
பொலிஸாரிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய சேவையை கூடியளவு பெற்றுக்கொள்ளவேண்டுமாயின் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நல்ல புரிந்துணர்வு ஏற்படவேண்டும். எதிர்காலத்தில் சட்டத்தை கையிலெடுத்து எவரும் செயற்படுவதற்கு உரிமையில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
240 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தங்காலை பொலிஸ் நிலையத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சட்டத்தை செயற்படுத்துவது பொலிஸாரின் பொறுப்பாகும். பொலிஸாருடன் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு பலரும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அதற்கு ஒருபோதும் இடமளிக்ககூடாது என்றார்.
No comments:
Post a Comment