
இந்திய கடல் எல்லையில் இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றில் மத்திய அரசாங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
இலங்கைக் கடற்பரப்பில் வைத்து இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்திய மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு நீதிமன்ற விடுத்த உத்தரவினை மத்திய அரசாங்கம் உரிய முறையில் அமுல்படுத்தவில்லை எனத் தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு விசாரணைகளில் இந்திய மத்திய அரசாங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
இந்திய கடற்பரப்பில் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியமைக்கான ஆதாரங்கள் கிடையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சர்வதேச கடல் பரப்பில் இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் தொடர்ச்சியாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment