
மத்திய அமெரிக்க நாடான எல் சலவடோருடன் இராஜதந்திர ரீதியான உறவுகள் ஏற்படுத்திக்கொள்ளப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
எல் சல்வடோருடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் முன்வைத்த யோசனைத் திட்டத்தை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக எல்சல்வடோருக்கும் இலங்கைக்கும் இடையில் வர்த்தகத் தொடர்புகள் பேணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கோப்பி, பதப்படுத்தப்பட்ட உணவு, தைக்கப்பட்ட ஆடைகள், தங்கம் மற்றும் எதனோல் போன்ற பொருட்களை எல் சல்வடோர் ஏற்றுமதி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இருநாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர ரீதியான உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் பொருளாதார ரீதியான நன்மைகளை அடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மரக்கறிவகைகள், வாசனைத் திரவியங்கள் போன்றவற்றை எல்சல்வடோருக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் காலங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
No comments:
Post a Comment