
சர்வதேச நீதிமன்றங்களில் இலங்கைக்கு எதிராக எத்தனை வழக்குகளை தொடுத்தாலும் அவை அத்தனையையும் எதிர்கொள்ள இலங்கை ஒரு போதும் அஞ்சப்போவதில்லை. மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு தேவையான அனைத்துச் சட்ட உதவிகளையும் பாதுகாப்பையும் அரசாங்கம் வழங்கும் என்று முன்னாள் சட்ட மா அதிபரும் அமைச்சரவை ஆலோசகருமான மொஹான் பீரிஸ் தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிராக வழக்கு தொடரும் நாடுகளுக்கு நாமும் நல்ல பாடங்களை புகட்டுவோம். விரைவில் “அந்நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மீறல் சம்பவங்களை அதே சர்வதேச நீதிமன்றில் முன்வைத்து வழக்கு தொடருவோம் என்று அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மொஹான் பீரிஸ் மேற்கண்டவாறு கூறினார்.
No comments:
Post a Comment