின் பின் ஏற்பட்டுள்ள இந்தச் சூழல் அற்புதமானது. மீண்டும பழைய ஒற்றுமைக்கு சென்று இனங்கள் ஒன்றிணைந்து இப் புது வருடத்தினை கொண்டாட வேண்டும்.

Tuesday, April 13, 2010

TUESDAY, APRIL 13, 2010

வாக்காளர்களுக்கு நன்றி – பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

வாக்காளர்களுக்கு நன்றி
எமதன்புக்குரிய வாக்காளப் பெருமக்களே! நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் எமது கட்சியின் சின்னமான மெழுகுதிரிக்கு வாக்களித்து எம்மை ஊக்கப்படுத்தியுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். அத்துடன் எமது கட்சிக்காக இத்தேர்தலில் கடுமையாக உழைத்த எமது கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் அனுதாபிகளுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தத் தேர்தலில் நாம் பல கட்சிகளுடன் இணைந்து ஓரணியாக நின்று போட்டியிடவே விரும்பினோம். ஆனால் அதற்கான ஒத்துழைப்பைத் தருவதில் பல கட்சிகள் தயக்கம் காட்டின. ஒற்றுமைக்கான எமது முயற்சிகளையும் புறக்கணித்தன. இருப்பினும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் எமது கட்சியும் ஒற்றுமையாகச் செயல்படுவது என தீர்மானித்தோம். அதனடிப்படையில் எமது கட்சியின் பெயரில் நாம் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டோம். இதில் மூன்று தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரும் இணைந்து கொண்டனர். அதே நேரம் வன்னியில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் எமது தோழரொருவரையும் இணைத்துக்கொண்டு போட்டியிட்டது. மேலும் எமது கட்சி திருகோணமலையிலும் போட்டியிட்டது.
இந்த மூன்று மாவட்டங்களிலும் மக்கள் எம்மீது காட்டிய அக்கறையும் ஈடுபாடும் எம்மை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இன்னும் சிறிது காலங்களில் மக்களின் ஒரு சக்திமிக்க இயக்கமாகப் பரிணமிக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பிரமுகர்கள் கூட்டுக் கட்சியல்லää மாறாக மக்கள் புரட்சிகர இயக்கம். வடக்கு கிழக்கு மாகாண ஆட்சிக்கு உயர்ந்தபட்ச அதிகாரப் பகிர்வுக்காகவும்ää மக்களின் ஜனநாயக சுதந்திரங்களுக்காகவும்ää சமூக நீதிக்காகவும்ää பொருளாதார சுரண்டல்களுக்கு எதிராகவும்ää சாதிப்பாகுபாடுகளற்ற சமத்துவத்திற்காகவும் போராடும் இயக்கத்தை வழிநடத்தும் அரசியல் தலைமையே எமது கட்சி.
எமது கட்சி வெற்றிகளைக் கண்டு பெருமிதங் கொண்டதுமில்லை. தோல்விகளைக் கண்டு துவண்டதுமில்லை. கடந்த முப்பது ஆண்டுகளில் எமது கட்சி பல ஆயிரம் தோழர்களையும்ää மிகச் சிறந்த தலைவர்களையும் தமிழ்மக்களின் சுதந்திரத்திற்காகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் தியாகம் செய்திருக்கின்றது. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக எமது சொந்த உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் அரசியல் உறவுகொள்ள முடியாத அளவுக்கு பெரும் இக்கட்டான சூழல்களைக் கடந்து வந்திருக்கின்றது.
இப்போது ஏற்பட்டிருக்கும் பயங்கரவாதம் மற்றும் யுத்த ஆபத்துக்கள் அற்ற சூழலின் காரணமாக எமது கட்சியினர் மக்கள் மத்தியில் சுதந்திரமாகச் சென்று கட்சியின் கொள்கைளையும் திட்டங்களையும் விளக்குவதற்கான நிலைமைகள் ஏற்பட்டிருக்கின்றன. இன்னமும் மக்கள் மத்தியில் இருந்து முற்றாக பயப்படும் போக்குகள் நீங்கவில்லை. மக்கள் மத்தியில் தமது எதிர்காலம் பற்றிய நம்பிக்கையீனங்களும் விரக்திகளும் பரவலாகக் காணப்படுகின்றன. அதிகாரப் பகிர்வு தொடர்பாக மக்கள் மத்தியில் அரசாங்கம் பற்றிய சந்தேகங்கள் உள்ளன.
மக்கள் மத்தியில் நிலவும் எதிர்மறையான உணர்வுகளையும் எண்ணப்பாடுகளையும் நாம் எதிர்வரும் காலங்களில் நீக்கவேண்டும். எமது கட்சி மக்களிடையே ஒரு புதிய நம்பிக்கையை வளர்ப்பதிலும் எதிர்கால முன்னேற்றமான போக்குகளை நோக்கி மக்களை அணிதிரட்டுவதிலும்ää அரசியல் அதிகாரப் பகிர்வுக்கான ஓர் இயக்கத்தை நடாத்துவதிலும் முன்னணி வகிக்கும். மக்கள் அமைப்புக்களை பரவலாகக் கட்டியெழுப்பி பரந்துபட்ட மக்கள் கட்சியாக எழுச்சிபெறும் வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தேர்தல் என்னும் குறுகிய நோக்கம் கொண்ட கட்சியல்லää மாறாக இது ஒரு சமூக அரசியல் இயக்கம். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியோடு இணைந்து ஒரு புரட்சிகர இலட்சிய இயக்கத்தை வலுவாக முன்னெடுக்க முற்போக்கு ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.
சுதந்திரம்ää ஜனநாயகம்ää சகோதரத்துவம்ää சமூகப் பொருளாதார முன்னேற்றம் என்பவையே எமது இலட்சியங்கள். அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான விடுதலையே எமது குறிக்கோள்.

பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ,ஈபிஆர்எல்எவ்

TUESDAY, APRIL 13, 2010


புத்தாண்டு அனைத்து வழிகளுக்குமான புதிய ஆரம்பமாக அமைய வேண்டும்!
முப்பதாண்டுகளுக்குப் பின்னர் முழு இலங்கையிலும் தமிழ், சிங்கள மக்கள் இணைந்து சுதந்திரமாகக் கொண்டாடும் இப்புத்தாண்டானது அனைத்து வழிகளு க்குமான புதிய ஆரம்பமாக அமையுமென பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தமது புத்தாண்டு செய்தியில் தெரிவித்து ள்ளார்.
தமிழ்- சிங்கள புது வருடப் பிறப்பை முன்னிட்டு பிரதமர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;
சிங்கள, தமிழ் புத் தாண்டு என்பது ஒவ் வொரு ஆண்டும் உதய மாகின்ற போதிலும் கூட இலங்கை வாழ் மக்கள் அந்த தினத்தை புதிதாக பிறக்கின்ற ஒரு வருடமாகவும், புதிய ஆரம்பம் ஒன்றினை குறிப்பிடும் ஒரு நாளாகவும் கருதியே செயற்படு கின்றனர்.
இந்த முக்கிய தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பழக்க வழக்கங்கள் எமது கலாசாரமாக மாற்றம் பெற்றுள்ளமை மூலம், புது வருடப் பிறப்புடன் எமது சமூகத்திலே புத்துணர்ச்சி யொன்று ஏற்படு வதை எடுத்துக் காட்டுகின்றது.
சிங்களவர்களின் பழக்க வழக்கங்களை பேணிப்பாதுகாத்து பழைய கோபதாப ங்களை மறந்து புதிய உணர்வுடன் பணியாற்றுவதற்காக இந்த தினம் உதயமாகும் வகையில் முதியவர்கள், சிறார்கள் என்ற அனைவரும் 365 நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
புத்தாடைகள் அணிந்து சுப முகூர்த்தங்களுக்கு முன்னுரிமையளித்து நாடு முழுவதும் ஒரே நேரத்தில் ஒரே விடயத்தை மேற்கொள்ளும் புத்தாண்டானது, இலங்கை கலாசாரத்திலே ஒற்றுமையை எடுத்துக் காட்டும் சிறந்த காரணியாகும்.
இந்த பழக்க வழக்கங்களை நினைவு கூருவதற்குக் கூட சுதந்திரமொன்று காணப்படாத ஒரு யுகத்தை நாம் கழித்து வந்துள்ளோம். சாபத்திற்குள்ளான பயங்கரவாத கெடுபிடிகளை இல்லாதொழி த்து சுதந்திரத்தினைப் பெற்றுக்கொண்ட நாட்டிலே கொண்டாடப்படும் இந்த சிங்கள, தமிழ் புத்தாண்டானது, முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு வெகு விமரிசையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
30 ஆண்டுகளின் பின்னர் முழு இலங்கையிலும் சிங்கள, தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து இலங்கை முழுவதிலும் சுதந்திரமாகக் கொண்டாடப்படும் இந்த புத்தாண்டானது அனைத்து வழிகளிலும் புதிய ஆரம்பமொன்றினை பிரதிபலிக்கச் செய்யும் ஒரு நாளாகக் காணப்படுகின்றது.
உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் எனவும் பிரதமர் தமது வாழ்த்துக் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

TUESDAY, APRIL 13, 2010

ராய்ட்டர்ஸ் புகைப்படக்காரர் சுட்டுக் கொல்லப்பட்டார்
பேங்காக்
தாய்லாந்து ராணுவப் படையினருக்கும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர் களுக்கும் இடையில் சனிக்கிழமை நடந்த கடுமையான மோதலில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தொலைக் காட்சிப் புகைப்படக்காரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
ஜப்பானிய நாட்டவரான 43 வயது ஹிரோ முராமோட்டோ நெஞ்சில் சுடப்பட்டிருந்தார். கிளாங் மருத்துவமனைக்கு அவர் கொண்டுவரப்பட்டபோது நாடித்துடிப்பு இல்லை என்று மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் பிச்சாயா நக்வட்சாரா தெரிவித்தார்.
தோக்கியோவிலுள்ள ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் 15 ஆண்டு களுக்கும் மேலாக வேலை செய்துவரும் முரா மோட்டோவுக்கு மணமாகி இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
“பேங்காக் மோதலில் எங்களது சக ஊழியர் ஹிரோ முராமோட்டாவை இழந்ததில் பெருந்துயரம் அடைகிறேன். செய்தித்துறை மிகவும் ஆபத்தான தொழி லாகும். ராய்ட்டர்ஸ் குடும்பம் முழுவதும் இத்துயரத்தை நினைத்து வேதனைப்படுகிறது” என்று ராய்ட்டர்ஸின் தலைமை ஆசிரியர் டேவிட் ஷ்லிசிங்கர் கூறினார்.
ராஜ்தம்னோன் சாலை யில் ராணுவப் படைக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் நடந்த சண்டையை முரா மோட்டோ படமெடுத்துக் கொண்டிருந்தபோது, ராணுவத்தினர் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தி சுட்டதோடு, உண்மையான தோட்டாக்களை விண்ணை நோக்கியும் சுட்டனர்.
முராமோட்டோவின் நெஞ்சில் பாய்ந்த தோட்டா அவரது முதுகின் வழி வெளியேறிவிட்டது. அதனால் அவரைத் தாக்கியது எந்த வகை தோட்டா என்பது தெரியவில்லை என மருத்துவமனை இயக்குநர் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் துப்பாக்கிகள் வைத்திருந்த தாகவும், பெட்ரோல் குண்டுகளையும் கையெறி குண்டுகளையும் ராணுவத் தினர் மீது வீசியதாகவும் ராணுவப் பேச்சாளர் கூறினார்.

TUESDAY, APRIL 13, 2010

காலாவதியான உணவுப் பொருள் விற்பனை; கண்டுபிடிக்க தேடுதல்

பாவனைக்குதவாத மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் ஹோட்டல்களை கண்டு பிடிக்க தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை பொது சுகாதார பிரிவு தெரிவித்தது. புறக்கோட்டை மற்றும் கொழும்பிலுள்ள பிரதான இடங்களில் இத்தகைய தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொது சுகாதாரப் பரிசோதகர் டபிள்யூ. ரி. கருணாதிலக கூறினார்.
பண்டிகைக் காலத்தில் அதிகமாக காலாவதியான மற்றும் பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கூடுதலாக விற்கப்படுவதனால் தேடுதல் நடவடி க்கைகளை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதுவரை 20ற்கும் அதிகமான விற்பனை நிலையங்கள் பிடிப்பட்டுள்ளன. அங்கு விற்கப்பட்ட பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கேக், பிஸ்கட், குளிர்பானங்கள் என்பன காலாவதியான பின்னரும் விற்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

TUESDAY, APRIL 13, 2010


கொழும்பிலிருந்து விசேட கண்காணிப்பு குழுவை அனுப்ப ஏற்பாடு; 380 உத்தியோகத்தர்கள் கடமையில்
கண்டி, திருகோணமலை மாவட்டங்களி லுள்ள 38 வாக்களிப்பு நிலையங்களில் மோசடி இடம்பெற்றதனால் அப்பகுதிகளு க்கான மீள் வாக்களிப்பு எதிர்வரும் 20 ம் திகதி நடைபெறவுள்ளது. மீள் வாக்குப் பதிவை கண்காணிப்பதற்காக கொழும்பிலி ருந்து விசேட குழுவொன்றை அனுப்புவத ற்கு தேர்தல்கள் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக செயலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதேவேளை மீள்வாக்குப் பதிவுக்கென வாக்காளர்களுக்கு புதிதாக வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணி ஆரம் பிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் 19ம் திகதிக்கு முன்னர் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டு விடும் எனவும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியைச் சேர்ந்த 37 வாக்க ளிப்பு நிலையங்களுக்கும் திருமலை மாவ ட்டத்தின் கும்புறுபிட்டியிலுள்ள வாக்களிப்பு நிலையத்துக்குமே எதிர்வரும் 20 ம் திகதி மீள்வாக்குப் பதிவு நடத்தப்படவு ள்ளது.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மேற்படி வாக்களிப்பு நிலையங்களில் மீள்வாக்குப் பதிவை நடத்த தேர்தல்கள் திணைக்களம், திட்டமிட்டுள்ளதுடன் எதிர்வரும் 20ம் திகதி தேர்தல் கடமையில் ஈடுபடுவதற்காக 380 உத்தியோகத்தர்களை நியமித்திருப்பதாகவும் அவ்வதிகாரி கூறினார்.

Monday, April 12, 2010

பாராளுமன்றம் 22ம் திகதி கூடியதும் சபாநாயகர் தெரிவு

Sunday, 11 April 2010

புதிய அமைச்சரவை எதிர்வரும் 22ஆம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும். அமைச்சர்கள் நியமிக்கப்படாத நிலையில் திட்டமிட்டபடி 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் சபாநாயகர் தெரிவு இடம்பெறும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி செயலாளர் சுசில் பிரேம் ஜெயந்த் தெரிவித்தார்.

தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் மற்றும் கண்டி, திருகோணமலை மாவட்ட உறுப்பினர்கள் அடங்கலாக ஐ. ம. சு. முன்னணிக்கு 143 ஆசனங்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

ஐ. ம. சு. முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (11) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. அவர் மேலும் கூறியதாவது,

நாவலப்பிட்டியிலும் திருகோணமலையிலும் 20ஆம் திகதி மீளத் தேர்தல் நடைபெறுவதால் பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரமடங்கிய வர்த்தமானி அறிவித்தல் தாமதமடைகிறது. தேசியப் பட்டியல் எம். பிக்களின் நியமிப்பும் தாமதமாகியுள்ளது- 21ஆம் திகதி இரு மாவட்ட முழு முடிவுகளும் வெளியிடப்பட்டு வர்த்தமானி அறிவித்தலும் தேர்தல் ஆணையாளரினால் அன்றே வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறோம்.

அமைச்சரவை நியமிப்பது குறித்து ஜனாதிபதி ஆராய்ந்து வருகிறார். அமைச்சர்கள் நியமிக்கப்படாத நிலையிலே புதிய பாராளுமன்றம் கூடும்.

தேசியப் பட்டியலின் மூலம் எமக்கு 17 ஆசனங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். சபாநாயகராக யாரை நியமிப்பது என ஆளும் கட்சி எம்.பி.க்கள் கூடி முடிவு செய்வர் என்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி செயலாளர் மைத்திரிபால சிரிசேன கூறியதாவது,

பிரதமராக யாரை நியமிப்பது என்பது குறித்து ஜனாதிபதி முடிவு செய்வார். கட்சியில் இதற்குத் தகுதியானவர்கள் பலர் உள்ளனர்.

அவர்களில் மிகவும் தகுதியானவரை ஜனாதிபதி நியமிப்பார்.

அமைச்சரவையை 35 ஆக மட்டுப்ப டுத்தவே திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டுக்கு சுமையற்றவாறு அமைச்சர் தொகை முடிவு செய்யப்படும். இம்முறை அமைச்சரவையில் புது முகங்களுக்கும் இடமளிக்கப்படும் என்றார்.

டலஸ் அலஹப்பெரும கூறியதாவது:

வரலாற்றில் முதற் தடவையாக ஐ.தே.க. வின் வாக்குப்பலம் 29 வீதமாக குறைந்துள்ளது. 1977 தேர்தலில் சு.க.வுக்கு 8 ஆசனங்கள் மட்டுமே கிடைத்தது. ஆனால் சு.க. 30 வீத வாக்குகளைப் பெற்றது என்றார்.

வாக்காளர்களுக்கு நன்றி

Sunday, 11 April 2010

வாக்காளர்களுக்கு நன்றி
எமதன்புக்குரிய வாக்காளப் பெருமக்களே! நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் எமது கட்சியின் சின்னமான மெழுகுதிரிக்கு வாக்களித்து எம்மை ஊக்கப்படுத்தியுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். அத்துடன் எமது கட்சிக்காக இத்தேர்தலில் கடுமையாக உழைத்த எமது கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் அனுதாபிகளுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தத் தேர்தலில் நாம் பல கட்சிகளுடன் இணைந்து ஓரணியாக நின்று போட்டியிடவே விரும்பினோம். ஆனால் அதற்கான ஒத்துழைப்பைத் தருவதில் பல கட்சிகள் தயக்கம் காட்டின. ஒற்றுமைக்கான எமது முயற்சிகளையும் புறக்கணித்தன. இருப்பினும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் எமது கட்சியும் ஒற்றுமையாகச் செயல்படுவது என தீர்மானித்தோம். அதனடிப்படையில் எமது கட்சியின் பெயரில் நாம் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டோம். இதில் மூன்று தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரும் இணைந்து கொண்டனர். அதே நேரம் வன்னியில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் எமது தோழரொருவரையும் இணைத்துக்கொண்டு போட்டியிட்டது. மேலும் எமது கட்சி திருகோணமலையிலும் போட்டியிட்டது.
இந்த மூன்று மாவட்டங்களிலும் மக்கள் எம்மீது காட்டிய அக்கறையும் ஈடுபாடும் எம்மை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இன்னும் சிறிது காலங்களில் மக்களின் ஒரு சக்திமிக்க இயக்கமாகப் பரிணமிக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பிரமுகர்கள் கூட்டுக் கட்சியல்லää மாறாக மக்கள் புரட்சிகர இயக்கம். வடக்கு கிழக்கு மாகாண ஆட்சிக்கு உயர்ந்தபட்ச அதிகாரப் பகிர்வுக்காகவும்ää மக்களின் ஜனநாயக சுதந்திரங்களுக்காகவும்ää சமூக நீதிக்காகவும்ää பொருளாதார சுரண்டல்களுக்கு எதிராகவும்ää சாதிப்பாகுபாடுகளற்ற சமத்துவத்திற்காகவும் போராடும் இயக்கத்தை வழிநடத்தும் அரசியல் தலைமையே எமது கட்சி.
எமது கட்சி வெற்றிகளைக் கண்டு பெருமிதங் கொண்டதுமில்லை. தோல்விகளைக் கண்டு துவண்டதுமில்லை. கடந்த முப்பது ஆண்டுகளில் எமது கட்சி பல ஆயிரம் தோழர்களையும்ää மிகச் சிறந்த தலைவர்களையும் தமிழ்மக்களின் சுதந்திரத்திற்காகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் தியாகம் செய்திருக்கின்றது. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக எமது சொந்த உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் அரசியல் உறவுகொள்ள முடியாத அளவுக்கு பெரும் இக்கட்டான சூழல்களைக் கடந்து வந்திருக்கின்றது.
இப்போது ஏற்பட்டிருக்கும் பயங்கரவாதம் மற்றும் யுத்த ஆபத்துக்கள் அற்ற சூழலின் காரணமாக எமது கட்சியினர் மக்கள் மத்தியில் சுதந்திரமாகச் சென்று கட்சியின் கொள்கைளையும் திட்டங்களையும் விளக்குவதற்கான நிலைமைகள் ஏற்பட்டிருக்கின்றன. இன்னமும் மக்கள் மத்தியில் இருந்து முற்றாக பயப்படும் போக்குகள் நீங்கவில்லை. மக்கள் மத்தியில் தமது எதிர்காலம் பற்றிய நம்பிக்கையீனங்களும் விரக்திகளும் பரவலாகக் காணப்படுகின்றன. அதிகாரப் பகிர்வு தொடர்பாக மக்கள் மத்தியில் அரசாங்கம் பற்றிய சந்தேகங்கள் உள்ளன.
மக்கள் மத்தியில் நிலவும் எதிர்மறையான உணர்வுகளையும் எண்ணப்பாடுகளையும் நாம் எதிர்வரும் காலங்களில் நீக்கவேண்டும். எமது கட்சி மக்களிடையே ஒரு புதிய நம்பிக்கையை வளர்ப்பதிலும் எதிர்கால முன்னேற்றமான போக்குகளை நோக்கி மக்களை அணிதிரட்டுவதிலும்ää அரசியல் அதிகாரப் பகிர்வுக்கான ஓர் இயக்கத்தை நடாத்துவதிலும் முன்னணி வகிக்கும். மக்கள் அமைப்புக்களை பரவலாகக் கட்டியெழுப்பி பரந்துபட்ட மக்கள் கட்சியாக எழுச்சிபெறும் வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தேர்தல் என்னும் குறுகிய நோக்கம் கொண்ட கட்சியல்லää மாறாக இது ஒரு சமூக அரசியல் இயக்கம். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியோடு இணைந்து ஒரு புரட்சிகர இலட்சிய இயக்கத்தை வலுவாக முன்னெடுக்க முற்போக்கு ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.
சுதந்திரம்ää ஜனநாயகம்ää சகோதரத்துவம்ää சமூகப் பொருளாதார முன்னேற்றம் என்பவையே எமது இலட்சியங்கள். அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான விடுதலையே எமது குறிக்கோள்.

பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

Saturday, April 10, 2010

மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்திற்கு மக்கள் மீண்டும் மீண்டும் அங்கீகாரம்


SATURDAY, APRIL 10, 2010
வரலாற்றுப் புகழ்மிக்க இத் தேர்தல் வெற்றியானது ‘மஹிந்த சிந்தனை’ வேலைத் திட்டத்திற்கு மக்கள் மீண்டும் மீண்டும் வழங்கியுள்ள அங்கீகாரமாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தம் மீதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் கெளரவத்தையும் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, சிறுவர் பரம்பரைக்காக சிறந்ததொரு நாட்டைக் கட்டியெழுப்ப தம்முடன் இணைந்து செயற்பட முன்வருமாறும் சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
ஏழாவது பாராளுமன்றத் தேர்தலில் ஈட்டிக் கொண்டுள்ள மகத்தான வெற்றியையடுத்து விடுத்துள்ள செய்தியிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது:-
தாய் நாட்டுக்கு எதிரான எத்தகைய சக்திகளையும் எதிர்கொண்டு தோல்வியுறச் செய்யக் கூடிய வகையிலான பலம்மிக்க பாராளுமன்றத்தைப் பெற்றுத்தருமாறு இலங்கை மக்களாகிய உங்களிடம் நான் கோரினேன். அதற்கிணங்க மூன்று தசாப்த விகிதாசாரத் தேர்தல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க வெற்றியை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குப் பெற்றுக்கொடுத்துள்Zர்கள். பெற்றுக்கொண்டுள்ள இம் மாபெரும் வெற்றியானது மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்துக்கு மீண்டும் மீண்டும் நீங்கள் வழங்குகின்ற அங்கீகாரமென்றே நான் கருதுகின்றேன்.
இதன் மூலம் இலங்கை மக்களாகிய நீங்கள் தாய் நாட்டுக்கான புனிதமான பொறுப்பினை நிறைவேற்றியுள்Zர்கள். அத்துடன் என் மீதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மீதும் நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் கெளரவத்தையும் பாதுகாப்பதற்கு நாம் கடமைப்பட் டுள்ளதுடன் இவ்வரலாற்று மக்கள் ஆணையை உலகின் முன்மாதிரியான நாடாக இலங்கையைக் கட்டியெ ழுப்புவதற்கான உன்னதமான பயணத்தின் முக்கியம் வாய்ந்ததொன்றாகவும் நான் கருதுகின்றேன்.
இலங்கையின் சிறுவர் பரம்பரைக்காக சிறந்ததொரு நாட்டை கட்டியெழுப்புவதே இவ்வெற்றியின் மூலம் தெரிவாகும் பாராளுமன்ற உறுப்பினர்களின் முக்கிய பொறுப்பாக வேண்டும். அத்தகைய உன்னதமான நோக்கத்திற்காக கைகோர்க்குமாறு சகல அரசியல் கட்சிகள் மற்றும் நாட்டு மக்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
அத்தோடு தோல்வியடைந்தவர்க ளின் மனதைப் புண்படுத்தாது ஈட்டி க்கொண்டுள்ள வெற்றியை அமைதி யுடன் கொண்டாடு மாறும் கேட்டு க்கொள்கின்றேன்.
இத்தகைய வரலாற்று வெற்றியினைப் பெற்றுத் தந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் தேர்தலை சிறப்பாக நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த தேர்தல் ஆணையாளருக்கும் சகல அரச உத்தியோகத்தர்களுக்கும் பொலிஸ் மற்றும் இராணுவத்தினருக்கும் தேர்தலில் போட்டியிட்ட சகல கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கும் பொறுப்புடன் செயற்பட்ட சகல ஊடகங்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரி வித்துள்ளார்.

Friday, April 9, 2010

FRIDAY, APRIL 09, 2010பொதுத் தேர்தல் 2010மாவட்ட முடிவுகள்

கட்சி கட்சி முழுப் பெயர்
ஐ.ம.சு.கூ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
ஐ.தே.க ஐக்கிய தேசியக் கட்சி
இ.த.அ.க இலங்கைத் தமிழரசுக் கட்சி
ஜ.தே.கூ ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு


மாவட்டம் ஆசனங்கள் தேர்தல் மாவட்ட முடிவுகள்
அநுராதபுரம்
08 ஐ.ம.சு.கூ 221,204 7
ஐ.தே.க 80,360 2

66.52% 24.17%
-------------------------------------------------------------------------------------------------
பதுளை
07 ஐ.ம.சு.கூ 203,689 6
ஐ.தே.க 112,886 2

58.25% 32.28%
-------------------------------------------------------------------------------------------------
மட்டக்களப்பு
04 இ.த.அ.க 66,235 3
ஐ.ம.சு.கூ 62,009 1
ஐ.தே.க 22,935 1

36.67% 34.33% 12.70%
-------------------------------------------------------------------------------------------------
கொழும்பு
18 ஐ.ம.சு.கூ 480,896 10
ஐ.தே.க 339,750 7
ஜ.தே.கூ 110,683 2

51.19% 36.17% 11.78%
-------------------------------------------------------------------------------------------------
திகாமடுல்ல
06 ஐ.ம.சு.கூ 132,096 4
ஐ.தே.க 90,757 2
இ.த.அ.க 26,895 1

51.41% 35.32% 10.47%
-------------------------------------------------------------------------------------------------
காலி
09 ஐ.ம.சு.கூ 305,307 7
ஐ.தே.க 120,111 2
ஜ.தே.கூ 33,663 1

66.17% 26.03% 7.3%
-------------------------------------------------------------------------------------------------
கம்பஹா
17 ஐ.ம.சு.கூ 589,476 12
ஐ.தே.க 266,523 5
ஜ.தே.கூ 69,747 1

63.37% 28.65% 7.5%
-------------------------------------------------------------------------------------------------
அம்பாந்தோட்டை
06 ஐ.ம.சு.கூ 174,808 5
ஐ.தே.க 83.027 2

62.87% 29.86%
-------------------------------------------------------------------------------------------------
யாழ்ப்பாணம்
08 இ.த.அ.க 65,119 5
ஐ.ம.சு.கூ 47,622 3
ஐ.தே.க 12,624 1

43.85% 32.07% 8.50%
-------------------------------------------------------------------------------------------------
களுத்துறை
09 ஐ.ம.சு.கூ 313,836 7
ஐ.தே.க 139,596 2
ஜ.தே.கூ 36,722 1

63.68% 28.32% 7.45%
-------------------------------------------------------------------------------------------------
கண்டி
11




-------------------------------------------------------------------------------------------------
கேகாலை
08 ஐ.ம.சு.கூ 242,463 7
ஐ.தே.க 104,975 2

66.89% 28.95%
-------------------------------------------------------------------------------------------------
குருணாகலை
14 ஐ.ம.சு.கூ 429,316 10
ஐ.தே.க 213,713 5

63.84% 31.78%
-------------------------------------------------------------------------------------------------
மாத்தளை 04 ஐ.ம.சு.கூ 131,069 4
ஐ.தே.க 55,737 1

66.96% 28.47%
-------------------------------------------------------------------------------------------------
மாத்தறை
07 ஐ.ம.சு.கூ 213,937 6
ஐ.தே.க 91,114 2

65.31% 27.81%
-------------------------------------------------------------------------------------------------
மொனராகலை
04 ஐ.ம.சு.கூ 120,634 4
ஐ.தே.க 28,892 1

75.64% 18.12%
-------------------------------------------------------------------------------------------------
நுவரெலியா
06 ஐ.ம.சு.கூ 149,111 5
ஐ.தே.க 96,885 2

56.01% 36.39%
-------------------------------------------------------------------------------------------------
பொலொன்னறுவ
04 ஐ.ம.சு.கூ 118,694 4
ஐ.தே.க 45,732 1

69.22% 26.67%
-------------------------------------------------------------------------------------------------
புத்தளம்
07 ஐ.ம.சு.கூ 167,769 6
ஐ.தே.க 81,152 2

64.83% 31.36%
-------------------------------------------------------------------------------------------------
இரத்தினபுரி
09 ஐ.ம.சு.கூ 305,327 7
ஐ.தே.க 125,076 3

68.86% 28.21%
-------------------------------------------------------------------------------------------------
திருகோணமலை 03


------------------------------------------------------------------------------------------------


வன்னி 05 இ.த.அ.க 41,673 3
ஐ.ம.சு.கூ 37,522 2
ஐ.தே.க 12,783 1

38.96% 35.07% 11.95%

முதலாவது தேர்தல் முடிவு வெளியாகியதுFRIDAY, APRIL 09, 2010


மாத்தறை மாவட்டத்தின் தபால்மூல வாக்கெடுப்பு முடிவுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளன.

ஐ.ம.சுமு – 10,560 வாக்குகள்

ஐ.தே.க – 3,041 வாக்குகள்

ஜ.தே.கூ - 1,439
-------------------------------------------------------------------------------------
இரத்தினபுரி மாவட்டத்தின் தபால்மூல வாக்கெடுப்பு முடிவுகள்


ஐ.ம.சு.மு – 11,315 வாக்குகள்

ஐ.தே.க – 3,010 வாக்குகள்

ஜ.தே.கூ - 696 வாக்குகள்
-------------------------------------------------------------------------------------
தேர்தல் முடிவு , மட்டக்களப்பு மாவட்டம் தபால் வாக்குகள்
விடுதலைமுன்னணி 2,254 37.13%
ஐக்கிய தேசிய கட்சி 671 11.05%
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் 318 5.24%
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 141 2.32%
ஈழவர் ஜனநாயகமுன்னணி 30 0.49%
ஜனநாயக தேசிய முன்னணி 17 0.28%

-------------------------------------------------------------------------------------------------

Thursday, April 8, 2010

THURSDAY, APRIL 08, 2010


நாடாளுமன்றத் தேர்தலில் 51-55 வீத வாக்குப்பதிவு

இலங்கையின் ஏழாவது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தலில் 51 முதல் 55 வீதமான வாக்குப் பதிவுகள் இடம்பெற்றள்ளதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் மத்திய நிலையம் தெரிவித்தது.
அந்நிலையத்தின் இணைப்பாளர் ஹஜ்மிர் சற்றுமுன்னர் இத்தகவலை எமக்கு உறுதிப்படுத்தினார்.
ஏனைய கண்காணிப்பு நிலையங்களின் தகவலின் படி 55 வீதத்துக்கும் குறைவான வாக்குப்பதிவுகளே இடம்பெற்றிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளன.
நாடாளுமன்றத்துக்கு 196 உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு 22 மாவட்டங்களில் 7620 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். பதிவு செய்யப்பட்ட 336 கட்சிகளும் 301 சுயேட்சை கட்சிகளும் தேர்தல் களத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

வன்னியில் அமைதியான முறையில் தேர்தல்

வன்னித் தேர்தல் தொகுதியில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றிருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் இன்று தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வன்னித் தேர்தல் தொகுதியில் 26 சதவீதமான மக்கள் வாக்களித்திருக்கும் அதேவேளை, இடம்பெயர்ந்த மக்கள் 52 வீதமான வாக்களிப்பினை செலுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.
வன்னித் தேர்தல் தொகுதியில் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவிருப்பதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் இன்று குறிப்பிட்டார்

யாழ் மாவட்டத்தில் மந்தகதியில் வாக்களிப்பு

யாழ் மாவட்டத்தில் தேர்தல் வாக்களிப்பு வீதம் மந்தகதியில் இடம்பெற்றுவருவதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுவரையில் 11 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றிருப்பதாகவும் தேர்தல் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நண்பகல் கடந்துவிட்ட நிலையிலும் கூட வாக்களிப்பில் சுறுசுறுப்பு காணப்படவில்லை எனவும் யாழ் செய்திகள் குறிப்பிடுகின்றன

புத்தளத்தில் 33 வீதமான வாக்குப்பதிவு


புத்தளம் மாவட்டத்தில் இதுவரையில் 33 வீதமான வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளது.
அசம்பாவிதங்கள் ஏதுமின்றி தேர்தல் அமைதியான முறையில் இடபெற்றுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன
.

யாழ் மாவட்டத்தில் 15 சதவீத வாக்குப்பதிவு


யாழ் மாவட்டத்தில் 15 சதவீதமான வாக்குப் பதிவுகள் இடம்பெற்றிருப்பதாக யாழ் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையக அலுவலகச் செய்திகள் தெரிவித்துள்ளன.
தற்போது வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்படும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதுடன், பாதுகாப்பு ஏற்பாட்டுடன் நிலையத்திற்கு வாக்குப் பெட்டிகள் எடுத்துச்செல்லப்படவிருப்பதாகவும் உதவித் தேர்தல் ஆணையக அலுவலகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இதேவேளை, இன்று மாலை 6 மணியளவில் தபால்மூல வாக்களிப்புக்கள் எண்ணப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது
.

Followers

Blog Archive