
பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ உள்ளிட்ட உயர் பாதுகாப்பு அதிகாரிகள் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இராணுவ, கடற்படை மற்றும் வான் படை உயரதிகாரிகளும் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தலைமையிலான உயர் மட்ட இராஜதந்திரிகள் குழு ஒரு வார காலம் தங்கியிருந்து சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரு தரப்பு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளல் தொடர்பில் இந்த விஜயத்தின் போது கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
புலிகளுக்கு எதிராக யுத்தம் நடைபெற்ற காலத்தில் இலங்கைக்கு அதிகளவு இராணுவத் தளவாடங்களை சீனா வழங்கியிரந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment