
சர்வதேச சிறைச்சாலைகள் தினம், இலங்கையில் 11ஆவது தடவையாக இன்று கொண்டாடப்படுகிறது. நாடு பூராகவும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறைச்சாலைகள் தினத்தின் பிரதான வைபவம் மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் நாடு முழுவதிலுமுள்ள சிறைக்கைதிகளால் நிர்மாணிக்கப்பட்ட பொருட்களைக் கொண்ட கண்காட்சியொன்று மூன்று தினங்கள் மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment