
இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரியும் தற்போதைய வெளிநாட்டு இராஜதந்திரியுமான மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மீது சுவிட்ஸர்லாந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வழக்குத் தாக்கல் செய்துள்ள நிலையில் இராஜதந்திர ரீதியில் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாதென ஜெர்மனிக்கான இலங்கைத் தூதுவர் ரீ.பீ.மடுவேகெதர தெரிவித்துள்ளார்.
ஜெர்மனிக்கான இலங்கையின் பதில் தூதுவராக செயற்பட்டு வரும் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மீது சுவிட்ஸர்லாந்தின் பொது நிர்வாக அமைச்சில் யுத்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
புலிகள் இயக்கத்துடனான யுத்தம் நிறைவுக்கு வந்தப் பின்னர் ஜெகத் டயஸ் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார். அதன் பின்னர் ஜெனர்மன் மற்றும் சுவிட்ஸர்லாந்துக்கான பதில் தூதுவராக செயற்பட்டு வருகின்றார்.
ஜெகத் டயஸ் இராஜதந்திர மட்டத்தில் தொழிற்படுவதால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என ஜெர்மனிக்கான இலங்கைத் தூதுவர் ரீ.பீ.மடுவேகெதர பீபீசியிடம் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின்போது 57வது படைபிரிவிற்கு கட்டளையிடும் அதிகாரியாகக் கடமையாற்றி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், யுத்தக் குற்றம் புரிந்தார் என சுவிட்ஸர்லாந்தின் தொலைக்காட்சி சேவையொன்று அண்மையில் காணொளி ஒளிபரப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment