அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு விசேட சீருடைகள் வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவினருடன் வேறும் நபர்கள் இணைவதனை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் தெரிவித்துள்ளார்.
அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவினருக்கு சீருடைகளை வழங்கும் திட்டம் குறித்து அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு காவல்துறை மா அதிபர் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, அமைச்சுப் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு சீருடைகளை வழங்குவதனால் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படக் கூடிய வாய்ப்பு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நீண்ட நேரத்திற்கு காவல்துறை சீருடையில் கடமையாற்றுவது நடைமுறைச் சாத்தியமற்றது என சுட்டிக்காட்டியுள்ளனர். எவ்வாறெனினும், புதிய சீருடையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment