
65 உள்ளூராட்சி சபைகளுக்கு நாளை 12ம் திகதி தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவிருக்கின்றது. இத்தேர்தலில் 60 ஆயிரத்து 643 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக தேர்தல் செயலக அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார். இந்த தபால் மூல வாக்களிப்பை கண்காணிக்கும் பணியில் நூறு தொண்டர்களை ஈடுபடுத்தவிருப்பதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோகன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார். தபால் மூல வாக்களிப்பை அமைதியாகவும், நீதியாகவும் நடத்துவதற்கு தேவையான சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தேர்தல்களுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் பி.கே. காமினி நவரட்ண கூறினார்.
பிரதி பொலிஸ் மா அதிபர் நவரட்ன மேலும் கூறுகையில், ஒரு மாநகர சபை, 9 நகர சபைகள், 55 பிரதேச சபைகள் அடங்கலான 65 உள்ளூராட்சி சபைகளுக்கு நாளை தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவிருக்கின்றது. இதற்கென தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள 28 பொலிஸ் பிரிவுகளிலுள்ள 108 பொலிஸ் நிலையப் பகுதிகளிலேயே இத்தேர்தல் நடைபெறுகின்றது.
No comments:
Post a Comment