
இலங்கை தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்கென ஐக்கிய நாடுகள் செயலாளரினால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய நிபுணர் குழு அடுத்த வாரத்துக்குள் நியூயோர்க்கில் கூட எண்ணியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கின்றது.
தமது அமைப்பின் இலங்கைக்கான வதிவிட இணைப்பதிகாரி நீல் பூனே தற்போது நியூயோர்க்கில் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரின் ஊடகப் பேச்சாளர் ஃபர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
நிபுணர் குழு அடுத்த வாரத்துக்குள் நியூயோர்க்கில் கூடவுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதுவரை உறுதியான திகதி நிர்ணயிக்கப்பட்டவில்லையெனக் கூறினார்.
நீல் பூனே தற்போது நியூயோர்க்கில் தங்கியிருப்பதாகவும், அவர் ஐக்கிய நாடுகள் அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்றுவருவதாகவும் ஃபர்ஹான் ஹக் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment