
புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர், சர்வதேசம் இலங்கை மீது யுத்தக்குற்றச்சாட்டுகளை சோடித்துள்ளதாக ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 66 வருடாந்த மாநாட்டில் நேற்று உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பிலான முழுமையான விசாரணையை நடத்த, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை வலியுறுத்துகிறது.
இந்த நிலையில், இது தொடர்பில் தமக்கு ஆதரவாக இருக்கும்படி, ஜனாதிபதி சர்வதேசத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
30 ஆண்டுகளாக நிலவிய யுத்தம் நிறைவடைந்துள்ளது.
தற்போது இலங்iயில் அனைத்து பகுதிகளிலும் அனைத்து மக்களும் சமாதானமாக அச்சமின்றி வாழ்கின்றனர்.
புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், தற்போது ஐக்கியமானதும், வினைத்திறன் கூடியதுமான நாட்டை கட்டியெழுப்பு முயற்சிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்து 30 மாதங்கள் ஆகின்றன.
தற்போது 95 சதவீதமான இடம்பெயர்ந்த மக்கள் சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளனர்.
நாடு சிறந்த வாழ்க்கைச் சூழலை கொண்டுள்ளது.
இந்த நிலையில், வடக்கில் குறைந்த எண்ணிக்கையான இராணுவத் தரப்பினரே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எமது நண்பர்களான சர்வதேசம், எங்களை இறைமை மிக்க நாடாக செயற்பட ஒத்துழைக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
No comments:
Post a Comment